Category: இன்றைய சிந்தனை

திருமண வாழ்வில் அதிக மகசூல் எப்படி?

மத்தேயு 19:3-12 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமணம் என்பது மனிதர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சி ஆகும். திருமணம் என்பது காதலிப்பது போன்று இல்லை. இதில் விட்டுக் கொடுப்பது, நிதானம், ஒத்தச் செயல் செய்வது, விதிமுறைப்படி நடப்பது, குழந்தைகள் வளர்ப்பு போன்றவை அடங்கும். திருமணம் என்பது எதிர்-எதிர் பாலர் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கும் தனி உலகம். திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும். அதைப்போல திருமண தம்பதியனர் எதிர் வரும் பிரச்சினைகள், சவால்கள் அனைத்தையும் சமாளித்து பயிர்களை போன்று குறிப்பிட்ட காலத்திற்குள்...

பழிவாங்கல்: தொடர் பகை தலைவிரித்தாடும்

மத்தேயு 18:21-19:1 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் செய்யும் தவறை மன்னிக்க முடியாமல் பழிவாங்கிக் கொண்டிருக்கும், பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய நற்செய்தி வாசகம் “போதும், உங்கள் செயலை நிறுத்துங்கள்” என்ற அறைகூவலோடு வருகின்றது. பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழிவாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும். வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழமாக புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன....

உறவே வாழ்வின் ஆணிவேர்

உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து. உறவில்லாமல் வாழ்வு இல்லை என்பதை இயேசு நற்செய்தியிலே சுட்டிக்காட்டுகிறார். உறவிலே விரிசல் ஏற்படுகின்றபோது, அந்த விரிசலை சரிசெய்ய எல்லாவித முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். விரிசலை அதிகப்படுத்துகின்ற செயல்களை நாம் செய்யக்கூடாது எனவும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். யாராவது நமக்கு எதிராக தவறு செய்தால், முதலில் நமக்குள்ளாகவே அதைப்புரிந்துகொண்டு, நம் உள்ளத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. அதை சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். முதலில் நாமாக சென்று சீர்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், நம்பிக்கைக்குரியவர்களின் துணைகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். எது எப்படியென்றாலும், உறவை சரிசெய்வதில் தாமதிக்கக்சகூடாது என்கிற கருத்து ஆணித்தரமாக வலிறுத்தப்படுகிறது. கடவுளும் நாம் தவறுகள் எவ்வளவு. செய்தாலும், நம்மை மன்னித்து ஏற்றுக்கொண்டு நமக்கு புதுவாழ்வைத்தந்திருக்கிறார். அதற்காக, தன்னுடைய ஒரே மகனின் உயிரையே பலியாகத்தந்திருக்கிறார். கடவுளோடும், சக மனிதர்களோடும் நல்ல உறவோடு வாழக்கூடிய அருளிற்காக மன்றாடுவோம். கடவுள் நாம்...

இறைவார்த்தை நம்மை ஆட்கொள்ளட்டும்

எசேக்கியேல் 2: 8 – 3: 4 இன்றைய வாசகத்தில், ஆண்டவர்,எசேக்கியேலைப் பார்த்து கூறுகிறார்: ”உன் வாயைத் திறந்து நான் தருவதைத் தின்றுவிடு…….. நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்ன கொடுத்தார்”. வார்த்தைகளைத் தின்பது, வார்த்தைகள் அடங்கியுள்ள சுருளேட்டைத் தின்பது என்கிற செய்தி, நமக்கு புதுமையாக இருந்தாலும், விவிலியத்தில் இது புதிதாக கொடுக்கப்படுகிற சிந்தனை அல்ல. ஏற்கெனவே ஒரு சில பகுதிகளில், இது போன்ற சிந்தனைகள் தரப்பட்டிருக்கின்றன. எரேமியா 15: 16, ”நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன”. யோவான் 6: 53 – 58 பகுதியும், இயேசு எப்படி வாழ்வு தரும் உணவாக இருக்கிறார் என்றும், அவருடைய சதையாக நமக்குத் தரப்படுகிற இறைவார்த்தையை உண்பவர்கள் வாழ்வு பெறுவார் என்று நமக்கு அழைப்புவிடுக்கிறார். திருவெளிப்பாடு 10: 8 – 9, ”விண்ணகத்திலிருந்து நான்...

முகமலர்ச்சியோடு கொடுப்போம்

2கொரிந்தியர் 9: 6 – 10 கொடுத்தல் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான பண்பாகும். எனவே தான், தாய்த்திருச்சபை இறைமக்களின் பகிர்வை அதிகமாக எதிர்பார்க்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைப்பும்விடுக்கிறது. குறிப்பாக, திருச்சபையின் முக்கியமான விழாக்களிலும், முக்கியமான காலங்களிலும், கொடுத்தலை அதிகமாக வலியுறுத்திச் சொல்கிறது. கொரிந்து நகர மக்களுக்கு, கொடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்கிற செய்தியை, தூய பவுலடியார் வழங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். நாம் கொடுக்கிறபோது, முகமலர்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று தூய பவுலடியார் கூறுகிறார். நாம் கொடுப்பது கட்டாயத்தினால் இருக்கக்கூடாது. அல்லது இதனை நான் கொடுத்து தான் ஆக வேண்டுமா? என்கிற இரண்டுவிதமான மனநிலை கொண்டும் கொடுக்கக் கூடாது. இறைவன் எனக்கு தந்திருக்கிறார். இறைவனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பெற்றுக்கொண்ட இந்த கொடையை, நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும்....