Category: இன்றைய சிந்தனை

தாழ்ச்சியோடு வேண்டுதல் செய்வோம்

இரண்டு மனிதர்கள் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கிறார்கள். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். ஆனால், இரண்டு பேரும் செபித்தார்களா? உண்மையில் யாருடைய செபம், கடவுளால் கேட்கப்பட்டது? யார் உண்மையில் செபித்தார்கள்? என்பதை, நாம் பார்ப்போம். முதலில் பரிசேயர். அவருடைய வார்த்தைகள் நிச்சயமாக செபம் அல்ல, மாறாக, அது தற்புகழ்ச்சி. தன்னைப்பற்றி கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்புகழ்வதில் அதிக சிரத்தை எடுக்கிறார். கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்பற்றி சொல்வதில், அவர் ஆர்வம் காட்டுகிறார். இது உண்மையான செபம் அல்ல. தற்புகழ்ச்சியும், செருக்கும் என்றைக்குமே நமக்கு அழிவைத்தான் தரும். கர்வம் கொண்டவர்கள் நிச்சயம் செபிக்க முடியாது. வரிதண்டுபவர் தொலைவில் நிற்கிறார். கடவுளிடத்தில் நெருங்கிவர தனது பாவங்கள் தடையாக இருப்பதாக எண்ணுகிறார். அவரிடத்தில் குற்ற உணர்ச்சி காணப்படுகிறது. தன்னை மிகப்பெரிய பாவியாக எண்ணுகிறார். இது தற்புகழ்ச்சிக்கு இடங்கொடாமல், தன்னை ஒறுத்து, கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடு நிற்பதற்கு ஒப்பாக இருக்கிறது. செபம் என்பது நமது நிலையை உணர்வது. கடவுள் முன்னிலையில் நம்மையே...

பழிவாங்கல்

பெரிய ஏரோது, தனக்குப் பிறகு தான் ஆண்ட நிலப்பரப்பை, தனது மூன்று மகன்களுக்கும் பிரித்துக்கொடுத்தான். யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா பகுதிகளுக்கு ஆர்க்கிலாஸ் பொறுப்பாகவும், கலிலேயா, பெரீயா பகுதிகளுக்கு ஏரோது அந்திபாசும் மற்றும் யோர்தானின் கிழக்குப்பகுதிகளுக்கு உட்பட்ட பரப்பிற்கு பிலிப்பும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். இதில், ஆர்க்கேலாஸ், நிர்வாத்திறமை இல்லாதவனாக இருந்தான். உடனே, உரோமையர்கள் அவரைப் பதவியில் இருந்து எறிந்துவிட்டு, உரோமை ஆளுநரைப் பொறுப்பாக நியமித்தனர். அந்த உரோமை ஆளுநர் தான் பிலாத்து. பிலாத்து, ஒரு பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று கட்ட வேண்டும், என்று முடிவு செய்கிறான். அதற்கு நிறைய பணம் தேவை. அதை யெருசலேம் தேவாலயத்திலிருந்து எடுக்க முடிவு செய்கிறான். ஏனென்றால், யெருசலேம் ஆலயம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் கீழாக வரக்கூடிய பகுதி. பிலாத்துவின் இந்த முயற்சிக்கு, யூதர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், யெருசலேம் தேவாலயத்தில் செலுத்தப்படும் காணிக்கை கடவுளுடையது, கடவுளுக்கு உரியது. அதை வேறு யாரும் எடுத்து, வேறு...

பகைமை நமக்குள் வேண்டாம்

கடவுளை நாம் சந்திக்க, நமக்கு தடைக்கல்லாக இருப்பதோ, அல்லது கடவுளை எதிர்கொள்ள நாம் வலுவில்லாமல் இருப்பதற்கோ, முக்கியமான காரணம், நமது பகைமை உணர்வு. மன்னிப்பு தான் நாம் அடைய வேண்டிய இலக்கு என்பது, கிறிஸ்தவத்தின் அடித்தளம். அது சிறிது காலம் எடுக்கலாம். அந்த இலக்கு என்றாவது ஒருநாள் நாம் அடைந்தே ஆக வேண்டும். அந்த பகைமை உணர்வை எவ்வளவு விரைவாக, நம்மிடமிருந்து நம்மால் அகற்ற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அகற்றுவது நமக்கு நல்லது, என்பதுதான் இன்றைய நற்செய்தி நமக்குத்தரும் செய்தியாக இருக்கிறது. இந்த உலகத்தில் நாடுகளுக்கு இடையே வெறுப்புணர்வு அதிகமாக இருக்கக்கூடிய காலக்கட்டம் இது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்காக பல வேளைகளில், இது போன்ற பகைமையுணர்வுக்கு, தீனி போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள், அவ்வப்போது, இவற்றைத்தூண்டிவிட்டு, அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இருக்கிற பகைமை உணர்வுக்கு நாம் விலை...

இறைவனின் இரக்கம்

இயேசுவை மெசியாவாக பார்த்தவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் நிச்சயம் அதிர்ச்சியையும், வியப்பையும் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், மெசியாவின் காலம் பொற்காலமாகக் கருதப்படும் என்றும், மெசியா மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்றும் மக்கள் நம்பினர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளையுமே நிறைவேற்றுவதாக தெரியவில்லை. தீ என்பது தீர்ப்பைக்குறிக்கக்கூடிய உருவகம். இயேசு மனுமகன் மீண்டும் வரும்நாளை தீர்ப்பு நாளாகக்கருதுகிறார். மெசியா வரும்போது இஸ்ரயேல் மக்களைத்தவிர அனைத்து மக்களையும் தீர்ப்புக்குள்ளாக்குவார் என்று யூதர்கள் நினைத்தனர். யூத குலத்திலே பிறந்தாலே மீட்பு உறுதியாகிவிட்டதாக அவர்கள் நம்பினர். யூத குலத்தில் பிறந்தாலே தங்களுக்கு கடவுளின் மன்னிப்பு கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவர்களிடையே ஆழமானதாக இருந்தது. எனவே தான் அவர்கள் தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், கடவுளின் உரிமைச்சொத்தாகவும் தங்களைக்கருதினர். ஆனால், இயேசுவின் போதனை அவர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தைக்கொடுத்தது. ”நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு உகந்தவர்களாக முடியும்” என்று யாக்கோபு (2: 24) தன்னுடைய திருமுகத்திலே குறிப்பிடுகிறார். நமது வாழ்வு...

விவேகமுள்ள பணியாள்

அறிவாளி யார்? அறிவீனன் யார்? என்பதற்கு இயேசு இன்றைய உவமை வாயிலாக பதில் சொல்கிறார். மத்திய கிழக்குப் பகுதியில், வேலைக்காரர்களுக்கு அதிகமான அதிகாரத்தை தலைவர் கொடுத்திருந்தார். ஒரு வேலைக்காரன் அடிமையாக இருக்கலாம். ஆனால், மற்ற வேலைக்காரர்களுக்கு, அவனைப் பொறுப்பாக தலைவர் நியமிக்கிறபோது, அவனுக்கு நிச்சயம், அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுகிற அதிகாரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறவனே, அறிவாளி, மற்றவன் அறிவீனன் என்பது, இயேசு தரக்கூடிய செய்தி. அறவீனனாக இருக்கிற வேலையாள் இரண்டு தவறுகளைச் செய்கிறான். 1. ”தன் மனம் நினைத்ததை செய்ய வேண்டும்” என்று தனக்குள்ளாக நினைக்கிறான். தலைவர் அவனிடம் பொறுப்பைத்தான் விட்டிருக்கிறார். அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, தலைவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது வேலைகளை நான் செய்துகொண்டிருப்பேன், என்று நினைக்காமல், தலைவர் இருந்தால் ஒன்று, இல்லையென்றால் ஒன்று, என்று, அவன் நினைக்கிறான். இது நேர்மையற்றத்தனம். 2. ”தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார்”. தான் செய்வது நேர்மையற்றத்தனம் என்பது, அந்த வேலைக்காரனுக்கு தெரிந்தே இருக்கிறது....