Category: தேவ செய்தி

நேரிய வழியில் நடப்போம்

வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும். எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது. நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள்...

நீதி எங்கே? நியாயம் எங்கே?

இயேசு தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவது கிடையாது. வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வைத் தொடாத போதனையும், வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாத போதனையும், வெறும் சடங்குதான். இயேசு தனது போதனை அவ்வாறு இருக்க விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக்கொண்டிருக்கிறபோதே, மக்களுக்கு இறைவனுடைய அருளையும் பெற்றுத்தந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு மக்களின் நோய்களைக் குணப்படுத்திக்கொண்டிருக்கிறபோது, தொழுகைக்கூடத்தலைவன் மக்களிடத்தில், தனது கோபத்தைக் காட்டுகிறான். ஓய்வுநாளில், இயேசு குணப்படுத்துவது அவனுக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்படி, அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். எனவே, தான் சொல்வது நியாயம் என்று நினைக்கிறான். ஆனால், இயேசுவிடம் சொல்லத்துணிவில்லாமல், சாதாரண பாமர மக்களிடத்தில் காட்டுகிறான். ஒருவேளை, அவன் இயேசுவிடம் சொல்லியிருந்தால், அவர் விளக்கம் சொல்லியிருப்பார். ஆனால், அவனோ, மக்களிடத்தில் தனது கோபத்தைக்காட்டுகிறான். அதனால், இயேசுவின் கோபத்திற்கு ஆளாகிறான். இன்றைக்கு, நாமும் இந்த தொழுகைக்கூடத்தலைவன் போலத்தான் இருக்கிறோம். நம்மைவிட கீழாக உள்ளவர்களிடம், நமது அதிகாரத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறோம். நம்மைவிட,...

தாழ்ச்சியோடு வேண்டுதல் செய்வோம்

இரண்டு மனிதர்கள் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கிறார்கள். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். ஆனால், இரண்டு பேரும் செபித்தார்களா? உண்மையில் யாருடைய செபம், கடவுளால் கேட்கப்பட்டது? யார் உண்மையில் செபித்தார்கள்? என்பதை, நாம் பார்ப்போம். முதலில் பரிசேயர். அவருடைய வார்த்தைகள் நிச்சயமாக செபம் அல்ல, மாறாக, அது தற்புகழ்ச்சி. தன்னைப்பற்றி கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்புகழ்வதில் அதிக சிரத்தை எடுக்கிறார். கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்பற்றி சொல்வதில், அவர் ஆர்வம் காட்டுகிறார். இது உண்மையான செபம் அல்ல. தற்புகழ்ச்சியும், செருக்கும் என்றைக்குமே நமக்கு அழிவைத்தான் தரும். கர்வம் கொண்டவர்கள் நிச்சயம் செபிக்க முடியாது. வரிதண்டுபவர் தொலைவில் நிற்கிறார். கடவுளிடத்தில் நெருங்கிவர தனது பாவங்கள் தடையாக இருப்பதாக எண்ணுகிறார். அவரிடத்தில் குற்ற உணர்ச்சி காணப்படுகிறது. தன்னை மிகப்பெரிய பாவியாக எண்ணுகிறார். இது தற்புகழ்ச்சிக்கு இடங்கொடாமல், தன்னை ஒறுத்து, கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடு நிற்பதற்கு ஒப்பாக இருக்கிறது. செபம் என்பது நமது நிலையை உணர்வது. கடவுள் முன்னிலையில் நம்மையே...

பழிவாங்கல்

பெரிய ஏரோது, தனக்குப் பிறகு தான் ஆண்ட நிலப்பரப்பை, தனது மூன்று மகன்களுக்கும் பிரித்துக்கொடுத்தான். யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா பகுதிகளுக்கு ஆர்க்கிலாஸ் பொறுப்பாகவும், கலிலேயா, பெரீயா பகுதிகளுக்கு ஏரோது அந்திபாசும் மற்றும் யோர்தானின் கிழக்குப்பகுதிகளுக்கு உட்பட்ட பரப்பிற்கு பிலிப்பும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். இதில், ஆர்க்கேலாஸ், நிர்வாத்திறமை இல்லாதவனாக இருந்தான். உடனே, உரோமையர்கள் அவரைப் பதவியில் இருந்து எறிந்துவிட்டு, உரோமை ஆளுநரைப் பொறுப்பாக நியமித்தனர். அந்த உரோமை ஆளுநர் தான் பிலாத்து. பிலாத்து, ஒரு பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று கட்ட வேண்டும், என்று முடிவு செய்கிறான். அதற்கு நிறைய பணம் தேவை. அதை யெருசலேம் தேவாலயத்திலிருந்து எடுக்க முடிவு செய்கிறான். ஏனென்றால், யெருசலேம் ஆலயம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் கீழாக வரக்கூடிய பகுதி. பிலாத்துவின் இந்த முயற்சிக்கு, யூதர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், யெருசலேம் தேவாலயத்தில் செலுத்தப்படும் காணிக்கை கடவுளுடையது, கடவுளுக்கு உரியது. அதை வேறு யாரும் எடுத்து, வேறு...

பகைமை நமக்குள் வேண்டாம்

கடவுளை நாம் சந்திக்க, நமக்கு தடைக்கல்லாக இருப்பதோ, அல்லது கடவுளை எதிர்கொள்ள நாம் வலுவில்லாமல் இருப்பதற்கோ, முக்கியமான காரணம், நமது பகைமை உணர்வு. மன்னிப்பு தான் நாம் அடைய வேண்டிய இலக்கு என்பது, கிறிஸ்தவத்தின் அடித்தளம். அது சிறிது காலம் எடுக்கலாம். அந்த இலக்கு என்றாவது ஒருநாள் நாம் அடைந்தே ஆக வேண்டும். அந்த பகைமை உணர்வை எவ்வளவு விரைவாக, நம்மிடமிருந்து நம்மால் அகற்ற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அகற்றுவது நமக்கு நல்லது, என்பதுதான் இன்றைய நற்செய்தி நமக்குத்தரும் செய்தியாக இருக்கிறது. இந்த உலகத்தில் நாடுகளுக்கு இடையே வெறுப்புணர்வு அதிகமாக இருக்கக்கூடிய காலக்கட்டம் இது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்காக பல வேளைகளில், இது போன்ற பகைமையுணர்வுக்கு, தீனி போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள், அவ்வப்போது, இவற்றைத்தூண்டிவிட்டு, அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இருக்கிற பகைமை உணர்வுக்கு நாம் விலை...