Category: இன்றைய சிந்தனை

செயல்பாடுகளும், எண்ணங்களும்

நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறபோதும், நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கிறபோதும், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறபோதும் அதனை நாம் உடனே செய்ய வேண்டும். பல வேளைகளில் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் செய்வதில்லை. அந்த கணம் மறைந்தபிறகு, அதனை நிச்சயமாக செய்ய முடியாது. அதேபோல ஒருவருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த நேரத்தில் சொல்லவில்லை என்றால், அந்த கணம் மறைந்துவிடும். அதற்கு பிறகு அதேபோ ஒரு தருணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அதேபோலத்தான் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தாலும், நாம் உடனடியாக இரக்கம் காட்ட வேண்டும். அல்லது நாம் அதைச்செய்யவே முடியாது. இதுதான் இன்றைய நற்செய்தியிலும் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்பற்ற ஒருவன் விரும்புகிறான். அவன் உடனடியாக பின்பற்றுவதற்கு தயங்குகிறான். அதற்கு பல காரணங்களையும் சொல்கிறான். இயேசுவின் அனுபவத்தில் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த கணம்...

இறைநம்பிக்கை எது?

தொழுகைக்கூடத்தலைவர் பதவி என்பது யூத மக்களால் மதிப்பும், மரியாதையுமிக்க ஒரு பதவி. தொழுகைக்கூடத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவர்தான் பொறுப்பு. அப்படிப்பட்ட நபர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்தார் என்பது ஆச்சரியமான செய்தி. ஏனென்றால், இயேசுவின் போதனைகளும், புதுமைகளும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மேல்மட்டத்தலைவர்களிடையே வெறுப்பைத்தான் சந்தித்திருந்தது. இயேசுவைப்பற்றி தவறான எண்ணங்கள் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. அதனால் தான், தொடக்கத்தில் தொழுகைக்கூடங்களில் போதிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பிற்காலத்தில் அவ்வளவாக இயேசுவுக்கு கிடைத்திருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவைத்தேடி வருவது, மேல்மட்டத்தலைவர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரைப்பெற்றுத்தரலாம். அதையெல்லாம் மீறி அவர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்திருப்பது, இயேசுவின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மகள் மீது வைத்திருந்த பாசம். சிறுமி இறந்துவிட்டாள். போதகரைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற செய்தி கிடைத்தபோதிலும், இயேசு அவரிடத்திலே நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கச்சொல்கிறார். தொழுகைக்கூடத்தலைவர் வந்ததே நம்பிக்கையில்தான். ஏனெனில் அவருடைய மகள் வருகின்றபோதே சாகுந்தருவாயில் இருந்தார். அதாவது, மருத்துவர்களால்...

இயேசுவின் பரந்த மனம்

இயேசுவின் இன்றைய வார்த்தைகள், யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போடுகின்ற வார்த்தைகள். நூற்றுவர் தலைவன், தனது பையனை குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சனையும் அவருக்குத் தெரியும். யூதச்சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டிற்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை. இயேசு ஒரு யூதர். நூற்றுவர் தலைவன் ஒரு புற இனத்தவர். இந்த சிக்கல் இரண்டு பேருக்குமே தெரியும். அப்படியிருந்தும், இயேசு ”நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொல்கிறார். இயேசு தெரியாமல் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் பதிலை, எதிர்வினையை எதிர்பார்த்துச் சொல்கிறார். இங்கே தான், நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசம் வெளிப்படுகிறது. அந்த விசுவாசத்தை பாராட்டும் இயேசு, அடுத்த ஒரு இடி போன்ற செய்தியை அறிவிக்கிறார். அதாவது, ”கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்த செய்தி. மெசியா வருகிறபோது,...

எல்லாவகை அச்சத்தினின்றும் ஆண்டவர் விடுவித்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களுக்கு இயல்பாகவே அச்சம் என்பது உள்ளத்திலே இருக்கிறது. அந்த அச்சம் பலவிதமான காரணங்களுக்காக ஒருவருக்குள் எழலாம். இருளைப் பார்த்து ஒரு சிலர் பயப்படலாம். படிப்பைப் பார்த்து பயப்படலாம். பாம்பைப் பார்த்து பயப்படலாம். எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்ளலாம். மனிதர்கள் அச்சம் கொள்வதற்கு ஏராளமான காரியங்கள் இந்த உலகத்திலே இருக்கிறது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட அச்சம் இருந்தாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை, ஆண்டவர் அச்சத்தினின்று விடுவிக்கிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர் நிச்சயம் அச்சம் கொள்ளமாட்டார். ஏனென்றால், கடவுளின் பிரசன்னம் தன்னோடு இருப்பதாக அவர் உணர்கிறார். நெருக்கடி வேளையில் ஆண்டவர் கைதூக்கி விடுவார் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. எத்தகைய தீங்கு வந்தாலும், கடவுள் நிச்சயம் பாதுகாப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால்,...

செயல்பாடுள்ள கிறிஸ்தவர்கள்

இயேசு வாழ்ந்த காலம் புதுமைகளுக்கு பெயர் போன காலம். பல போதகர்களால் புதுமைகளும் அற்புதங்களும் அரங்கேறின. புதுமைகள் பொதுவாக நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இருந்தன. பல நோய்கள் உளவியல் நோய்களாக இருந்தன. கடவுளின் பெயரைச்சொல்லி வேண்டுகிறபோது, கடவுள் மீது உள்ள நம்பிக்கை, பல பேருக்கு சுகத்தை கொடுத்தது. இந்த பிண்ணனியில் தான், நாம் இந்த நற்செய்தி வாசகத்தைப் புரிந்து கொள்ள முடியும். தொடக்ககால திருச்சபை தலைவர்கள், புதுமைகளை மறுக்கவில்லை. தொடக்ககால திருச்சபையில் இயேசுவை நம்பாத சிலரும், உதட்டளவில் இயேசுவின் பெயரைச் சொல்லி, பல பேய்களை ஓட்டினர். ஆனால், கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெயரைச் சொல்லி காரியம் சாதிக்கிறபோது, அதற்கான விளைவை, அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயேசு கொடுக்கிற எச்சரிக்கை செய்தி. புதுமைகள் செய்வதனாலோ, கடவுளின் பெயரால் காரியங்கள் சாதிப்பதனாலோ, ஒருவர் கடவுளுக்கு உகந்தவர் ஆகிவிட முடியாது. கடவுளுக்கு ஒருவர் உகந்தவர் ஆக வேண்டுமென்றால், கிறிஸ்தவத்தை முழுமையாக வாழ முயற்சி எடுக்க...