Tagged: இன்றைய சிந்தனை

மனதுருகும் நம் ஆண்டவர்

பிரியமான ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின்  நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு திரண்டிருந்த மக்களை பார்த்து அவர்கள்மேல்  மனதுருகி அநேகரை நோயிலிருந்து விடுதலையாக்கினார். மத்தேயு 14:14. என்று வாசிக்கிறோம். இன்றும் நீங்கள் யாராவது நோயினால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கீர்களா? கவலைப்பட வேண்டாம். இதோ உங்கள் மேல் மனதுருகும் நம் ஆண்டவர் எல்லா நோயிலிருந்தும் விடுவித்து காக்க வல்லவராய் இருக்கிறார். உங்கள்மேல் அன்பும், பரிவும் காட்ட யாரும் இல்லையே என்று தவிக்கிறீர்களா? மனம் கலங்காதீர்கள். உங்களை நேசிக்க அன்பும் பரிவும், காட்ட நம் ஆண்டவர் உங்கள் அருகில் நிற்கிறார். அவரை நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடு அழைத்தால் உங்களுக்கு உதவ ஆவலோடு காத்திருக்கிறார், அழாதீர்கள் என்று கூறுகிறார். லூக்கா 7:13 . அதுமட்டுமல்ல உங்களுக்கு கருணை காட்டவும், உங்களுக்கு  இரங்குமாறு எழுந்தருள்வார். ஏனெனில் அவர் நீதியின் கடவுள். அவருக்கு காத்திருப்போர் நற்பேறு பெறலாம். எசாயா 30:18 . மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது: என்...

நல்ல ஆயன் நம் ஆண்டவர்

அன்பானவர்களே! நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். உயிருள்ள யாவருக்கும் நல்ல ஆயனாய் நம்மை வழிநடத்தும் நம் ஆண்டவரை பற்றிக்கொண்ட யாவரும் எவ்வளவு விசேஷித்தவர்கள் தெரியுமா? அவர் நமக்காக எப்படியெல்லாம் வழக்காடுகிறார் பாருங்கள். ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறைவில்லை. திருப்பாடல்கள் 23 :1 . நாம் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நம் ஆயர் நம்மோடு இருந்து நம் எதிரிகளின் கண்முன்னே நமக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்து நம் வாழ்நாளெல்லாம் அவருடைய இல்லத்தில் வாழ்ந்திருக்கும்படி செய்கிறார். திருப்பாடல்கள் 23 :4-6. அதுமட்டுமல்ல, அவருடைய மந்தையாகிய நம்மை அவர் ஏற்பாடு செய்திருந்த ஆயர்கள் மந்தையாகிய நம்மை ஒழுங்காக மேய்ப்பதில்லை, திடப்படுத்தவில்லை, பிணியாளிகளை குணமாக்கவில்லை, காயமுற்றோருக்கு கட்டுப்போடவில்லை, வழி தப்பியவற்றை திரும்ப கூட்டி சேர்க்கவில்லை, காணாமல் போனவற்றை தேடவில்லை என்று நமக்காக வழக்காடுகிறார். எசேக்கியல் 34:3,4 மற்றும் அந்த அதிகாரம் முழுவதையும் படித்தீர்களானால் அவரின் அன்பை யும், தன் மந்தையை காக்க அவர் செய்யும் செயல்களையும் நாம் அறிந்துக்கொள்ளலாம். அன்பானவர்களே இப்படியான கடவுளை நாம் அறிந்திருக்கிறபடியால் மற்றவர்களைப்போல...

யார் பெரியவர்?

