Tagged: தேவ செய்தி

கலக்கத்தைக் கலகலப்பாக்க!

(லூக்கா 24 : 35-48) அகக்கண்கள் திறந்திருந்தாலும் அவர்களின் மனக்கண்கள் மூடியே இருந்தன. இதுவரை ஒருவருக்கும் இருவருக்குமாய் தோன்றி தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அனைவரும் குழுமியிருக்க அங்கே தன் உயிர்ப்பின் மாட்சியை வெளிப்படுத்துகிறார். அவர் இறப்பினைப் பற்றி முன்னறிவிக்கும் போது புரியாதவை இப்பொழுது மட்டும் என்ன புரியவா போகின்றது? இது இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இயேசு உயிர்ப்பினைப் பற்றி அவர்கள் உணர கடும் பாடுபடுகிறார். இந்த சிரமத்தை அவர் இறப்பதற்கு முன்பாக எடுக்கவில்லையே! காரணம், இயேசு இறந்துவிட்டதால் சீடர்கள் அனைவரும் கலக்கமும், பீதியும் அடைந்திருந்தார்கள். வாழ வேண்டுமா அல்லது யூதாசினைப் போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா அல்லது பேதுருவைப் போல அதிகார வர்க்கத்தினருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்க வேண்டுமா என்றெண்ணி கூனிக்குருகி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார் என ஆங்காங்கே கேள்விப்படுவதைக் கேட்டு இவர்களின் கலக்கம் குழப்பமாக மாறியது. இது இவர்களுக்கு இன்னும்...

உரையாடல் உள்ளாடலாக !

(லூக்கா 24 : 13-35) கத்தோலிக்கத் தாய்த் திரு அவையின் புதையல் நற்கருணை. நற்கருணையைச் சுற்றியே தான் நம் இருத்தலும் இயங்குதலும் நடைபெறுகின்றன. இந்த நற்கருணையின் மறைபொருளை உணர இன்றைய நற்செய்தி நமக்கொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நமது திருப்பலியின் அமைப்பு முறையும் இன்றைய நற்செய்தியினைப் பார்த்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. முதல் பகுதி இன்றைய நற்செய்தியில் திருப்பலியின் இறைவார்த்தைப் பகுதியினை ஒத்து அமைகின்றது. இரண்டாம் பகுதி திருப்பலியின் நற்கருணைப் பகுதியினை ஒத்து அமைகின்றது. நற்கருணைப் பகிர்விற்கான தயாரிப்பே இறைவார்த்தைப் பகிர்வு. இறைவார்த்தைப் பகுதியின் நோக்கமே நற்கருணையின் மறைப்பொருளை உணரச் செய்வதே. வார்த்தையானவர் மனுவுரு எடுத்ததே நம்மோடு தங்குவதற்குத்தானே! ஆனால் பல வேளைகளில் நம்மில் பலர் நற்கருணையில் இறைவனைக் காண முடியாதவர்கள்தான், இன்று இறைவார்த்தையில் இறைவனைக் கண்டுவிடலாம் என்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறோம். பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டினை நோக்கி பயணம் செய்வதை விட்டுவிட்டு, பழைய ஏற்பாட்டிலேயே இன்னும் பல பிரிவினையன்பர்கள்...

