Tagged: Daily manna

நல்லதையே ஆண்டவர் அருள்வார்

திருப்பாடல் 85: 8 – 9, 10 – 11, 12 – 13 இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் கடவுளைப் பற்றி பல்வேறு புரிதல்களை வைத்திருந்தனர். அதில் ஒன்று, கடவுள் கண்டிப்புமிக்கவர். தவறுக்கு தண்டனை வழங்கக்கூடியவர். மக்களின் துன்பங்களுக்கு காரணம், அவர்கள் செய்த தவறுகளே. அது கடவுளிடமிருந்து வருகிறது என்று, அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். கடவுள் மக்களை நல்வழிப்படுத்த கண்டிப்புமிகுந்தவர் தான். எப்படி ஒரு தாய், தன்னுடைய குழந்தை நன்றாக வளர, கண்டிப்பு காட்டுகிறாளோ, அதேபோல, நாம் மகிழ்ச்சியாக வாழ கடவுளும் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால், இந்த திருப்பாடல், கடவுளின் கண்டிப்பை விட, கடவுளின் இரக்கமும் அருளும் மிகுதியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கடவுள் எப்போதும் நமக்கு நல்லதை வழங்குவதற்கே விரும்புகிறார் என்று இந்த திருப்பாடல் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் நல்லவர். நன்மைகளைச் செய்கிறவர். நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறவர். கடவுள் எப்போதும் நாம் அழிந்து போக வேண்டும் என்பதை விரும்பக்கூடியவர்...

முழுமையை நோக்கி…

மத் 5: 17-19 திருவிவிலியத்தை இரண்டாகப் பிரித்தோமென்றால் அது (1) பழைய ஏற்பாடு, (2) புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை இரண்டாகப் பிரித்தோமென்றால், (1) முதல் ஐந்து புத்தகங்களான தோரா, இவை அனைத்தும் திருச்சட்டங்களைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. (2) மற்ற அனைத்தையும் இறைவாக்குகளலாக (பல உட்பிரிவுகள் இருந்தாலும்) எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவையனைத்திலும் ஏதோ ஒன்று குறையிருப்பதாகவும், முழுமையைப் பெறுவதற்காக காலம் காலமாகக் காத்திருப்பதையுமே நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறைவைக் கொடுப்பவரே இயேசு. அவரது படிப்பினைகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டோடு இணையும் பொழுதே, ஒரு முழுமையும் நிறைவும் பெறுகிறது. இந்த நிலையை அறிந்து கொள்வது வெறும் முதல் படிநிலைதான். (யூதர்களைச் சற்று சிந்திக்கவும் அவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டை மட்டுமே தமது புனித நூலாகக் கொண்டிருக்கிறார்கள்) அடுத்தநிலை என்னவென்றால் அறிந்தவற்றை அறிக்கையிடுதல், கற்பித்தல். இந்த நிலையில் இருப்பவர்கள் விண்ணகத்தில் சிறியவர்களே....

உமது முக ஒளியை வீசச் செய்யும்

திருப்பாடல் 119: 129 – 130, 131 – 132, 133, 135 திருப்பாடல்களில் மிக நீளமான திருப்பாடல் இந்த திருப்பாடல். இது இருபத்திரெண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், எபிரேய மொழியில் இருக்கிற 22 எழுத்துக்களை இது குறிப்பதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தியும் எட்டு இறைவசனங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இந்த திருப்பாடல்களில் கடவுள் புகழ்ச்சியும், செப மனநிலையும், தீங்கிழைக்கிறவர்களுக்கு எதிரான விண்ணப்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த திருப்பாடல் எந்வொரு குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குமாக எழுதப்பட்டிருக்கவில்லை. இது ஓர் ஆன்ம சிந்தனையை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, இளவயதினற்கான கற்பித்தலுக்காகவும், அவர்கள் கற்றுக்கொள்வதற்கும், மனப்பாடம் செய்வதற்கும் ஏற்றமுறையில் இது அமைந்திருக்கிறது. கடவுளைப்பற்றிய புதிய அனுபவத்தைப்பெற இருக்கும் ஒருவரின் நியாயமான வேண்டுதலாக இந்த திருப்பாடல் அமைந்திருப்பது இதனுடைய சிறப்பு. ”உம் ஊழியன் மீது உமது முக ஒளியை வீசச் செய்யும்” என்கிற வரிகள், மேற்சொன்ன விளக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கடவுளின் அருளைப்பெறுவதற்கான முயற்சியாக இந்த பாடல் வரிகள்...

ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்

திருப்பாடல் 112: 1 – 2, 7 – 8, 9 ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர் யார்? கடவுளை தங்களது வாழ்வில் முதன்மையானவராக ஏற்றுக்கொண்டவர்கள் தான், ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நெருங்கிய உறவு என்று யாராவது இருப்பர். அது நட்பின் அடிப்படையில் அமைந்திருக்கலாம், உறவினராக இருக்கலாம். நமக்கு பிடித்தவர்களாக இருக்கலாம். நம்முடைய வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். வாழ்க்கையில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நாம் அவர்களிடத்தில் ஆலோசனை செய்துதான், முக்கிய முடிவுகளை எடுப்போம். அவர்களிடம் தான், நாம் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்போம். ஆண்டவரில் நம்பிக்கை கொள்வது என்பது, கிட்டத்தட்ட இப்படிப்பட்ட உறவு தான். நமது வாழ்வில் நாம் எதைச்செய்தாலும், கடவுளை நம்பி, கடவுளின் வழிநடத்துதலை நம்பி, அவருடைய எண்ணத்தின் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும் செய்வதுதான், ஆண்டவரிடத்தில் நம்பிக்கை கொள்வது. இப்படி நாம் ஆண்டவரிடத்தில் நம்பிக்கை கொள்கிறபோது, நமக்குள்ளாக முதிர்ச்சி, பக்குவம், தெளிந்த மனநிலை உருவாகிறது. அதைத்தான் இன்றைய...

ஆண்டவரே! நீர் உருவாக்கிய அனைத்தும் உமக்கு நன்றி செலுத்தும்

திருப்பாடல் 145: 10 – 11, 12 – 13, 21 கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே கடவுள் உருவாக்கியவை தான். ஆனால், கடவுளிடமிருந்து பலவற்றைப் பெற்றிருக்கிறவர்கள் நன்றி செலுத்துகிறார்களா? படைப்பு அனைத்தும் கடவுளை நினைத்துப் பார்க்கிறதா? இந்த கேள்விகள் அனைத்தையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கிறபோது, நாம் பெறுகிற பதில் நெருடலாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மனிதர்கள் நன்றி இல்லாதவர்களாக, படைத்தவரை மறக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த திருப்பாடலில், ஆசிரியர் ஒரு நம்பிக்கை விதையை விதைக்கிறார். அதாவது, நிச்சயம் இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் என்றாவது ஒருநாள், கடவுளின் வல்லமையை நினைத்துப் பார்ப்பார்கள். அவருக்கு உரிய மரியாதையை தருவார்கள் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இந்த பாடல் அமைகிறது. ஒன்றை இழந்தால் தான், அதன் அருமை தெரியும் என்பார்கள். பலவற்றை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயற்கையை நமது சுயநலத்திற்காக...