Category: இன்றைய வசனம்

சபை உரையாளர் (சங்தகத் திருவுரை ஆகமம்) 7:9

உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே: மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம். ~சபை உரையாளர் (சங்தகத் திருவுரை ஆகமம்) 7:9

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 34:14

தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 34:14

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:3

உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:3

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 13:34

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ‘ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 13:34

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 37:4

ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 37:4