Tagged: இன்றைய சிந்தனை

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. எபிரேயர் 13 : 5

வானத்தையும்,பூமியையும் உண்டாக்கிய ஆண்டவர் உங்கள் ஒவ்வொரு வருடனும் கூடவே இருந்து உங்கள் உள்ளத்தில் பேசிக்கொண்டு ஒவ்வொரு நொடிப்பொழுதும் செயலாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்.அவர் ஒருபோதும் அவரை நோக்கி கூப்பிடுகிறவர்களை விட்டுவிலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. அதனால் உங்களுக்கு எந்த ஒரு தேவை இருந்தாலும் அவரையே நோக்கிப்பார்த்து கூப்பிடுங்கள்.அப்பொழுது உங்களுக்கு செவிசாய்ப்பார். நான் ஆண்டவரை அறிந்தக் காலத்தில் எனக்கு வாக்குத்தத்தமாக இந்த வசனத்தை தான் கொடுத்தார். அப்பொழுது எனக்கு வேதத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாததால் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. அதனால் பத்து வருஷம் வேதத்தை வாசிக்கவில்லை.ஆனால் நான் மறந்தாலும் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. ஏனெனில் 10 வருஷம்கழித்து எனக்கு ஒரு சோதனையைக் கொடுத்து மறுபடியும் அதே வசனத்தை திரும்பக்கொடுத்து எனக்கு ஞாபகத்தைக் கொடுத்தார். அந்த சோதனையால் பல அவமானங்களை சந்தித்தேன். ஏனெனில் ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாத சோதனை அது, நான் செய்யாத தவறுக்கு என்மேல் கொலைப்பழி சுமத்தி என்னை சிறையில் அடைக்கப்பார்த்தார்கள். ஆண்டவரை மறந்திருந்த நான் அப்பொழுது திகைத்து நின்றேன். ஆனால் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. மறுபடியும் அந்த வசனத்தை எனக்கு ஞாபகப்படுத்தி எனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்கள்...

உயர்ந்த அன்பு எது??

“இருக்கின்றவராகவே இருக்கின்றவர் நானே” என்று அன்று மோசேயிடம் வாக்களித்து நீ இஸ்ரயேல் மக்களிடம் சென்று ” இருக்கின்றவர் நானே” என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்லச் சொன்னார். விடுதலை பயணம் 3 : 14. அன்று அவ்வாறு வாக்களித்த இறைவன் இன்றும் ” இருக்கிறவராகவே இருந்து” எனக்காக,உனக்காக ஏன் நம்மெல்லோருக்காகவும் இந்த பூமியில் ஒரு மனிதனாக பிறந்து அன்பை வெளிப்படுத்தினார். ஆபிரகாமின் கடவுள்,ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்,இந்த உலகம் அனைத்திற்கும் கடவுள் அவரே, இதுவே என்றென்றும் என் பெயர் என்று சொல்லி தலைமுறை, தலை முறையாக,என் நினைவுச் சின்னமும் இதுவே! வி.ப 3:15 என்று சொல்வதை வாசிக்கிறோம். கடவுள் அனைத்தையும் கடந்தவர். மனித அறிவுக்கு எட்டாதவர். அவரின் இன்னொரு பெயர் யாவே என்பதாகும். எதையும் காண்பவர், யாவற்றையும் கடந்தவர், இவ்வளவு மகத்துவமும், வல்லமையும் , மாட்சியும், ஜெயமும் உள்ள கடவுள் ஏன் மிகவும் தாழ்மை நிலையில் ஒரு மாட்டுக்கொட்டகையில் வந்து பிறக்கவேண்டும்?அவர் நினைத்திருந்தால் ஒரு ராஜாவாக, அல்லது வானத்தில் இருந்து நேரிடையாக இறங்கி நான்தான் கடவுள்...