பிரியமானவர்களே!!  இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நம்மை அறியாமல் அநேக வேளைகளில் தவறு செய்துவிடுகிறோம். நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, அவநம்பிக்கை, எரிச்சல் இவைகளை நாம் கடைப்பிடித்து பாவம்  செய்கிறோம். அதனால்தான் நம் ஆண்டவர் நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளையைப்போல் ஆகாவிட்டால் விண்ணுலகில் புகமாட்டீர்கள் என உறுதியாக  சொல்கிறார். அதோடல்லாமல் சிறு பிள்ளையைப்போல் தாழ்த்திக்கொண்டவரே விண்ணுலகில் மிகப்பெரியவர் என்று சொல்லியிருக்கிறார். மத்தேயு 18: 3 – 4 ,. நாம் தவறாமல் ஆலயத்துக்கு போகலாம். ஜெபம் செய்யலாம். ஆனால் நம் மனது வஞ்சகத்தினால் நிரம்பியிருந்தால் அதை கடவுள் அறியாரோ! நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கைக்கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். அதை அடக்கி ஆளவேண்டும். தொடக்கநூல் 4 :7 ல் காணலாம். நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் நம்மை பார்ப்பதில்லை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆனால் ஆண்டவரோ நம் இதயத்தை [அகத்தை]பார்க்கிறார். 1 சாமுவேல் 16:7....

இரக்கமுடையோராய் வாழ்வோம் (மத்தேயு 5: 7)

அன்பும், பிரியமும் உள்ள இணையதள உள்ளங்களுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள். கடவுள் நம்மை எதற்காக படைத்தார். ஏன் ஒருவனை படைத்து அவர் மூலம் உலக மக்களை இந்த உலகத்தில் நிரப்பினார். அவருக்கு வல்லமை இல்லையோ?அவர் நினைத்திருந்தால் ஒரே தடவையில் அநேக மக்களை உருவாக்கி இருக்க முடியும். பிறகு ஏன் ஒருவனை உருவாக்கி அவன் மூலம் உலகத்தை நிரப்பினார். யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா? ஏதேன் தோட்டத்தில் யாவே கடவுள் மண்ணிலிருந்து ஆதாமை ஏன் அவருடைய சாயலில் உருவாக்கினார். நாமும் அவரைப்போல் வாழ வேண்டும். அவருடைய செல்லக் குழந்தைகளாய் அவருடைய மடியில் தவழ வேண்டும். அவருடைய பண்புகளை நாமும் பின்பற்ற வேண்டும் அவருடைய சொல்லுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். அவரையே நாம் எப்பொழுதும் துதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துதான் நம்மை ஆசையோடு உருவாக்கினார். ஆனால் நாமோ எல்லா விஷயங்களிலும் தவறு செய்கிறோம். சுயநலமாக வாழ்கிறோம். பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். 1 திமொத்தேயு 1:15...

உண்மையாய் இருப்போம்

அன்பான இறைமக்களே!! இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் பற்பல வேலைகளில் ஈடுபட்டு நம் பணிகளை செய்கிறோம். அந்த பணியில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், மனிதரை சந்தோஷப்படுத்த அவனுக்கு பிரியமாய் நடக்கிறோமோ?அல்லது கடவுளை சந்தோஷப்படுத்த அவருக்கு பிரியமாய் வாழ்கிறோமா? என்று நம் உள்ளத்தை நாம்  ஆராய்ந்து பார்ப்போம்.. நாம் கடவுளுக்கு பயந்து உண்மையாய் இருந்தால் மனிதர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார். ஆண்டவருக்கு உண்மையாய் இருந்தால் அவரிடம் நமக்கு திரளான மீட்பும், அடைக்கலமும் கிடைக்கும். நீதிமொழிகள் 29:25 . உண்மைக்கு எவருடைய தயவும்,ஆதரவும்,பெரும்பான்மையும், தேவையில்லை.உண்மை தனித்தே நின்று வெற்றிபெறும்.முதலில் தொற்பதுப்போல் தோன்றினாலும் இறுதியிலே உண்மைதான் வெற்றிபெறும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.ஆனால் மறு படியும் தர்மமே வெல்லும்.அனுபவம் தரும் பாடம் இதுதானே. நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் உவமை மூலம் மத்தேயு 25:21 மற்றும் 23 ஆகிய வசனங்களில் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய...