Category: இன்றைய சிந்தனை

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்

திருப்பாடல் 85: 8ab, 9, 10 – 11, 12 – 13 கேட்கக்கூடிய பழக்கம் இன்றைய நவீன தலைமுறையினரிடத்தில் குறைந்து கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குடும்பத்தின் பெரியவர்கள் அந்த குடும்பத்தை வழிநடத்தி வந்தார்கள். அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. சரியா? தவறா? என்கிற விவாதமெல்லாம் அங்கே கிடையாது. அந்த குடும்பத்தின் பெரியவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். அவருக்குரிய மரியாதையைக் கொடுத்தார்கள். இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திற்கு, இதுபோன்ற நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கக்கூடிய நிகழ்வுகள். ஏனென்றால், இது போன்ற நிகழ்வுகளை இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இன்றைய திருப்பாடலில், நாம் அனைவரும் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்கிற செய்தி நமக்குத் தரப்படுகிறது. இறைவன் தான் நமக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும். இறைவனின் குரலுக்கு, நம்முடைய முதுபெரும் தந்தை ஆபிரகாம் எப்படி பணிந்தாரோ, அதேபோல நாமும் பணிந்து நடக்க வேண்டும் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இறைவனின்...

உங்களால் உலகையே உருட்ட முடியும்

மத்தேயு 17:14-20 நம் யாவே கடவுள் ஆற்றல் நிறைந்தவர். சக்தி நிறைந்தவர். அவரின் ஆற்றலால் அனைத்தும் நடக்கும். இதை தொடக்கநூல் 18:13ல் வாசிக்கிறோம், ”ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ? மேலும் லூக்கா 1:37ல், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என வாசிக்கிறோம். உருவமற்று வெறுமையாக இருந்த மண்ணுலகை பசுமையான சோலையாக மாற்றிய சர்வ வல்லமைமிக்க கடவுள் யாவே கடவுள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தந்தையைப் போல அதிவேக அற்றலுடன் செயல்பட்டார். வார்த்தையினால் வாழ்வு அளித்தார். பாவிகளை தொட்டார். மனமாற்றத்தை உருவாக்கினார். அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்தார். கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாமும் சக்திமிக்வர்கள் தான். அதிக அற்றல் கொண்டவர்கள் தான். இதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிக அழுத்தத்துடன் அறிவிக்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை. அதற்கு கீழே உள்ள கண்டுபிடிப்பு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியில் இல்லை. நமக்குள்ளேதான் இருக்கிறது...

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

மேகமும், காரிருளும் ஆண்டவரைச் சூழ்ந்துள்ளன

மேகம் என்பது கடவுளோடு நெருங்கிய தொடர்புடைய வார்த்தையாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைபெற்று வருகிறபோது, கடவுள் பகலில் மேத்தூணாக நின்று, அவர்களைப் பாதுகாத்தார். இங்கே மேகத்தூண் கடவுளின் உடனிருப்பைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. கடவுள் விண்ணகத்தில் இருக்கிறார். விண்ணகம் மேலே இருப்பதாக மக்கள் நம்பினர். ஆக, கடவுளைச்சூழ்ந்து நிற்பதுதான் மேகங்கள் என்று மக்கள் நம்பினர். நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து திருமுழுக்கு பெறுகிறபோது, வானம் பிளவுபட்டு அங்கிருந்து இறைத்தந்தையின் குரலொலி கேட்பதை நாம் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வில் இதனைப்பார்க்கிறோம். மேகத்தினின்று இறைத்தந்தையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இவ்வாறு மேகங்கள் கடவுளின் உடனிருப்பை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதேபோல, மேகங்கள் இந்த உலகத்திற்கு பொதுவானவை. எங்கும் நிறைந்திருப்பவை. இறைவனும் அனைவருக்கும் பொதுவானவர், எங்கும் நிறைந்திருக்கிறவர் என்பதை இங்கு நாம் கற்றுக்கொள்ளலாம். எங்கும் நிறைந்திருக்கிற இறைவனில் நாம் தந்தைக்குரிய கண்டிப்பையும், தாய்க்குரிய பாசத்தையும் கற்றுக்கொள்வோம். அது நமக்கு...

கடவுளின் வரத்திற்காக காத்திருப்பது தவறா?

மத்தேயு 15:21-28 கடவுள் நல்லவர். நம்பிக்கையோடு நாம் கேட்ட அனைத்தையும் நமக்கு தரக்கூடியவர். ஒருசில நேரங்களில் நாம் கேட்ட மன்றாடடுக்கள் அனைத்தும் மிக விரைவில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நாம் காத்திருந்து தான் பெற வேண்டியிருக்கும். நம் அன்புக் கடவுள் நம்மை அதிகமாகவே அன்பு செய்கிறார். அவர் நமக்கு எதையும் தராமல் மறுப்பதில்லை. மாறாக வாரி வழங்கும் வள்ளல் அவர். ”பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என்ற இந்த இறைவார்த்தைகள் அவரின் அதிகப்படியான அன்பை எடுத்துக்காட்டுகின்றன. இதை உணராமல் நாம் பல வேளைகளில் அவசரப்படுகிறோம். நான் கேட்ட வரத்தை கடவுள் இன்னும் தரவில்லையே என்று மிகவே அவசரப்படுகிறோம். அப்படி அவரசப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. கானானியப் பெண் பேய் பிடித்திருந்த தன் மகள் குணம் பெற...