Category: இன்றைய சிந்தனை

தவறுகளை தனியே திருத்து…

மத்தேயு 1:18-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிலர் தவறுகள் செய்யும்போது உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு நாம் பொது இடத்திலே திருத்த விழைகிறோம். இதனால் தவறு செய்தவரின் மனம் உடைகிறது. இப்படி செய்வதனால் அவருக்குள் இருக்கும் மகிழ்ச்சியும் மறைகிறது. தவறு செய்தவரை எப்படி திருத்த வேண்டும் என்பது பற்றி யோசேப்பு இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லித் தருகிறார். அன்னை மரியாள் அவரோடு கூடி வாழும் முன் அவர் கருவுற்றிருந்தது அவருக்கு தெரியவந்தது. இருப்பினும் அவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிடத் திட்டமிட்டார். நாமும் மறைவாக தனியே அழைத்து தவறுகளை திருத்தினால் இரண்டு ஆச்சரியங்கள் நடக்கும். 1. அடுத்தவருக்கு உயர்வு தவறுகளை பொதுவில் சுட்டிக்காட்டும்போது அந்த...

மூதாதையரை நினையுங்கள் இன்று…

மத்தேயு 1:1-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நமக்கு வழங்குகிறது. இது நம் மூதாதையர்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் இன்றி நாம் இங்கில்லை. ஆகவே இன்று நம் மூதாதயரை நாம் நினைக்க வேண்டும். நினைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் இரண்டு செயல்களிலும் இறங்குவது இன்றைய நாளுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். 1. அவர்களைப் போல்… அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை நாம் நினைத்துப் பார்த்து அதைப் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த நல்ல படிப்பினைகளை, வாழ்க்கை முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் மூதாதையரின் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தார். அவர்களிடமிருந்த பண்புகள் அவரிடமும்...

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 & 28 இறைவனுடைய அன்பை ஆழமாக உணர்ந்த ஆசிரியர், இறையனுபவத்தை பகிர்ந்து கொள்கின்ற பாடல் தான், இந்த திருப்பாடல். இறைவனின் அன்பை முழுமையாக அனுபவித்திருக்கிற ஒருவர், இறையன்பைப் பற்றி சொல்கிறபோது, அது வலிமைமிக்கதாக மாறுகிறது. அந்த வகையில், இந்த திருப்பாடலின் கடவுள் அன்பு அனுபவப்பூர்வமாக எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆண்டவரின் அன்புக்கு எல்லையே இல்லை, என்பதாக இந்த திருப்பாடல் சொல்கிறது. இறைவனின் அன்பை எப்படி திருப்பாடல் ஆசிரியர் அனுபவித்திருக்கிறார்? திருப்பாடல் ஆசிரியர் சாதாரண மனிதர். ஆடு மேய்க்கக்கூடியவர். ஆனால், சாதாரண நிலையிலிருந்து அவரை, இறைவன் தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுத்தார். அவரை அபிஷேகம் செய்தார். அவர் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அவரது தலைமுறை வழி வழியாக நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இதனை, ஆசிரியரால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. சாதாரணமான நிலையிலிருக்கிற தனக்கு, இவ்வளவு கொடைகளை வழங்குவது ஏன்? என்ற...

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்வோம்

பேறுபெற்றோர் என்று சொல்லப்படுவது ஒரு சிறப்பு அந்தஸ்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. முக்கியமான ஒருவரின் அன்பையும், பாசத்தையும் பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று சொல்கிறோம். திருச்சபையில் கடவுளின் அன்பையும், அருளையும் பெற்று, சிறப்பு பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று போற்றுகின்றோம். அப்படி கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கக்காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் பலர் தங்களது உயிரை இழந்தனர். கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இப்படிப்பட்ட பிண்ணனியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று பலர் தயக்கம் காட்டினா். தங்களது உயிரை இழந்து கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதனால் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கேட்கத்தொடங்கினார்கள். இதுதான் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் அழிக்க நினைத்தவர்கள் எதிர்பார்த்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியாளரின் இந்த வார்த்தைகள், அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டால், கடவுளின் அன்பும் இரக்கமும் அவர்களுக்கு கிடைக்கும் என்கிற அந்த எண்ணம் தான், அவர்களை மீண்டும்...

`

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு...