Tagged: Daily manna

மண்ணகம் – இறைவனின் பிரசன்னம்

உலகம் என்பது கடவுளின் படைப்பு மட்டுமல்ல, கடவுளின் பிரசன்னம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய இடம். இந்த உண்மையை இயேசு தனது போதனையின் வாயிலாக எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் போதனை, அறிவுப்பூர்வமாக, அறிவில் சிறந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துச்சிந்தனைகள் நிறைந்ததாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் விதைகளை வைத்து இயேசு அருமையானச் செய்தியைத் தருகிறார். பொதுவாக, விண்ணகத்தை, பூமியோடு ஒப்பிடுகிறபோது, மண்ணகம் ஒன்றுமே இல்லாததுபோல, மண்ணகத்தை வெறும் ஒரு படைப்பு போல பார்க்கக்கூடிய நிலை, நம்மிடமே உள்ளது. ஆனால், இயேசுவின் போதனையில் உள்ள கருத்துக்களைப்பார்த்தால், எந்த அளவுக்கு மண்ணகம் கடவுளின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளது என்பதும், மண்ணகம் கடவுளின் வெறும் படைப்பு மட்டுமல்ல, அது இறைவன் வாழும் ஆலயம் என்பதும் நமக்குப்புலப்படும். இன்றைக்கு கடவுளின் படைப்பான இந்த பூமி, சிலபேரின் சுயநலத்திற்காக சிதைக்கப்படுவது கொடுமையானது. இந்த பூமி, இறைவனின் பிரசன்னம் தாங்கிய இடம் என்றால், அதை சிதைப்பது,...

உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 1 – 3, 6 – 7, 9 – 10 விருப்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நமது விருப்பத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்கிறோம். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற முடியுமா? எல்லா விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கு தகுதியானதா? நிச்சயம் இல்லை. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். மனம் நினைப்பதையெல்லாம் நாம் நிச்சயம் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றினால் அதில் 90 விழுக்காடு தவறான காரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், அது தன்போக்கில் சென்று, பல தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த நிலையை தாவீது அரசர் அறியாதவரல்ல. அவர் ஏற்கெனவே பத்சேபா விஷயத்தில் அனுபவப்பட்டிருக்கிறார். இந்த திருப்பாடல், உள்ளத்தில் எழுந்திருக்கிற ஒருவிதமான சோதனையை வென்று, மகிழ்ச்சியின் நிறைவில் வெளிப்படக்கூடிய திருப்பாடல். தாவீது அரசருக்கு ஒருவிதமான சோதனை. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நெருடல் மனதிற்குள்ளே அரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது தவறானது என்பதை, அவரது அறிவு...

ஆண்டவரது வியத்தகு செயல்களுக்காய் புதியதோர் பாடல் பாடுங்கள்

திருப்பாடல் 98: 1, 2 – 4, 5 – 6 பாடல் பாடுவது என்பது ஒருவரை மகிமைப்படுத்துவதற்கு சமம். பிறந்தநாளில் ஒருவரைப்பற்றி வாழ்த்த வேண்டும் என்றால், பாடல் வழியாக வாழ்த்துகிறோம். நமது உள்ளத்தில் இருக்கக்கூடிய சிந்தனைகளை, இசைமீட்டி, ஒருவரது சிறப்பையும், நன்றி உணர்வையும் வெளிப்படுத்துகிறோம். திருப்பாடல் ஆசிரியர் புதியதொரு பாடல் பாடச்சொல்கிறார். ஏன்? கடவுள் அந்த அளவுக்கு, வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார். அவர் செய்திருக்கிற செயல்களுக்காக, பாடல் பாடச்சொல்கிறார். கடவுள் என்ன வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார்? இஸ்ரயேல் மக்கள் பெற்ற வெற்றி அனைத்தையும், அவர்கள் தங்களது புயவலிமையினால் பெற்றதாகச் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களால் இயலாத காரியம். தாங்கள் போரிடச் சென்ற பகைநாட்டினா் அனைவருமே, போர்த்தந்திரத்தில் சிறந்தவர்கள். பல போர்களைச் சந்தித்தவர்கள். பல போர்களில் வெற்றிவாகைச் சூடியவர்கள். புதிய போர்முறைகளை அறிந்தவர்கள். இப்படிப்பட்ட வலிமைமிகுந்தவர்களை வெல்ல வேண்டுமானால், நிச்சயம் எதிர்க்கிறவர்கள் அவர்களை விடச்...

இயேசுவின் பணித் திட்ட அறிக்கை !

லூக்கா நற்செய்தியின் தொடக்கத்திலேயே நற்செய்தியாளர் தம் நூலின் இலக்கைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் வாழ்விலும், பணியிலும் தாம் கேட்டறிந்த அனைத்தையும் கருத்தாய் ஆய்ந்து, ஒழுங்குபடுத்தி எழுதுவதாகக் கூறுகிறார் லுhக்கா. அவ்வாறு ஒழுங்குபடுத்தி எழுதிய இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தைத்தான் இன்றைய செய்தியாக நாம் வாசிக்கிறோம். எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கை வாசிக்கும் இயேசு, அந்த இறைவாக்கு தம்மில் அன்று நிறைவேறிற்று என்று அறிவிக்கிறார். லுhக்காவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. எனவேதான், இயேசுவின் பணித்தொடக்கமாக இதை முன்வைத்திருக்கிறார். தான் செய்யவிருக்கும் பணி எத்தகையது என்னும் இலக்குத் தெளிவு இயேசுவிடம் இருந்தது, அதை இயேசு அனைவருக்கும் அறிவித்தபின்னரே, செயல்படத் தொடங்கினார் என்று இந்நிகழ்ச்சியின் மூலம் அறியவருகிறோம். இயேசுவின் தலைசிறந்த தலைமைப் பண்புகளுள் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். தான் செய்யவிருக்கும் பணி என்ன?, யாருக்கு? என்னும் தெளிவு அவரிடம் இருந்தது. நம்மிடம் இருக்கிறதா? மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உமது பணித்திட்ட அறிக்கை...

எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்

தியானப் பாடல் சிந்தனை : திருப்பாடல் 47: 1 – 3, 5 – 6, 7 – 8 இந்த திருப்பாடல் வெற்றி பெற்று மாட்சியுடன் அரியணையில் ஏறும் அரசரைப்பற்றிப் பாடக்கூடிய பாடலாக இருக்கிறது. நிச்சயம் இது மெசியாவின் வருகையில் நடக்கக்கூடிய நிகழ்வாகவே நாம் பார்க்கலாம். திருப்பாடல் ஆசிரியர் பின்னால் நடைபெற இருக்கிற நிகழ்வுகளை, முன்னரே கண்டுணர்ந்து எதிர்காலத்தில் நடைபெற இருக்கிறவற்றை ஆய்ந்து அறிந்து எழுதுகிறார். மெசியா இந்த உலகத்தை ஆள்வதுதான் தகுதியானதாக இருக்கும் என்பது ஆசிரியரின் கருத்து. அதற்காகத்தான் மக்கள் இத்தனை ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மெசியா இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே அரசராக இருப்பார். இந்த உலகத்திற்கே அதிபதியாக இருப்பார். அந்த நாட்களில் நீதியும், நேர்மையும் அரசில் துலங்கும். மக்கள் அனைவரும் நிறைவுடன் வாழ்வர். அந்த நாளை நாம் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்போம் என்பதுதான், இங்கே வெளிப்படுத்தப்படக்கூடிய செய்தி....