Tagged: இன்றைய சிந்தனை

ஏற்றுக்கொள்ளுதல்

யோசேப்பு கனவில் தனக்கு சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மரியாவை ஏற்றுக்கொண்டார் என்று நற்செய்தி சொல்கிறது. “ஏற்றுக்கொள்ளுதல்” என்பது நமது வாழ்வின் முக்கியமான பண்பு என்றால் அது மிகையாகாது. யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி இது. உதாரணமாக, யோசேப்பின் வாழ்வில் நாம் நடந்ததைப் பார்ப்போம். யோசேப்புவிற்கு மரியா திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர்கள் கூடிவாழும் முன் மரியா கருவுற்றிருக்கிறார். இதனை நமது வாழ்வோடு நாம் தொடர்புபடுத்திப் பார்ப்போம். நமக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிற ஒரு பெண், திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருக்கிறாள் என்கிற செய்தி கேள்விப்பட்டால், நாம் செய்வது என்னவாக இருக்கும்? உடனடியாக திருமணத்தை நிறுத்துவோம். பெண் வீட்டாரை ஏளனம் செய்வோம். மற்ற ஒன்றுமே நமது எண்ணத்திற்குள் வராது. ஆனால், யோசேப்பு அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அது அவரது பெருந்தன்மை அல்ல, மாறாக, நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய திறன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாம் ஒன்றை...

சொந்தக்காரர்களின் சுகம் விசாரியுங்கள்…

லூக்கா 1:39-45 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பழைய காலம் நாம் சோ்ந்தே வாழ்ந்தோம். நம் உறவினர்களை தினமும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் தனித்தீவுகளாக வாழ்கிறோம். நம் சொந்தக்காரர்கள் பெரும்பாரும் நம் அருகில் இருப்பதில்லை. தொழில், படிப்பு காரணமாக வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இப்படி வாழும் நாம் நம் சொந்தங்களின் சுகம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இன்றைய வாசகத்தில் அன்னை மரியாள் நமக்கு மாதிரியாக திகழ்கிறாள். சொந்தங்களை நாடி தேடி போகச் சொல்கிறார். நலம் விசாரிக்க சொல்கிறார். செய்வோம் இரண்டு வழிகளில்: 1. பரிசோடு பார்ப்போம் நாம் நம்முடைய சொந்தங்களோடு நல்ல உறவில் இருப்பது மிகவும் சிறந்தது. அவர்கள் நமக்கு...

வானதூதரே! வாழ்த்த வருவாரே…

லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் வாழ்க்கை பரிசுத்தமானது. அவர் வாழ்ந்த குடும்பத்தில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றார். ஆகவே உலகில் உள்ள இருளின் வசம் தன் வாழ்வை ஒப்படைக்காமல் ஒளியின் மகளாக பிரகாசித்து வந்தார். சுடர்ஒளியாய் வாழ்ந்து வந்தார். அவர் தன் மிகச் சிறப்பான வாழ்வால் வானதூதரை மண்ணகம் இறங்க வைத்தார். வானதூதரே அவருடைய வாழ்வால் அவரை இம்மானுவேலின் தாயாக மாறும் பாக்கியத்திற்காக தோ்ந்தெடுத்தார். இவையனைத்தும் கடவுளின் திட்டமே!. இது கிடைத்தது மரியாள் செய்த பாக்கியமே! நாமும் வானதூதரை சந்திக்க இரு செயல்களை செய்தால் போதும். 1. அமைதி மிகவும் அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். அதிகமாக குதிக்க கூடாது. பெருமை...

இகழ்ச்சி இன்றிலிருந்து இருக்காது…

டிசம்பர் – 19 லூக்கா 1:5-25 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். செக்கரியா – எலிசபெத்து தம்பதியினர் பிள்ளை இல்லாமல் மிகவும் இகழ்ச்சிக்குள்ளாயிருந்தனர். அக்கம் பக்கத்தார் அவர்களை அதிகம் வார்த்தைகளால் குத்தினர். அவர்கள் மனம் பாரமாக இருந்தது. அந்த பாரத்தை, அந்த இகழ்ச்சியை ஆண்டவர் நீக்குவதை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன் வைக்கிறது. அவர்களின் இகழ்ச்சியை நீக்கிய ஆண்டவர் நம் இகழ்ச்சியையும் நீக்குவார் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது இன்றைய வழிபாடு. அதற்காக நாம் மனதில் நிறுத்த வேண்டிவைகள் இரண்டு: 1. கடவுள் மறப்பதில்லை பல நாட்கள் கடந்திருக்கலாம். ஆனால் நாம் கேட்டது கண்டிப்பாக நடக்கும். நாட்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கிறதே கிடைக்குமா? என்று நினைக்க வேண்டியதில்லை. செக்கரியா –...

ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்

திருப்பாடல் 72: 1 – 2, 12 – 13, 18 – 19 ஆண்டவருடைய காலம் என்பது எதைக் குறிக்கிறது? இஸ்ரயேல் மக்கள் எப்போதும் இந்த மண்ணக வாழ்வை, தற்காலிகமானதாகவே பார்த்தார்கள். அரசர்கள் அவர்களை ஆள்வதையும் அப்படியே பார்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கடவுள் வருவார் என்கிற நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார்கள். அந்த நம்பிக்கை தான், மெசியா வருவார் என்கிற நம்பிக்கையை, அவர்களுக்குக் கொடுத்தது. அதற்காகவே, அவர்கள் தங்கள் வாழ்வை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த பிண்ணனியில், ஒரு சில அநியாயமான செயல்கள் நடைபெற்றாலும், அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. கண்டிப்பாக, கடவுள் வந்து இந்த அநியாயங்களை அகற்றி, நீதியை தழைத்தோங்க செய்வார் என்று உறுதியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல். ஆண்டவரின் அரசு நிச்சயமாக இந்த உலகத்தில் மலரும். அந்த அரசு மலர்கிறபோது, அது ஏழைகளுக்கான அரசாக இருக்கும். மக்கள் விரும்புகிற அரசாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட...