Tagged: Daily manna

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்

திருப்பாடல் 68: 1 – 2, 3 – 4, 5 – 6 நேர்மையாளர்கள் யார்? அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைவார்கள்? நேர்மையாளர்கள் என்பவர்கள், கடவுளின் சட்ட திட்டங்களுக்கு தங்களையோ முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறவர்கள். கீழ்ப்படிதலோடு வாழ்கிறவர்கள். தங்கள் மனச்சான்றுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். சுயநலத்தோடு எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். இந்த உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது, மேலே சொல்லப்பட்டிருக்கிற விழுமியங்களோடு ஒரு மனிதர் வாழ்ந்தால், அவர் நிச்சயம் கவலைகொள்வதற்குத்தான் அதிகமான காரணங்கள் நமக்குக் கிடைக்கிறது. பின்னர் எப்படி நோ்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அநீதி இந்த உலகத்தில் இருந்தாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அநீதி செய்கிறவர்களால், தொடர்ந்து அநீதியோடு வாழ முடியாது. அவர்களுக்கும் ஒரு முடிவு வரும். அதுதான் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. அநீதி செய்கிறவர்கள்...

ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழுங்கள்

திருப்பாடல் 47: 1 – 2, 5 – 6, 7 – 8 இது வெற்றியின் பாடல். வெற்றியின் களிப்பில் வெளிப்பட்ட பாடல். உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் களைப்பில் இருந்தாலும், களிப்பை வெளிப்படுத்தும் பாடல். அரசர் ஒருவர் தான் போரில் பெற்ற வெற்றியை இங்கே வெளிப்படுத்துகிறார். கை தட்டி ஆர்ப்பரியுங்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகள், உள்ளத்தில் இருக்கிற மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆரவார ஒலியிடையே பவனி செல்கிறார் என்பது அரியணைக்கு ஏறக்கூடிய காட்சியைக் குறிக்கிறது. அரசர் அரியணையில் அமர்கிறபோது, அனைவருமே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அரசரை வாழ்த்துவார்கள். இப்போது கூட, முக்கியமான பதவியில் இருக்கிறவர்கள், தாங்கள் பதவி ஏற்கிறபோது, அவர்களுக்கான நாற்காலியில் உட்கார்கிறபோது, மற்றவர்கள் தங்களது மகிழ்ச்சியை, கைதட்டல் மூலமாக வெளிப்படுத்துவார்கள். அது மகிழ்ச்சியையும், மரியாதையையும் வெளிப்படுத்துகின்ற அடையாளம். அதுதான், அரியணையில் ஏறுகின்ற அரசருக்கும் கொடுக்கப்படுவதாக இருக்கிறது. அத்தகைய மகிழ்ச்சியை நாமும் நமது வாழ்விலும் இருக்க வேண்டும். நமது வாழ்க்கையில்...

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 நம்முடைய நற்செய்திப்பணி அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும்...

நிலையான, நிறைவான மகிழ்ச்சி

இயேசு கிறிஸ்து ”உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்று சொல்கிறார். கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய நமக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சி பரிசாகக் கிடைக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் பார்ப்போம். 1. கிறிஸ்து தருகிற மகிழ்ச்சி நம்மிடமிருந்து எடுக்கப்படாது. உதாரணமாக, ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அந்த பொருளை வாங்கியும் விடுகிறோம். நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சி எத்தனை காலம் இருக்கும்? ஒருநாள் இருக்கும். ஒரு வாரம் இருக்கும். அவ்வளவுதான். அந்த மகிழ்ச்சி காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், இயேசு தரக்கூடிய மகிழ்ச்சி காலத்திற்கும் நிலைத்து நிற்கும். இயேசு தரக்கூடிய மகிழ்ச்சியின் இரண்டாவது பண்பு 2. நிறைவான மகிழ்ச்சி. முழுமையான மகிழ்ச்சி. ஒரு பொருளை நாம் வாங்குகிறபோது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சி அல்ல. அதைவிட சிறந்த பொருளைப் பார்க்கிறபோது, அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை வாங்கினாலும், நமது மகிழ்ச்சி நிறைவு கொள்வதில்லை. இன்னும்...

தன்னலமில்லாத வாழ்க்கை

திருத்தூதர் பணி 18: 1 – 8 ”உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று, பிற இனத்து மக்கள் நடுவில் தூய பவுல் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கச் செல்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பவுல் ஏதேன்ஸ் நகரில் நற்செய்தி அறிவித்ததைப் பார்த்தோம். ஏதேன்ஸ் நகரில் பவுல் துன்புறுத்தப்பட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு அவர் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது உறுதி. அங்கிருந்து புறப்பட்டு கொரிந்து நகருக்கு வருகை தருகிறார். கொரிந்து நகரம் செல்வமிக்கதும், பிரமாண்டமானதுமாகும். பவுல் மிகச்சிறந்த கல்விமானாக இருந்தாலும், கூடாரம் செய்வது அவரது தொழில். அதனை அவர் ஏளனமாக நினைக்கவில்லை. தான் இவ்வளவு படித்திருக்கிறேன், கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி புதுமைகளைச் செய்கிறேன். எனவே, என்னோடு இருக்கிறவர்கள் எனக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று, அவர் சோம்பேறித்தனம் படவோ, அடுத்தவரின் பணத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தவோ...