Tagged: தேவ செய்தி

நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா!

இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று இயேசு நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொள்வோம். இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். அவர்களை நோக்கி இயேசு கேட்கிறார்: “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” நாமோ ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோமாக!” நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு வாழ உறுதி பூணுவோம். மன்றாடுவோம்: நிறைவின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உலக இன்பங்கள், செல்வம், பல்வேறு விதமான சோதனைகள் இவற்றின் மத்தியிலும், நான் உம்மை விட்டுப் பிரிந்துவிடாத அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே...

இது என் உடல்

இயேசுவின் சதை என்பது அவரது மனிதத்தன்மையை பறைசாற்றுவதாக இருக்கிறது. யோவான் தனது முதல் திருமுகத்தில் இதை தெளிவாக விளக்குகிறார். ”இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல்”. யோவான் இயேசு நம்மில் ஒருவர் என்கிற செய்திக்கு அழுத்தம் தருகிறார். இயேசுவில் கடவுளை நாம் அறிகிறோம். இதுநாள்வரை கடவுள் எப்படி இருப்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இயேசுவில் நாம் கடவுளை கண்கூடாக பார்க்கிறோம். நமது வாழ்க்கைச்சூழலில் துன்பங்கள், வறுமை, நஷ்டங்கள், பலவீனங்கள், போராட்டங்கள் இயல்பாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நாம் இயேசுவை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் நமது சுமைகளை தாங்கியிருப்பதை எண்ண வேண்டும். அவர் நமக்காகத்தான் இந்த உடலை எடுத்தார். நமக்காக தன்னையே அவர் கையளித்தார். நமக்காக...

கடவுள்தாமே கற்றுத் தருவார்

கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” என்னும் இறைவாக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில்(+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51) இயேசு மேற்கோள் காட்டுகிறார். நாமும் இந்த வசனத்தையே இன்று தியானிப்போம். ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட மலையுச்சிக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவன் ஈசாக் தன் தந்தையிடம் கேட்ட கேள்வி: பலிப்பொருள் எங்கே?”. அதற்கு ஆபிரகாம் அளித்த பதில்: கடவுள்தாமே தருவார்”. கடைசியில், கடவுளே ஒரு செம்மறி ஆட்டைப் பலிப்பொருளாக அளித்தார் என்பதை நாம் அறிவோம். நாம் நடக்க வேண்டிய பாதையைக் கடவுளே நமக்குக் காட்டுவார். நாம் பேச வேண்டிய சொற்களைக் கடவுளே நமக்குச் சொல்லித் தருவார். நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளைக் கடவுளே நமக்குக் கற்றுத் தருவார். இதுவே நமது நம்பிக்கை. இதுவே நமது பட்டறிவு. எனவே, கடவுளைச் சார்ந்தே வாழ்வோம். அவரே நம்மை வழிநடத்துவார். மன்றாடுவோம்: வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து...

இயேசுவின் வல்லமை

“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்: ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்வதன் பொருள் என்ன? இயேசுவை விட வல்ல செயல்களை ஒருவர் செய்து விட முடியுமா? இயேசுவை விட வல்ல செயல்கள் செய்தால், அவர் இயேசுவை விட மேலானவர் ஆகிவிடமாட்டாரா? உண்மையிலே இயேசு இங்கே என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த கேள்விகள் அனைத்துமே, இந்தப்பகுதியை வாசிக்கின்றபோது நமக்கு ஏற்படும் எண்ணங்கள். தொடக்க காலத்திருச்சபை உண்மையிலே குணப்படுத்துகின்ற வல்லமையைப்பெற்ற ஒன்றாகத்திகழ்ந்தது. 1 கொரிந்தியர் 12 வது அதிகாரத்தில் தூய ஆவியார் அருளும் கொடைகளைப்பற்றிப் பார்க்கிறோம். 9 வது இறைவார்த்தைச்சொல்கிறது: “அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையை அளிக்கிறார்”. அதேபோல் யாக்கோபு தனது திருமுகத்தில் 5: 14 ல் சொல்கிறார்: “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்”....

நிம்மதி தருபவர் இயேசு கிறிஸ்து

தங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள்கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, தன்னுடைய புதுமையின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காக தன்னைத் தேடி வருகிறார்களே? என்கிற வேதனைதான். இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மீகப்பசியை போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மீகப்பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும் தான், தணிக்க முடியும். அதனை அறிந்துகொள்ளாம் மக்கள் இருக்கிறார்களே? என்பதுதான் இயேசுவின் வேதனைக்கான காரணம். ஆன்மீகப்பசியைப் போக்கும் அருமருந்து இயேசு. ஏன்? கடவுள், இயேசுவில் தான், தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். முற்காலத்தில் முத்திரை என்பது அதிக சக்தி வாய்ந்தது. அது கையொப்பம் போன்றது அல்ல. அதனைவிட வலிமை வாய்ந்தது. அரசியல் உலகிலும், வியாபார உடன்பாட்டிலும் முத்திரை தான், ஒரு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்த முத்திரை தான், உயிலை அதிகாரப்பூர்வமாக்கியது. அதுபோல இயேசு கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வமான முத்திரையாக...