Tagged: இன்றைய வசனம் தமிழில்

வாழ்க்கை என்னும் கொடை

வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த கடவுள் கொடுத்த கொடையைப் பயன்படுத்தி நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுகிறோம், வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றுகிறோம், வாழ்க்கையை எப்படி வாழுகிறோம், என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய சவால். இந்த உவமையில் வரக்கூடிய மினாவை நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசலாம். ஒருவருடைய வாழ்வில் அவருக்கென்று பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகள் வெறுமனே புதைக்கப்பட்டு விடக்கூடாது. மாறாக, அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பயன் கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும். அதைத்தான் இந்த உவமை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம். ~...

இயேசு தரும் மீட்பு

இயேசு எந்த அளவுக்கு சமுதாயத்தின் கடைசி நிலையில் இருக்கிறவர்களுக்கும், விளிம்புநிலையில் இருக்கிறவர்களுக்கும் உறுதுணையாக இருந்தார் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தொடர்ந்து தன்னுடைய நற்செய்தியில் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். அந்த கருத்து தான், சக்கேயு நிகழ்ச்சியிலும் வெளிப்படுகிறது. காணாமற்போன ஆடு, காணாமற்போன நாணயம், ஊதாரி மைந்தன் உவமை, லூக்கா நற்செய்தியின் தனித்தன்மைக்கு சிறந்த உதாரணங்கள். சக்கேயு நிகழ்ச்சியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. லூக்கா நற்செய்தியாளர் வரிதண்டுவோர்களிடத்தில் தொடக்கமுதலே தன்னுடைய நற்செய்தியில், அவர்கள் மீதான தனது பரிவை வெளிப்படுத்தி வருகிறார். 3: 12 ”வரிதண்டுவோரும் திருமுழுக்கு பெற வந்து, ”போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். 7: 29 ”திரண்டிருந்த மக்கள் அனைவரும், வரிதண்டுவோரும் இதைக்கேட்டு கடவுளுடைய நீதிநெறியை ஏற்று, யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்”. 15: 1 ”வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்”. இயேசுவின் திறந்த உள்ளத்திற்கு, சக்கேயு மிகச்சிறப்பான பதில்மொழியைக் கொடுக்கிறார். தன்னிடம்...

எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புக்கள்

இன்றைய நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்கு ஒரு வினாடி, ஒரு வாய்ப்பு போதும். நாம் எங்கோ சென்றுவிடுவோம். ஆனால், நமது வாய்ப்புகளை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். கிடைக்கிற வாய்ப்புக்களை நல்ல முறையில், முழுமையாக் பயன்படுத்துகிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை ஒளிரக்கூடியதாக இருக்கும். அப்படி கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனது வாழ்வையே மாற்றிய ஒரு மனிதனின், வாழ்க்கை அனுபவத்தைத்தான், இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43) வழியாக அறிய வருகிறோம். பார்வையற்ற மனிதன் வழியோரமாய் உட்கார்ந்திருக்கிறான். தனக்கு பார்வை இல்லை, இனிமேல் நடப்பது நடக்கட்டும் என்று அவன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று வித்தியாசமாக அவன் உணர்ந்தால், உடனே அருகிலிருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். அதேபோலத்தான் இயேசுவின் வருகையையும் விசாரித்தான். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று தேடிக்கொண்டேயிருக்கிறான். வாய்ப்பு கிடைத்ததும் அதனை அவன் பற்றிக்கொண்டான். அதுதான் வாழ்வை மாற்றுவதற்கு, வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாய்ப்பு....

விழிப்பாயிருப்போம்

”நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கின்றார். யாரிடமிருந்து ஏமாறக்கூடாது? எப்படி ஏமாற்றுகிறவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது? ஏமாறுகிறவர்களை தீர்ப்பிட முடியாதா? அவர்களின் தவறான செயல்களுக்கு, ஏமாந்து விட்டோம் என்று சொல்லி, தப்பிக்க முடியுமா?இன்றைக்கு தவறு செய்கிறவர்கள், நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லி, தப்பிக்க நினைக்கிறார்கள். அல்லது வெகு எளிதாக தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், தவறு செய்கிறவர்கள் எந்த வழியிலும் தாங்கள் செய்த தவறான செயல்களுக்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதோடு, எப்போதும் மற்றவர்கள் தங்களை ஏமாற்றாமல் விழிப்பாயிருந்து, நமது ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் ஏராளமான இளைஞர்கள், தவறான வழிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். மற்றவர்களின் தவறான போதனைக்கு பலியாட்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக, தீவிரவாதத்தை ஊக்குவிக்கக்கூடியவர்களின் நயவஞ்சகப்பேச்சுக்கு மயங்கி தங்களது வாழ்வைத் தொலைத்துவிடுகிறார்கள். அதற்கான தண்டனை வருகிறபோது, அவா்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருத்தமடைகிறார்கள். தவறான பேச்சுகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஆளாகாமல், நமது ஆன்மாவை காத்துக்கொள்ளக்கூடிய கடமை, ஒவ்வொரு மனிதனுக்கும்...

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை என்று நேர்மையற்ற நடுவர் தனக்குள் சொல்லிக்கொள்வதாக இன்றைய உவமை நமக்கு வருகிறது. இன்றைய பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை இது பிரதிபலிப்பதாக அமைகிறது. ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை இந்த உலகம் வெறுத்து ஒதுக்கியது. தவறு செய்வதற்கு மனிதர்கள் பயப்பட்டார்கள். தவறு செய்கிறவர்கள் அதனை வெளியில் தெரிவதை மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்கள். இன்றைய நிலை என்ன? தவறு செய்கிறவர்கள் தான், இந்த சமுதாயத்தில் நிமிர்ந்த நடையோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்வது பாவம் என்கிற மனநிலை அறவே இல்லை. அதையெல்லாம் பெரிதாக நினைப்பதும் இல்லை. நல்லவர்கள் தான், அவமானப்பட்டு வாழ்வது போல வாழ வேண்டியுள்ளது. இப்படியொரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு காலம் வரும். அதற்கான பலனையும், விளைவையும் தவறு செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். இந்த உலகத்தில் கடவுளுக்கு பயப்படாமல், மனிதர்களை மதிக்காமல் இருப்பவர்கள்...