Tagged: தேவ செய்தி

இயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர்

அரசர் என்பவர் யார்? ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? எப்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த உதாரணம். இந்த உலகம் ஏற்றுக்கொள்வது போன்ற அரசர் இயேசு அல்ல. காரணம், அவர் அரசரின் வாரிசு அல்ல. தச்சரின் மகன். போரில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியவரும் அல்ல. ஆனால், மக்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டு, குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நடுவில் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒப்பற்ற அரசர். அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தவர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறபோது, மற்றவருக்கு உதவி செய்ய மனமிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கூட இன்றைக்கு அரிதாகி விட்டார்கள். ஆனால், துன்பத்தில் இருக்கிறதுபோது, தனது உயிரே ஊசலாடிக்கொண்டிருக்கிறபோது, தனது நிலையே மற்றவர்களால் பரிதாபப்படுகிறதுபோல இருக்கிறபோது, ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்கிறார் என்றால், அதுதான் ஒரு அரசரின் உணர்வாக இருக்க வேண்டும். அதுதான் நம்மை ஆளுகிறவர்களின் வாழ்க்கையாக...

கடவுளின் முடிவில்லா ஆட்சி

சதுசேயர்கள் பலவற்றை யூத மதத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறியப்படுவது உயிர்த்தெழுதலை வைத்துதான். உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாமை தான், சதுசேயர்களின் அடையாளமாக இருந்தது. சதுசேயர்களும் யூத மதத்தின் ஒரு பிரிவினர் தான். ஆனால், பரிசேயர்கள் அவர்களை அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பியவர்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பரிசேயர்கள் விவிலியத்தை கடவுளின் வார்த்தையாகவே முழுமையாக நம்பியதால், உயிர்த்தெழுதல் உண்டு என்றே நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசு வழியாக இந்த உவமையைச் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. யூதர்கள் உரோமையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது கி.பி முதல் நூற்றாண்டிலும், எருசலேமையும், அதன் ஆலயத்தையும் அழித்தபோது, ஆயிரக்கணக்கான யூதர்கள் கணக்கின்றி கொல்லப்பட்டனர். உரோமையர்களின் கொலைவெறித்தாக்குதலில் இறந்தவர்கள் கடவுளின் வாக்குறுதிப்படி உயிர்த்தெழுவார்கள் என்கிற நம்பிக்கையை நற்செய்தியாளர் அந்த மக்களுக்கு விதைக்கிறார். இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைக் கொன்றழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த உரோமையர்களுக்கும் சவுக்கடி கொடுக்கும்விதமாக எழுதப்படுகிறது. கடவுள் தன் மக்களுக்கு வாக்களித்த...

இயேசுவின் சமுதாய சீர்திருத்தம்

ஒவ்வொரு யூதரும் ஆண்டிற்கு ஒருமுறை ஆலயவரி செலுத்த வேண்டும். அதற்கு செக்கேல் எனப்படும் நாணயத்தின் பாதி மதிப்பில், இந்த வரியைச் செலுத்த வேண்டும். இது ஒரு தொழிலாளியின் இரண்டு நாள் கூலிக்கு இணையானது. பாஸ்கா திருவிழா கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, இந்த காணிக்கையைப் பிரிப்பதற்காக, ஆங்காங்கே எல்லா நகர வீதிகளிலும், கிராமங்களிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வரிவசூலிக்கப்படும். பெரும்பாலும், யெருசலேமில் பாஸ்கா விழா கொண்டாட வரும் பயணிகள் தான், இதில் அதிக எண்ணிக்கையில் கொடுப்பார்கள். பாலஸ்தீனத்தில் அனைத்து வகையான நாணங்களும் புழக்கத்தில் இருந்தன. கிரேக்க நாணயம், உரோமை நாணயம், சிரிய நாணயம், தீர் நாணயம், எகிப்து நாணயம் என்று, பல நாணயங்கள் இருந்தன. அவைகளுக்கான சரியான மதிப்புகளும் சரியான விகிதத்தில் பாலஸ்தீனத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால், நாணயம் மாற்றுவோருக்கு ஆலயத்தில் என்ன வேலை என்று கேட்கத்தோன்றும்? யெருசலேம் ஆலயத்தில் செலுத்தப்படும், இந்த ஆலய வரி எல்லா நாட்டு நாணயத்திலும் கொடுக்க முடியாது. யெருசலேமில்...

அமைதியின் அரசர் இயேசு

இயேசு தன்னுடைய பணிவாழ்வின் கடைசிப்பகுதியில் இருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் ஓரளவு நிறைவேறி விட்டது. மூன்றாண்டு காலங்களாக மக்களுக்குப் போதித்து வந்திருக்கிறார். புதுமைகள் புரிந்திருக்கிறார். சீடர்களை பயிற்றுவித்திருக்கிறார். எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு. அதுதான், ஒட்டுமொத்த நிகழ்வின் உச்சகட்டம் என்று சொல்லப்படுகின்ற, கிளைமேக்ஸ். ஒரு திரைப்படத்தில் எவ்வளவு நேரம் தான் நாம் செலவிட்டாலும், அதனுடைய முடிவைப் பொறுத்துதான், அந்த திரைப்படம் அமையும். அதுதான் இயேசுவின் வாழ்விலும் நடக்க இருக்கிறது. இப்படியெல்லாம் இயேசு வாழ்ந்திருக்கிறாரே? அவருடைய வாழ்வின் முடிவு எப்படி இருக்கும்? எப்போது எழுதப்படும்? இதுதான் மற்றவர்கள் மனதில் இருக்கிற கேள்வி. அந்த கேள்விகளுக்கான பதில் தரக்கூடிய கடைசிக்கட்டத்தில் இயேசு இருக்கிறார். அதுதான் இந்த கடைசிப்பகுதி. இயேசு மக்களை அமைதியின் வழியில் நடத்த விரும்பினார். தன்னை அமைதியின் அரசராக அவர் வெளிப்படுத்தினார். அவர் கழுதையில் ஏறி, “ஓசான்னா” என்று மக்களின் ஆர்ப்பரிப்போடு வந்தது, இதன் அடிப்படையில் தான்....

வாழ்க்கை என்னும் கொடை

வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த கடவுள் கொடுத்த கொடையைப் பயன்படுத்தி நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுகிறோம், வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றுகிறோம், வாழ்க்கையை எப்படி வாழுகிறோம், என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய சவால். இந்த உவமையில் வரக்கூடிய மினாவை நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசலாம். ஒருவருடைய வாழ்வில் அவருக்கென்று பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகள் வெறுமனே புதைக்கப்பட்டு விடக்கூடாது. மாறாக, அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பயன் கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும். அதைத்தான் இந்த உவமை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம். ~...