Category: தேவ செய்தி

எனை நான் கொடுத்தேன் இறைவா!!!

மற்றவர்களுக்கு கொடுக்கிற நாம், எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதை சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கொடுத்தலில் பல வகைகள் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுப்பது முதல் வகை. இது ஏதோ நாம் செய்ய வேண்டியது என்பதுபோல, மற்றவர்களின் மீது இரக்கமில்லாமல் “ஏதோ” மனநிலையோடு கொடுப்பது. இது சரியானது அல்ல. எதிர்பார்த்து கொடுப்பது. இது ஒருவகையான முதலீடு போன்றது. இப்போது நான் கொடுக்கிறேன், எனக்குத்தேவை இருந்தால், எனக்கு ஏதாவது ஆதாயம் வேண்டுமென்றால் இதன் மூலம் சரிகட்டிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு கொடுப்பது இரண்டாம் வகை. இதுவும் சரியான பார்வை அல்ல. மதிப்பிற்காக கொடுப்பது. தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவது. கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, தங்களின் பலத்தை, அதிகாரத்தை, உயர்ந்த நிலையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகக் கொடுப்பது. இதுவும் சரியான மனநிலை அல்ல. கடைசி வகை: உள்ளுணர்வால் உந்தப்பட்டு கொடுப்பது. யோசனையோடு அல்ல, எதிர்பார்த்து அல்ல, தன்னை...

உண்மையான மன்னிப்பு

விடுதலைப்பயணம் 22: 1 ல் நாம் பார்க்கிறோம்: ”ஆட்டையோ, மாட்டையோ ஒருவர் திருடி வெட்டிவிட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவர்”. 22: 4 ”அவர் திருடின மாடோ கழுதையோ, ஆடோ உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக கொடுப்பர்”. 22: 7 ”ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால், திருடர் இருமடங்காக ஈடுசெய்ய வேண்டும்”. மேற்கண்ட, அனைத்து இறைவார்த்தைகளின் அடிப்படையில், சக்கேயு இயேசுவிடம் பேசுகிறார். இதேபோல், தவறுகளுக்கு அபராதமாக ஒருவர் செய்ய வேண்டிய பரிகாரத்தை, எண்ணிக்கை நூலில் நாம் பார்க்கிறோம்: 5: 7 ”தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும். தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். லேவியர் 6: 5 ம், இதையே வலியுறுத்திக்கூறுகிறது. இங்கே சக்கேயு, தான் மனம் மாற்றம்...

மதிப்புப் பெறுதல் !

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம். ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார். மன்றாடுவோம்: தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே, எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை...

இயேசுவோடு இருக்க…..

இயேசு 12 அப்போஸ்தலர்களை தோ்ந்தெடுத்த நிகழ்வு இன்றைக்கு தரப்பட்டிருக்கிறது. எதற்காக இயேசு இந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். அதற்கான காரணம் மாற்கு நற்செய்தி 3: 14 – 15 ல் தரப்பட்டுள்ளது. 1. தம்மோடு இருக்க 2. நற்செய்தியைப்பறைசாற்ற அனுப்பப்பட 3. பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க. இவற்றைப்பற்றி இங்கே சிந்திப்போம். தம்மோடு இருப்பது என்பது அவர்களை தன்னுடைய நண்பர்களாக ஏற்றுக்கொண்டிருப்பதைக்குறிக்கிறது. நட்பிற்கு இலக்கணமாக இயேசு இருக்கிறார். எனவேதான், நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு ஒன்றுமில்லை என்கிறார். தம்மோடு இருக்கிற அவர்களை தயார்படுத்துகிறார். தன்னைப்பற்றி அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்களோடு உறவாடுகிறார். உரையாடுகிறார். அவர்களை தனது பணிக்காகப் பக்குவப்படுத்துகிறார். தனக்குப்பிறகு நற்செய்தியைப் பறைசாற்ற இருக்கும் தூதுவர்களாக இயேசு அவர்களைப்பார்க்கிறார். இயேசுவைப்பற்றி பேசும் ஊடகங்களாக சீடர்கள் அனுப்பப்படுகிறார்கள். தாங்கள் பார்த்தவற்றை, கேட்டவற்றை, உணர்ந்தவற்றை, அனுபவித்தவற்றை அவர்கள் தங்களின் நற்செய்தியின் சாராம்சமாகப் போதிக்கின்றனர். சாத்தானின் அரசிற்கு எதிரான போர் ஆரம்பித்துவிட்டதை இது...

மூன்றாம் நாளில் பணி நிறைவுபெறும் !

நல்ல தலைவர்களிடம் இருக்கின்ற பண்புகளுள் ஒன்று தங்களின் பணி பற்றிய இலக்குத் தெளிவு. தாங்கள் ஆற்ற பணிகள் என்னென்ன, அவை எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் எவை என்பவற்றையெல்லாம் திறன்மிகு தலைவர்கள் நன்கு தெளிவாக அறிந்திருப்பர். இயேசுவிடம் அத்தகைய தலைமைப் பண்புகள் நிறைந்திருந்தன என்பதைச் சிந்திக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு மேலிடுகிறது, இயேசு தன் பணியைப் பற்றியும், அதில் உள்ள இடையூறுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். எனவே, அச்சமின்றி துணிவுடன் பணியாற்றினார். அத்துடன், தனக்குள்ள காலக் குறைவையும் கணக்கில் கொண்டு, விரைந்து செயலாற்றினார். ஓய்வெடுக்கவும், உண்ணவும்கூட நேரமின்றிப் பல நேரங்களில் அவர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றினார் என்பதை நற்செய்தி நூல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும் ” என்றார் இயேசு. அவரிடமிருந்து...