Tagged: இன்றைய சிந்தனை

வாழ்வை வளமாக்கும் இயேசு

இந்த இயேசு நோயையும் பசியையும் போக்கி மனித வாழ்வை வளமாக்கும் தெய்வம். இயேசு இருக்கும் மலைக்குச் செல்வோம். மக்கள் கூட்டத்தோடு ஒருவராக நாமும் செல்வோம். இயேசுவைத்தேடி மலைக்குச் சென்ற பெருங்கூட்டத்தில் பல்வேறு நோயுற்றோரும் இருந்தனர். இயேசுவோடு மணிக்கணக்காக நாள்கணக்காக தங்கியுள்ளனர். அவரோடு தங்கி, அவர் செய்த அருஞ்செயல்களைக் கண்டு வியந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இறைவனோடு இருந்து இறைவனை போற்றிப் புகழ்ந்து செபிக்கும் மக்கள் மீது பரிவுள்ளவர் நம் இறைவன். அவர்கள் பசியாலோ நோயாலோ அவதிப்படுவதை அவரால் தாங்க முடியாது. தன்னைத் தேடி வந்தோரைத் தவிக்க விடமாட்டார். வாழ்க்கைப் பயணத்தில் வழியில் தளர்ச்சியடைந்துவிட இந்த இயேசு விரும்புவதில்லை. இடம் பாலை நிலமாயினும், நேரம் பொழுது போன நேரமாயினும் தன் மக்களைத் தவிக்க விடாதவர் நம் தெய்வம். இந்த இறைவன் இயேசுவைத் தேடி தொடர்ந்து வரவேண்டும். அவரோடு தங்க வேண்டும். நாளும் பொழுதும் பாராது அவரோடு தங்க வேண்டும். எல்லா சூழலிலும் இறைவனைப்...

கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கை

இயேசுவிடம் உதவி கேட்டு வருகிறவர்கள் பலவிதமான பதில்களைத் தருகிறார்கள். இயேசுவும் அவர்களுக்கு பல கேள்விகளைக் கொடுக்கிறார். எல்லாவற்றிலும் அவர்களது நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, இயேசு அவர்களுக்கு உதவி செய்கிறார். இயேசுவின் இந்த கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேறு வேறாகவே இருக்கிறது. உதாரணமாக, கானானியப்பெண் தன்னுடைய மகளுக்காகப் பரிந்து பேசக்கூடிய நிகழ்ச்சியில் இயேசு முதலில் மறுப்பதற்கான பதில்களையும், மழுப்பலான பதில்களையும் தருகிறார். இறுதியில் அவளது நம்பிக்கை வெற்றிபெறுகிறது. அவளது தேவையை இயேசு நிறைவேற்றுகிறார். இன்றைய நற்செய்தியில், நூற்றுவர் தலைவர் உதவி கேட்ட உடனே, தான் அவரோடு நேரிலேயே வருவதாக வாக்களிக்கிறார். அவரது ஒரு வார்த்தை தன்னுடைய மகனைக் குணப்படுத்தும் என்கிற அந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தில், இயேசு ஆச்சரியம் கொள்கிறார். அவனுடைய தேவையை நிறைவேற்றுகிறார். இரண்டுமே வெவ்வேறு விதமான நிகழ்வுகள், கோணங்கள். ஆனால், இரண்டிலும், கடவுளின் ஆசீரைப் பெற்றுக்கொடுத்தது அவர்களின் உண்மையான நம்பிக்கை. கடவுளிடம் நாம் செல்ல, அவரிடம் உதவி கேட்க...

மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா !

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார். இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம். மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும்...

இயேசுவின் விழுமியங்கள்

இயேசுவின் இன்றைய நற்செய்தி வார்த்தைகள்(லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19), அவரைப் பின்தொடரக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்களாகச் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்தொடர்கிறவர்கள் இவ்வளவு துன்பங்களைச் சந்திக்க முடியுமா? தங்களது உயிரைக் கொடுக்க முடியுமா? இவ்வளவு வேதனைகளுக்கு நடுவிலும், அவர்கள் தங்களது விசுவாசத்தைக் காத்துக் கொள்ள முடியுமா? நமது மனித வாழ்க்கையில் இவையெல்லாம் சாத்தியக்கூறுகளா? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம் நமது வாழ்க்கையில் எழும். ஏனென்றால், இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்ற வார்த்தைகள் கேட்பதற்கே பயங்கரமாக இருக்கின்றன. ஆனால், இயேசுவின் வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள். அவை சாத்தியமே என்பதை வரலாறு கூறுகிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களது உடல் விலங்குகளுக்கும், தீச்சுவாலைகளுக்கும் இரையாகப்போகிற சந்தர்ப்பத்திலும், கொடூரமான உடல் உபாதைகளால், காயப்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கவில்லை. அதற்காக உயிரை விடுவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். ஒரு மனித நிலையில், இது கடினமான ஒன்றுதான். ஆனால், துன்புறுத்தப்படுகிறபோது, நாம் மட்டும் துன்புறுத்தப்படுவதில்லை. கிறிஸ்துவும்...

யெருசலேமின் மேன்மை

யெருசலேம் தேவாலயம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மையமாக இருந்தது. அது ஏதோ வானுயர்ந்த, மகிமைக்குரிய கட்டிடம் மட்டும் அல்ல. மாறாக, அது கடவுளின் பிரசன்னம் நிறைந்த இடம். கடவுள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. பகைவர் முதலில் கைப்பற்ற விரும்பும் இடமாகவும், அது கருதப்பட்டது. அப்படிப்பட்ட யெருசலேமையும், அதன் மையத்தில் அமைந்திருந்த தேவாலயத்தையும் பார்த்து, இயேசு இறைவாக்கு உரைக்கிறார். இயேசுவின் இறைவாக்கு அவரின் உயிர்ப்பிற்கு பிறகு வரலாற்றில் நிறைவேறியது. கி.பி. 70 ம் ஆண்டில், உரோமைப்படைகள் யெருசலேமிற்குள் நுழைந்தன. கற்கள் மேல் கற்கள் இராதபடி, அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான பேர் நாடு கடத்தப்பட்டனர். தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. யெருசலேம் கடவுளுக்கு பிரியமான இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான், அங்கு அவருடைய பிரசன்னத்தைக் காட்டினார். ஆனாலும், இடம் மட்டும் கடவுள் வாழ்வதற்கான காரணமாகிவிடாது. மனிதர்களும் விசாலமானவர்களாக இருக்க வேண்டும். யெருசலேம் கள்வர்களின் குகையாகிப்போனது. ஏழை, எளியவர்களை...