Category: இன்றைய சிந்தனை

என் மக்கள் எனது குரலுக்கு செவிகொடுக்கவில்லை

திருப்பாடல் 81: 11 – 12, 13 – 14, 15 – 16 வேதனையினாலும், வருத்தத்தினாலும் வெளிப்படுகிற வார்த்தைகள் தான், இந்த திருப்பாடலில் வருகிற வார்த்தைகள். இறைவனுடைய பார்வையிலிருந்து இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன. தான் செய்த நன்மைகளையும், அற்புதங்களையும் மறந்து, வேறு தெய்வங்களை மக்கள் நாடிச்சென்று விட்டார்களே? என்கிற வருத்தத்தை இந்த பாடலில் நாம் பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களின் உள்ளம் எந்த அளவுக்கு கடினமானதாக மாறிவிட்டது என்கிற ஏக்கத்தையும் இந்த பாடல் நமக்கு ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. இஸ்ரயேல் மக்களின் நன்றியற்றத்தனம் இங்கே வெளிப்படுத்தப்பட்டாலும், கடவுளின் அன்பில் எந்த குறையும் இல்லை என்பதும், இங்கே நமக்குத்தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் மட்டும், கடவுளின் குரலைக் கேட்டிருந்தால், இவ்வளவுக்கு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்காதே என்று கடவுள் வேதனைப்படுகிறார். நடந்தது நடந்து விட்டது. இவ்வளவு நடந்த நிகழ்வுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் தான் காரணம் என்றாலும், கடவுள் அதனை பொருட்படுத்தாமல், அவர்களின் எதிரிகளை அழிக்க...

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்

திருப்பாடல் 67: 1 – 2, 4, 6 – 7 இறைவனின் ஆசீரை முழுமையாகப் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிற ஒரு தாகமுள்ள மனிதனின் குரல் தான் இந்த திருப்பாடல். இறைவனின் ஆற்றலைக்கொண்டு எதையும் செய்ய முடியும் என்று, இறைவல்லமையின் மீது ஒரு மனிதன் வைத்திருக்கிற, அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது. இறைவனை அறியாத, அனுபவிக்காத இந்த உலகத்திற்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற தீராத ஆசையையும் இந்த பாடல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இறைவனுடைய ஆசீர் கிடைத்தால் என்ன செய்யவிருப்பதாக ஆசிரியர் கூறுகிறார்? இறைவனுடைய ஆசீரை திருப்பாடல் ஆசிரியர் தன்னுடை சுயநலத்திற்காகக் கேட்கவில்லை. மாறாக, அவர் இறைவனின் வல்லமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்கிறார். ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டுமென்றால், அவர் தன்னுடைய வலிமையை நிரூபிக்க வேண்டும் என்கிற பார்வையைக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இது புரிந்து கொள்ளக்கூடியது. மனித உணர்வுகளில் ஆசிரியர் பேசுகிறார். இதனை...

நமது வலிமையாகிய கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்

திருப்பாடல் 81: 2 – 3, 4 – 5, 9 – 10 கடவுளை வலிமையானவராக இந்த திருப்பாடல் சித்தரிக்கிறது. கடவுளின் வலிமையை புகழ்ந்து பாடுவதாகவும் இது அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் பார்வையில் பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும், கடவுள் தான் வலிமையுள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தான் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவர். எகிப்தில் இருக்கிற தெய்வங்களையெல்லாம் தோற்கடித்து விட்டு, அவர்களுக்கு வெற்றி தேடித்தந்தவர். அந்த கடவுளிடம் உண்மையான விசுவாசம் உள்ளவர்களாக இருக்கும்படி, இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஒரு விளையாட்டு வீரரை எடுத்துக்கொண்டால், அவருக்கென்று பலம் இருக்கும், பலவீனமும் இருக்கும். அவருடைய பலம் தான், அவருடைய வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். அந்த பலத்தில் தான், அவர் களத்தில் போராடுகிறார். அந்த பலத்தில் தான், வெற்றிகளைக் குவிக்கிறார். இங்கே, கடவுளை இஸ்ரயேல் மக்களின் பலமாக, ஆசிரியர் குறிப்பிடுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இருக்கிறவரை, எவராலும் அவர்களை வீழ்த்திவிட முடியாது. அதேவேளையில், கடவுள்...

நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்

திருப்பாடல் 99: 5, 6, 7, 9 ர் கடவுளைப் போற்றுவதற்கும் மகிமைப்படுத்துவதற்கும் திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால் அவர் தூயவர் என்று ஆசிரியர் சொல்கிறார். இங்கே கடவுளுக்கு “தூய்மை“ என்கிற அடையாளம் கொடுக்கப்படுகிறது. தூயவர் என்பது அப்பழுக்கற்றவர் என்பதாக அர்த்தம் கொள்ளலாம். வெள்ளை மனம் உடையவர். புனிதத்தின் நிறைவாக ஆண்டவர் இருக்கிறார். எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும், இஸ்ரயேலின் கடவுளுக்கு நிகரான தூய்மை யாரிடமும் இல்லை என்பது இங்கு தரப்படுகிறது கூடுதல் செய்தி. தூய்மையின் உறைவிடமாக இருக்கிற இறைவனை நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது தான், நமக்கு கொடுக்கப்படுகிற சிந்தனையாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியிலும் இதே சிந்தனை தான் நமக்குத்தரப்படுகிறது. புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த புதையலை தனதாக்கிக் கொள்கிறார். விலையுயர்ந்த முத்தைக் காணக்கூடிய ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். அதேபோல, தூய்மையின் ஆண்டவரை நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டும். அவர் தான் நாம் பெறுதற்கரிய...

ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமை வாழ்வை வழங்குகிறார்

திருப்பாடல் 103: 6 – 7, 8 – 9, 10 – 11, 12 – 13 மனிதரின் பார்வை வேறு, இறைவனுடைய பார்வை வேறு. இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள், தங்களுக்கென்று ஒரு சில ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அது முற்காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், தற்காலத்தில் அதனை தொடர்ந்து கொண்டே வருகின்றனர். எந்த ஒரு சமூகமும் எப்போதும் ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தே வந்திருக்கிறது. நியாயம், அநியாயம் என்று பாராமல், பிறப்பின் அடிப்படையில் ஒருவரை மதிக்காமலும், ஒருவருக்கு தேவையில்லாத மரியாதையையும் இந்த சமூகம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், இறைவன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, இறைவன் அவர்களுக்கு உதவி செய்தார். அவர்கள் அடிமைத்தளையிலிருந்து மீண்டு எழுவதற்கு உதவி செய்தார். அவர்களும் மற்றவர்கள் முன்னிலையில் மதிக்கப்பட, மாண்போடு வாழ அவர்களை கரம் பிடித்து தூக்கிவிட்டார். அதேவேளையில்...