Category: இன்றைய வசனம்

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:114

நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்; உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:114

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ~பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 12:6

ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை. ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 12:6

எசாயா 42:9

முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன: புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்: அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். ~எசாயா 42:9

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:8

நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல: மாறாக இது கடவுளின் கொடை. ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:8