Category: இன்றைய வசனம்

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:17

ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! ~கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:17

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 10:17

நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்; மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 10:17

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 22:4

தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 22:4

எசாயா 43:19

இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்: இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்: பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். ~ எசாயா 43:19

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 4:17

நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம். ~ யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 4:17