Category: இன்றைய வசனம்

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 138:8

நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 138:8

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 5:7

நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். உரோமையருக்கு எழுதிய திருமுகம் 5:7

திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 5: 24

சிலருடைய பாவங்கள் வெளிப்படையானவை. அவர்களுடைய பாவங்கள் தீர்ப்புக்காக அவர்களுக்கு முன்னே சென்று சேர்கின்றன. வேறு சிலருடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னே வந்து சேர்கின்றன. ~ திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 5: 24

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:5

நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:5

மத்தேயு நற்செய்தி 5:11

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! ~ மத்தேயு நற்செய்தி 5:11