Tagged: தேவ செய்தி

சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!

மத்தேயு 17:9, 10-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும். 1. கற்பதில் சீர்திருத்தம் நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து...

இறைவனின் குரலுக்குச் செவிகொடுப்போம்

எசாயா 48: 17 – 19 இஸ்ரயேல் மக்கள் எந்த இடத்தில் தடம்புரண்டார்கள்? அவர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணம் என்ன? என்பதை, இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை இதுநாள் வரை வழிநடத்தி வந்து, வெற்றி தேடிக்கொடுத்த, இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் நடந்தது தான், அவர்களின் மோசமான நிலைக்கு காரணமாக, இறைவாக்கினர் அறிவிக்கின்றார். இறைவன் ஒருவா் தான், பயனுள்ளவற்றையும், மனிதர்கள் மகிழ்ச்சியாயிருக்கத் தேவையானவற்றையும் கற்பிக்கிறவர். ஆனால், மனிதன், கடவுளை நம்பாமல், வேற்றுத் தெய்வங்களையும், வேற்று நாட்டினரையும் நம்பி மோசம் போனான். அப்படி அவர்கள் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து, மற்றவர்களைப் புறம்தள்ளியிருந்தால், இன்றைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். பலவற்றை இழந்திருக்க மாட்டார்கள். அவர்களது பெயர் கடவுளின் திருமுன்னிலையிலிருந்து அகற்றப்பட்டிருக்காது. இப்போதோ, அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கான வழி அடைக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு, இறைவனின் வார்த்தைக்கு செவிகொடுத்தாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வரும். அவர்கள் மீண்டும் இழந்தவற்றைப்...

இறையாட்சியின் சவால்கள்

”திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்” என்று, 12 வது இறைவார்த்தைச் சொல்கிறது. இதே வார்த்தையின் பொருள் லூக்கா 16: 16 ல், வெளிப்படுகிறது. ”திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்”. இதனுடைய பொருள் என்ன? இயேசு இதன் வழியாக சொல்லவிரும்புகிற கருத்து என்ன? விண்ணரசு எப்போதுமே வன்முறையைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. இங்கே விண்ணரசு என்று சொல்லப்படுவது, அதை அறிவிக்கிறவர்கள். திருமுழுக்கு யோவான் வந்தார். ஆண்டவருடைய அரசை அறிவித்தார். அவர் கொல்லப்பட்டார். யாரெல்லாம் ஆண்டவருடைய அரசை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவா்கள் அனைவருக்கும், இதுதான் கதியாகும். விண்ணரசை எதிர்க்கிறவர்கள் எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அதையும் துணிவோடு சந்திக்கிறவர்களால் தான், இன்றைக்கும் விண்ணரசு அழியாமல் உறுதியாக நிற்கிறது. நாம் அனைவருமே இறையாட்சியின் தூண்கள். நாம்...

இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலாக அமைகிறது. கிரேக்கர்கள், ”கடவுளைக்காண்பது அரிது. கடவுளைக்கண்டாலும் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவது அரிதிலும் அரிது” என்று சொல்வார்கள். யோபு புத்தகத்திலே சோப்பார், யோபுவிடம் கேட்பதும் இதுதான், ”கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?” (யோபு 11: 7). அப்படியென்றால், கடவுளைக்காணவே முடியாதா? நன்மை செய்கிறவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான் கிடைக்குமா? அவர்கள் ஆறுதல் கூட பெற முடியாதா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். அதற்கு பதில்தான் இயேசுவின் அமுதமொழிகள். கடவுளைப்பற்றிய தேடல் இயேசுவில் நிறைவடைகிறது. வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு நிறைவு இயேசுவில் கிடைக்கிறது. இயேசு சொல்கிறார், ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. இந்த வார்த்தைகள் கடவுளைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்வில் நன்மையே...

தேடி போ! உயரே கொண்டு வா!

மத்தேயு 18:12-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இவ்வுலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள். பயனற்றவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரையும் கடவுள் தாயின் கருவறையில் அர்ச்சித்து அற்புதமான பணி செய்ய அழைக்கின்றார். யாரையும் ஒதுக்காதீர்கள், யாரையும் வெறுக்காதீர்கள் என்ற அன்பான வேண்டுகோளோடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். குறைகள் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு வரை இந்த நாள் நம்மை அழைக்கிறது. குறைகள் இருந்தாலும் உற்சாகத்தினால் மேலே வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உயரே வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் இதோ இரண்டு சாதனையாளர்கள்: 1. நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் (Nicholas James Vujicic) என அழைக்கப்படும், 36 வயது...