Tagged: Daily manna

உறவுகளோடு உறவாடுவதில் வித்தியாசம் நல்லதா?

மத்தேயு 12:46-50 நாம் எல்லா உறவுகளையும் சரிசமமாக பார்ப்பதில்லை. அறவே தெரியாதவர்களோடு நம் உறவு என்பது மிகவும் தூரமாக இருக்கும். ஓரளவு தெரிந்தவர்களோடு நமது உறவு ஓரளவு நெருக்கமாக இருக்கும். நண்பர்களோடு நம் உறவு பக்கமாகவே இருக்கும். நம் உடன்பிறப்புகளோடு நம் உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம் அது மிகவே நெருக்கமாக இருக்கும். நம் உறவுகளை வைத்து நம் பழக்கத்தில் வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறோம். இப்படிப்பட்ட வித்தியாசத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதை சிறிது மாற்றலாம் என ஒரு வித்தியாசமான சிந்தனையைக் கொண்டு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள் வருகிறார்கள். அவர்களுடைய வருகையானது அவருக்கு சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது உள்ளம் உயர்ந்து போகவில்லை, குரலில் ஆனந்த சத்தம் கேட்கவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தவில்லை. உறவுகளிலே எல்லாருக்கும் ஒரே முக்கியத்துவத்தை அவர் கொடுத்தார். அவருடைய குடும்பத்திற்கென்று...

நீங்கள் நினைப்பதை விட பெரியவர்

மத்தேயு 12:38-42 பழைய ஏற்பாடு நாம் நினைப்பதை விட கடவுள் மிகவே பெரியவர் என்பதை பல இடங்கிளில் சொல்லித் தருகிறது. தொடக்கநூல் 1:1லே வெறுமையுற்று இருந்த உலகை ஒரே ஒரு வார்த்தையினால் அழகான பூஞ்சோலையாக்கினார். வானிலிருந்து மன்னாவை பொழந்து வியப்புக்குரிய கடவுள் யாவே என்பதை மக்களுக்கு அறிவிக்கிறார். செங்கடலை இரண்டாகப் பிரித்து இஸ்ரயேல் மக்களுக்கான பசுமை வழிச்சாலையாக அதனை மாற்றுகிறார். இப்போது உங்களுக்கு புரிந்ததா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர். புதிய ஏற்பாடு நாம் நினைப்பதை விட இயேசு கிறிஸ்து மிக மிக பெரியவர் என்பதை சொல்லித் தராமல் இல்லை. ஐயாயிரம் பேருக்கு அதிசய உணவளிக்கிறார், காலூனமுற்றவரை காலூன்றி நடக்கச் செய்கிறார். பேச்சிழந்தவரை பேச வைக்கிறார், ஆடையின் விளிம்பைத் தொட்டவர் அதிசயமாய் சுகம் பெறுகிறார். இதைவிட இன்னும் சான்றுகள் நமக்குத் தேவையா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர்....

ஆண்டவரே! நீர் மன்னிப்பவர்

திருப்பாடல் 86: 5 – 6, 9 – 10, 15 – 16 இந்த உலகத்தில் மன்னிக்க முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். மன்னிப்பைப் பற்றி அறியாதவர்களைப் பற்றியோ, அதனை நம்பாதவர்களையோ நாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், திறந்த உள்ளத்தோடு, கடவுளுக்கு பயந்து வாழக்கூடிய, மன்னிப்பதற்கு முயற்சி எடுக்கக்கூடிய மனிதர்களை நாம் சிந்தித்துப்பார்ப்போம். ஒருவேளை நாம் அந்த நிலையில் இருந்தால், நம்முடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது? என்று சிந்தித்துப்பார்ப்போம். மன்னிப்பது எளிதான காரியமா? நிச்சயம் இல்லை. அதனை எல்லாரும் சொல்லிவிட முடியாது. திறந்த உள்ளத்தோடு முயற்சி எடுத்தவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும். அதில் இருக்கிற சிக்கல்களை அவரால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களாகிய நாம் நமக்கெதிராக செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளை மன்னிப்பதற்கு இவ்வளவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு எதிராக நாம் எவ்வளவு தவறுகளைச் செய்கிறோம். அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறோம். வெறுப்புணர்வோடு நடந்து கொள்கிறோம். நன்றியில்லாதவர்களாக இருக்கிறோம்....

எதுக்கு சண்டை? எதுக்கு சச்சரவு?

மத்தேயு 12:14-21 கடவுள் படைத்த உலகம் சண்டையில்லா சத்தமில்லா சந்தோசமான உலகம். அவர் படைத்த அந்த உலகை நல்லது எனக் கண்டார். ஆனால் அவர் நல்லது எனக் கண்ட உலகம் இப்போது நல்லது என்று கூறும் தகுதியை இழந்து நிற்கின்றது. காரணம் என்ன? எங்கும் சண்டை. எங்குப் பார்த்தாலும் சத்தம். சந்தோசமில்லை சங்கடம் தான் அதிகம். சண்டையுடனும் சத்தத்துடனும் சந்தோசமில்லாமல் இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் அமைதியை உருவாக்க ஒவ்வொருவரும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவைப் பற்றி நற்செய்தி வாசகம் ”இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்” என அறிமுகம் செய்கிறது. இயேசுவைப் பின்பற்றி நாமும் சமாதானத்தை உருவாவோம். சச்சரவு இல்லாத சந்தோசமான உலகத்தை சமைப்போம். மனதில் கேட்க… வாழும் குறுகிய காலத்தில் சண்டை எதற்கு? என்னை விட்டு பிரிந்து போன உறவுளில் சமாதானத்தை கொண்டு வருவேன்? மனதில் பதிக்க… இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்....

இரக்கப்படுவோருக்கு இறப்பில்லை

மத்தேயு 12:1-8 மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் இந்த உலகத்தை விட்டு போக விரும்புவதில்லை. இந்த உலகத்திலே நிலையாக வாழ வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருக்கிறது. இறப்பு வேண்டாம் என கடவுளிடம் போரட்டம் நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். இறப்பில்லா வாழ்க்கை வேண்டும் என ஆசைப்படும் அத்தனை பேருக்கும் இன்றைய நற்செய்தி இனிப்புச் செய்தியாக வருகிறது. மனிதர்கள் இறக்காமல் வாழந்துக்கொண்டே இருக்கலாம். தலைமுறைதோறும் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். எப்படி? இரக்க உள்ளம் படைத்தவர்கள் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். அவர்கள் உடல் அழியலாம் ஆனால் அவர்களின் இரக்க உள்ளம் அழிவதில்லை. அவர்களுக்கு இறப்பில்லை. வாழ்நாட்களில் நாம் அரக்கத்தனமாக பல வேளைகளில் நடக்கிறோம். பல வேளைகளில் அமைதியை அழிக்கிறோம். பகைமையை வளர்க்கிறோம். இப்படி வாழ்கிற நாம் வாழ்வதில்லை. இறந்து போகிறோம். இப்படி இருப்பது நல்லதல்ல. இரக்கத்தோடு இருப்போம். இறக்காமல் இருப்போம். மனதில் கேட்க… • நான் அரக்கத்தனமாக இருப்பது எனக்கு அழகா? • இறக்காமல் இருக்க ஆசை இருக்கிறதா?...