Category: இன்றைய வசனம்

குறிப்பேடு (நாளாகமம்) – முதல் நூல் 16:11

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்: அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! குறிப்பேடு (நாளாகமம்) – முதல் நூல் 16:11

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:165

உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:165

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 10:12

பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்: தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும். நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 10:12

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:5

கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:5

லூக்கா நற்செய்தி 1:68

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். ~லூக்கா நற்செய்தி 1:68