Tagged: தேவ செய்தி

Peace and Prosperity

“You will keep in perfect peace him whose mind is steadfast, because he trusts in you.” Isaiah 26:3 When our minds are focused on the love of GOD, we experience indescribable tranquility and peace of mind. When you trust GOD during every day, and through every problem, you will be able to enjoy His peace. By focusing on Jesus Christ and the peace and prosperity that He gives, you are set free from worry because you know that God is in control of your life – therefore no person or circumstances can disturb your tranquility. His love enfolds you and...

பொருள் உணர்ந்து வழிபடுவோம்

எந்தவொரு வழிபாட்டுச்சடங்கையும் அதன் பிண்ணனியோடு, பாரம்பரியத்தோடு, வரலாற்றோடு பொருத்திப்பார்த்தால் தான், அதன் பொருளையும், அதில் இருக்கக்கூடிய முழுமையான அர்த்தத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அல்லது, அதை தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்திப்பகுதியின் பிண்ணனி அறிந்து, நாம் வாசித்தால் அதன் ஆழத்தையும், கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வில், நற்கருணை என்றழைக்கப்படும் இயேசுவின் திருவுடல் தரும், தெய்வீக அருளை நாம் நிறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். இன்றைக்கு, கத்தோலிக்க வழிபாட்டைப் பார்க்கும் எவரும், இயேசுவின் திரு உடலை உட்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை வித்தியாசமாகத்தான் பார்ப்பர். காரணம், ஒரு மனிதனுடைய உடலை உண்ணும் பழக்கம், நமது பண்பாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு மனிதன் தனது சதையை எப்படி மற்றவர்கள் உண்ணக் கொடுக்க முடியும்? ஒரு மனிதனுடைய இரத்தத்தை, மற்ற மனிதர்கள் எப்படி அருந்த முடியும்? அது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? இது போன்ற கேள்விகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் எழும். எவற்றையும் சடங்காகப்...

ஆணையிடுவதும் பலவீனமே

சட்டமியற்றி சமூகத்தின் தீமைகளை, தீயவர்களைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பது இயலாத காரியம். மேலும் மேலும் சட்டங்களை இயற்றினால தீமைகளும் தவறுகளும் தண்டனைகளும் குற்றவாளிகளும் பெருகுவார்களே அல்லாமல் நன்மை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகமாக இல்லை. ஆணையிடுதலும் இதற்குச் சமமானதே. ஏற்கெனவே உள்ள சட்டத்திற்கு இன்னொரு ஊன்றுகோல் தேடுகிறோம். ஆண்டவன் அருளால் நிறைந்த மனிதனுக்கு இப்படி இன்னொரு துணை தேவையில்லை. ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். ஆணையிடுதல், இயலாமையின் அடையாளம். எவ்விதத்திலும் ஆற்றலும் அருகதையும் அந்தஸ்தும் நமக்கு இல்லாத நிலையில் நாம் இன்னொரு உயர்ந்த சாட்சியத்தைத் தேடுவது முறையல்ல. நம்மால் நம் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது; கடவுளின் கால்மனையைக்கூட அணுக முடியாது.இந்த நிலையில் இறைவனை நமக்குச் சான்று பகர அழைப்பதற்கு என்ன தகுதி உள்ளது.இயேசுவின் காலத்தில் ஆணையிட்டுச் சொன்ன இரண்டு பேர் நிறைவேற்ற முடியாமல் போயினர். 1.ஏரோது(14:7), 2. பேதுரு26:72 ஆண்டவனின் மனிதன் ஒரு வார்த்தைக்குள்...

இடையூறாக இருக்க வேண்டாம்

இடையூறாக இருக்கும் எதுவும் களையப்பட வேண்டும். ஏனென்றால், அதுதான் நமது அழிவிற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. நாம் அனைவருமே இப்படித்தான் நடக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதன்படியே பெரும்பாலானோர் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், ஒருவர் அதற்கு மாறாக நடக்க ஆரம்பிக்கிறார். ஒட்டுமொத்த ஒழுங்குமுறையும் அங்கே அடிபட்டுக்கிடக்கிறது. இரயில் பயணச்சீட்டு எடுப்பதற்காக அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். வரிசை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென ஒருவர் வந்து இடையில் புகுந்து குழப்பம் ஏற்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாக அந்த வரிசை ஒழுங்கற்றுப்போய்விடுகிறது. ஆக, இந்த ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் ஒரு மனிதர்தான் காரணமாக இருக்கிறார். அவர் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அப்போது, ஒழுங்குகள் ஒழுங்குகளாக மதிக்கப்படும். இப்படிப்பட்ட இடையூறு செய்கிறவர்களைத்தான் நற்செய்தி பேசுகிறது. அவர்கள் திருத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவரும் அதனால் சீரழிந்துபோவதைவிட, இடையூறு செய்கிறவர் தண்டிக்கப்படுவது அனைவருக்கும் நலமாக இருக்கும். நமது வாழ்வில் நாம் இடையூறு செய்கிறவர்களாக இருக்கிறோமா? மற்றவர்கள்...

கறைபடாத வாழ்வு வாழ்வோம்

தன் சகோதரரையோ, சகோதரியையோ ”அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். எரிநரகம் என்பதன் பொருள் என்ன? யூதர்களுக்கு மத்தியில் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இது யெருசலேமின் தென்மேற்கில் இருக்கக்கூடிய, பென் இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இங்குதான் ஆகாஸ் மன்னன் பாகால் தெய்வங்களுக்கு வார்ப்புச்சிலைகளைச் செய்தான். இந்த பள்ளத்தாக்கில், அந்த தெய்வங்களுக்கு தூபம் காட்டினான். ஆண்டவர் முன்னிலையில் அருவருக்கத்தக்கவகையில், தனது புதல்வர்களையே தீயிலிட்டு எரித்தான். (2குறிப்பேடு 28: 1 – 4) ஆகாசிற்கு பிறகு வந்த, யோசியா அரசர் இதை அடியோடு அழித்தார். பாகால் தெய்வமான மோலேக்கு சிலைக்கு யாரும் தங்கள் புதல்வர்களை பலியிடாதவாறு, அதை அப்புறப்படுத்தினான். அனைத்தையும் தகர்த்தெறிந்தார். பீடங்களை உடைத்து, மனித எலும்புகளால் நிரப்பினார். இவ்வாறாக, அந்த இடமே மாசுபட்ட இடமாக, மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக, அருவருக்கத்தக்க இடமாக மாற்றப்பட்டது. (2 அரசர்கள் 23: 10 முதல்). இந்த இடம் அணையாத...