தேடலின் விடை

(மத்தேயு 28: 6-15) திகிலுற்றுக் கிடந்த அனைவருக்கும் இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. முடங்கிக் கிடந்தவர்கள் அனைவரும் முடுக்கி விடப்பட்டனர். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைப் பரப்ப ஒருபுறம் சமுதாயத்தால் மதிக்கப்படாத பெண்கள் ஓடுகின்றனர். மறுபுறம் அவர் உயிர்ப்பின் செய்தியை சோற்றுக்குள் மறைக்கப்பட்ட பூசணிக்காயைப் போன்று மறைத்துவிட அதிகார வர்க்கத்தினர் ஆட்களை அனுப்புகின்றார்கள். பலவீனமான பெண்கள் ஒருபுறம், படைக்கவசங்களுடன் பலம் வாய்ந்த படைவீரர்கள் மறுபுறம். உண்மையைக் கையில் எடுத்துக் கொண்டு அன்பினால் இயக்கப்படும் பெண்கள் ஒருபுறம். கையூட்டுக் காசினைப் பெற்றுக் கொண்டு உண்மையினை மூடி மறைக்க எண்ணும் கூட்டம் மறுபுறம். அவர்களுக்குத் தெரியவில்லை இருளை விரட்டியடிக்க சிறு தீக்குச்சியே போதுமென்று. உண்மை மலையின் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினைப் போன்றது. விளக்கினைத் தேடும் விண்மினிப் பூச்சிகள் ஒவ்வொன்றும் ஒளியினால் ஈர்க்கப்படும். தேடலின் விடை ஒளியில் மட்டுமே கிடைக்கும். உலகின் ஒளியை நாமும் வேட்கையோடு தேடினால் ஒளியை அடைந்து விடுவோம். திருத்தொண்டர்...

செய், சொல்

யோவான் 20 : 1-9 இயேசுவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் மூலைக்கல், ஆதாரம். அதை நம்புவதும், அடுத்தவருக்கு அறிவிக்க பெண்களைப்போல நற்செய்தியாளர்களாய், திருத்தூதர்களாய் செயல்படுவதும் நமது கடமை. இயேசுவின் உயிர்ப்பே இன்று நம் அனைவரையும் ஒன்று கூட்டி வைத்திருக்கின்றது. மரணத்தை வென்றவர்கள் தான் நாம். காரணம் சாவின் கொடுக்குகளை வெட்டியெறிந்து விட்டார் நம் இயேசு. இதனை நாம் கொண்டாட கூடியுள்ளோம். மனித இனத்தின் மிகவும் மோசமான எதிரி சாவு. இச்சாவினை இயேசுதன் சாவினைக் கொண்டு வீழ்த்தி விட்டார். நற்செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிடக் கிறிஸ்துவின் உயிப்ப்பே நற்செய்தியை விளக்குகிறது.ள ஏனெனில் கிறிஸ்து உயிர்க்கவி;ல்லையென்றால் நமது நம்பிக்கைப் பொருளற்றது. ( 1 கொரி 15:14) ஆண்டவரின் உயிர்ப்பு செய்தி முதன்முறையாகப் பெண்களுக்குத் தான் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாகவே உண்மையானது உலகிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. யூத சமுதாயத்தில் பெண்களின் சாட்சிசெல்லவே செல்லாது. ஆனால் தொடக்க முதல் இறுதிவரை ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கின்ற இயேசு,...

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்

விடுதலைப்பயணம் 15: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 – 18 எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக, பார்வோன் மன்னருக்கு ஊழியம் செய்து வருகின்றனர். கடவுள் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்காக, மோசேயையும், ஆரோனையும் அனுப்புகிறார். அவர்கள் பார்வோன் மன்னரிடத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றனர். கடவுளின் வல்ல செயல்களுக்கு முன்னால், தான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்த பார்வோன் மன்னன், இஸ்ரயேல் மக்களை போக அனுமதிக்கிறான். ஆனால், அவர்களைப் போகவிட்டதற்காக மனம் வருந்துகிறான். அவர்களைப் பிரிந்ததற்காக அல்ல, மாறாக, அவர்கள் செய்து வந்த அடிமை வேலையை இனி தனக்கு யார் செய்வார்கள்? என்கிற எண்ணத்தினால், மனம் வருந்துகிறான். அவர்களை திருப்பி இழுத்து வர, ஆணையிடுகிறான். அப்போது, தண்ணீர் இரண்டாகப் பிளந்து, இஸ்ரயேல் மக்கள் கரைசேர்ந்து விடுகின்றனர். ஆனால், எகிப்தியர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகின்றனர். இவ்வாறு கடவுள் தந்திருக்கிற மீட்பிற்கு நன்றியாக, மோசேயும், இஸ்ரயேல் மக்களும் பாடி...