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். கலாத்தியர் 5:13

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர்,அன்பின் வழியாய்ச்செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். ஏனெனில் உன்மீது நீ அன்புக்கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுதும் நிறைவு பெறுகிறது.கலாத்தியர் 5 : 6,13,14 ல் வாசிக்கிறோம். எல்லாவற்றையும் விட சிறந்த நெறி அன்பே, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் இருந்தாலும் இவற்றுள் அன்பே பெரியது,சிறந்தது. அதனால்தான் 1 கொரிந்தியர் 13 : 1,2 ஆகிய வசனங்களில் நாம் இவ்வாறு வாசிக்கலாம். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைப்பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும் அறிவெல்லாம் பெற்றிருப்பினும் மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. ஒருவேளை நாம் ஆண்டவருக்கென்று ஊழியம் செய்யலாம்,அல்லது நமது பொருளை பிறருக்கு கொடுத்து உதவலாம்,...

ஆண்டவர் தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். யோவான் 13:1

இந்த உலகில் வந்து பிறந்த,பிறக்கின்ற ஒவ்வொருவர் மேலும் கடவுள் இறுதிவரை அன்பு செலுத்தி நம்மை வழிநடத்துகிறார். மனிதர்களின் அன்பு மாறிவிடும். ஆனால் ஆண்டவரின் அன்பு ஒருபோதும் மாறாது. நமக்கு சில கஷ்டங்கள் ஏற்படும்போது கடவுள் ஏன்தான் இப்படி செய்கிராறோ என்று மனம் பதறி குறை சொல்லி விடுவோம். ஆனால் அந்த சில கஷ்டங்களை நாம் சந்திப்பதால் நமக்கு பல அனுபவங்கள் ஏற்படும். அதன்மூலம் நாம் நிறைய காரியங்களை கத்துக் கொள்ள ஆண்டவர் உதவுவார். நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால்,இப்போது உமது வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன் என்று தாவீது சொல்வதுபோல் நாமும் சொல்லலாமே! தி.பாடல்கள்.119:67. ஆண்டவர், தண்ணீரை வானத்தில் தோன்றும் கார்மேகத்தில் கட்டி வைத்து பின்பு அதன்மேல் காற்றை வீசச் செய்து அதை பூமியெங்கும் மழையாக பொழியச் செய்து பூமியை நனைத்து குளிர வைக்கிறார். அந்தத் தண்ணீரை கார்மேகங்கள் சுமப்பததால் அவைகள் சோர்ந்து விடுவதில்லையே? அப்படித்தான் நமக்கு ஏற்படும் பல இன்னல்களால் நாம் சோர்ந்துபோய் தளர்ந்து போகாமல் இருப்போமானால் தென்றல் காற்றை நம்முடைய இதயத்தில் வீசச் செய்து பல இக்கட்டுகளில்...

ஞானிகளை வெட்கப்படுத்த தேவன் மடமைகளை தெரிந்துக்கொண்டார்

சிலுவை பற்றியச்செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையாக தோன்றலாம். ஆனால் மீட்பு பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமையை காணச் செய்யும். ஏனெனில் ” ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன் . அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன், என்று மறைநூலில் எழுதியுள்ளது. நாங்கள் ஞானிகள்;ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது’ என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறை நூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று. ஞானிகள் வெட்கமடைவர்; திகிலுற்றுப் பிடிபடுவர்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; இதுதான் அவர்களின் ஞானமா? என்று எரேமியா 8 : 8,9,ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். ஞானிகள் தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர்கள் தம் செல்வத்தைக் குறித்தும் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புவோர் இயேசுகிறிஸ்துவை அறிந்து அவரே நம்முடைய ஆண்டவர் என்றும், அவரே நமக்காக நம்முடைய பாவத்துக்காக சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தமது இரத்தத்தையும், தண்ணீரையும் கொடுத்து நம்மேல் உள்ள அளவிட முடியாத பேரன்பால் நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றி நம்முடைய வாழ்விற்காக அவர் தமது...