Tagged: Daily manna

திறமையானவர்களே தோற்காதீர்கள்…

மாற்கு 9:38-43,45,47-48 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 26ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் நம்மூர் ஆண்மகன்களோ, பார் இல்லாத ஊரில் குடியிருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு குடிப் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. காலையில் 10 மணிக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. காலையிலேயே இவர்கள் இப்படி என்றால், மாலையும், அதையும் தாண்டி இரவிலும் இவர்கள் எப்படி இருப்பார்கள். இது நமது உடலுக்கும் கேடு, நமது வீட்டிற்கும் கேடு என்பதை எப்போது உணர்வார்கள். ஒரு கதை உள்ளது, அதாவது ஒரு தேவதை தனது கையில் ஒரு குழந்தையையும், ஒரு மதுபானப் பாட்டிலையும் வைத்துக் கொண்டு ஒருவனிடம் சென்று, ஒன்று இந்த...

சந்திப்போமா தினமும் சந்திப்போமா

லூக்கா 9:18-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கிறிஸ்தவர்கள் பலர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலும் கிறிஸ்துவை சந்திக்காமலே சாவை சந்திக்கின்றனர். இயேசுவை காணாமலேயே கடந்து போகின்றனர். அதோடு அவர்களுடைய சகாப்தம் முடிவடைகிறது. சீடர்கள் மூன்று ஆண்டுகள் இயேசுவோடு இருந்தாலும் இயேசுவை மெசியா எனக் கண்டுக்கொண்டது பேதுரு மட்டுமே. அவர் மெசியாவைக் கண்டதால் மெசியாவே அவரை மெச்சினார். பேதுரு தன் பிறப்பின் நோக்கத்தை நிறைவு செய்தார். நம்முடைய பிறப்பு எப்போது முழு மகிழ்ச்சியைக் காண்கிறது? நாம் கடவுளை சந்திக்கும்போதுதான். அவரை இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் உயர்வாக பார்த்து அவரை அடைவதில் கருத்தாய் இருக்கும்போதுதான. இயேசுவை சந்திக்க வழிகள் இருக்கிறதா? ஆம் இரண்டு வழிகள் உள்ளன. 1. தினமும்...

பிறர் இயேசுவை தேடி வரும்படி செய்வோம்!

லூக்கா 9:7-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இயேசுவின் நற்செயல்களால் மயங்கிப்போன மக்கள் பல இடங்களில் நன்றி மறவாமல் இயேசுவைப் பற்றி துல்லியமாக அறிவித்தனர். எல்லா இடங்களிலும் இயேசுவின் புகழ்மணம் கமழ்ந்தது. எங்கும் இயேசு என்ற பெயர் ஒலித்தது. ஆகவே இயேசு என்ற பெயரின் அதிர்வலைகளில் பாதிக்கப்பட்ட ஏரோது, இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான். இயேசு என்ற பெயர் எவ்வளவு வல்லமை மிக்கது என்பதை நாம் பிறருக்கு அறிவிக்கவும், நம்முடைய செயல்பாடுகளால் பலர் இயேசுவை தேடி வரும்படி செய்யவும் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது. இரண்டு விதத்தில் இயேசுவை பிறர் தேடி வரும்படி செய்யலாம். 1. பழக்கம் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த நாம் நம்முடைய...

கூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்

லூக்கா 9:1-6 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பயணமாக ஒரு ஊருக்குச் செல்லும் போது பயணத்திற்கு தேவையான பொருட்கள், பணம், உணவு, அலைபேசி மற்றும் அவசியமானவைகள் அனைத்தும் இருக்கிறதா என நன்கு பரிசோதித்துப் பார்ப்போம். அது நல்லது தான். அதைவிட உயர்வாக நாம் போகும் இடத்திற்கு நல்ல குணத்தைக் கொண்டு போகிறோமா என்பதை பெரும்பாலும் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. இன்று அதை சிந்தியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் என சொல்லிக்கொண்டே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மோடு வருகிறது. போகுமிடமெல்லாம் நல்ல குணத்தை கொண்டுச் செல்ல இரண்டு செயல்பாடுகளில் நாம் இறங்க வேண்டும். 1. சிறந்தவைகளை வாசியுங்கள் நல்ல புத்தங்களை வாசிக்க வேண்டும். நம்மை பண்படுத்தும், பதப்படுத்தும் நல்ல அருமையான...

கல்… கடைப்பிடி… கற்றுக்கொடு

லூக்கா 8:19-21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இறைவார்த்தையின் மீதுள்ள நமது ஆர்வம் என்ன என்பதை பரிசோதித்துப் பார்க்கும் வண்ணமாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இறைவார்த்தையை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். இறைவார்த்தையை அதிகம் அன்பு செய்பவர்களே இயேசுவின் உண்மையான உறவினர்கள் என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதிக அழுத்தத்துடன் அறிவிக்கிறார். இயேசுவின் உண்மையான உறவினராக மாற மூன்று பயிற்சிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். 1. கல் இறைவார்த்தையை நன்றாக வாசிக்க வேண்டும். தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு வரை வாசித்திருக்கிறோமா? திருவிவிலியம் தான் நம் ஆன்மாவின் மீட்பிற்கான நூல். ஏன் இன்னும் வாசிக்கவில்லை? திருவிலியத்தை வாசிக்காமால் இயேசுவை நெருங்க முடியாது தெரியுமா? 2. கடைப்பிடி இறைவார்த்தையை...