Category: தேவ செய்தி

கடவுளின் இரக்கம்

மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! கடவுளுடைய அரசு பெரிதாக வேண்டும், உலகின் அனைத்து மக்களும் கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற ஆசை இன்றைய திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வதை நம்மால் உணர முடியும். பின்னால் நடக்க இருப்பவற்றை, முன்பே ஆய்ந்து உணர்ந்து சொல்கிற இறைவாக்கின் ஒரு பரிமாணமாக வெளிப்படுவதுதான் இந்த திருப்பாடல். உண்மையான மகிழ்ச்சி நமக்கு கடவுளின் இரக்கத்தில் தான் இருக்கிறது என்பதோடு, இந்த திருப்பாடல் தொடங்குகிறது. எனவே, பாவிகளாகிய இருக்கிற நம் அனைவருக்கும் கடவுளின் இரக்கம் வேண்டும். இதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற தன்சிந்தனை தான் முதல் வார்த்தை. தனக்கானதோடு இந்த தேடல் நின்றுவிடாமல், இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் இந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்கிற பரந்துபட்ட எண்ணம், நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிற உலகத்தில், நானும்...

மனிதத்தின் புனிதம்

மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் படைப்பின் உயர்ந்த சிகரம். இன்று மனிதர்களையும் சாதாரண படைப்பாக நாம் நினைத்துவிட முடியாது. காரணம், அவர்கள் கடவுளின் அன்பினின்று படைக்கப்பட்டவர்கள். அதற்கும் மேலாக, கடவுளே மனிதர்களில் ஒருவராக பிறந்து, இந்த மனிதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இன்றைய வாசகம், மனிதத்தின் புனிதத்தன்மையை நமக்கு பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு வாழ்வை வாழக்கூடிய மனிதர்கள் ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானுட வாழ்வின் முக்கியத்துவம் தெரிவதாக இல்லை. எனவே தான், கொலை, தற்கொலை என்று, மனிதத்திற்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மனிதம் என்பது போற்றுதற்குரியது. மனிதம் என்பது உயர்ந்த மதிப்பீடுகளைக்கொண்டு வாழப்பட வேண்டியது. அத்தகைய மனித வாழ்வை நாம் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். மனிதத்தின் புனிதத்தன்மையை நாம் உணர்வதற்கு ஒவ்வொருநாளும் முயற்சி எடுக்க வேண்டும். கடவுள் இந்த மனித உருவத்தை எடுத்து, இதற்கு மகிமை சேர்த்திருக்கிறார். இதனுடைய புனிதத்தன்மையை வாழ்ந்துகாட்டியிருக்கிறார்....

ஆன்மீகம் நிறைந்த குடும்பங்கள் !

இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவி;ப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளி;ப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற...

இயேசுவின் பிறப்பு தரும் செய்தி

இயேசுவைக் குழந்தையாக பார்த்த சிமியோன் இறைவாக்குரைக்கிறார். அவருடைய இறைவாக்கு என்ன? ”இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும்” என்கிற செய்தி அவரால் இறைவாக்காகச் சொல்லப்படுகிறது. யாருடைய எழுச்சி? யாருடைய வீழ்ச்சி? இதுவரை மக்களை சட்டங்களால், ஒழுங்குகளால் சிறைப்படுத்தியிருந்த அதிகாரவர்க்கத்தினரிடமிருந்து இயேசு விடுதலையைக் கொண்டு வர இருக்கிறார். இது அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கான வீழ்ச்சி. இனிமேல் அவர்கள் அடிமைப்படுத்த முடியாது. அதேபோல, ஏழைகள், எளியவர்கள், சட்டங்களினால் வீணாக சிறைப்பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் எழுச்சி. ஏனென்றால், அவர்களுக்கும் மீட்பு இருக்கிறது என்கிற செய்தி, மிகச்சிறப்பான செய்தி. இத்தகைய இறைவாக்கு தான், சிமியோனால் உரைக்கப்படுகிறது. இயேசுவின் பிறப்பு இந்த உலகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சரிவரக் கொண்டு வர இருக்கிறது. அது சமத்துவத்தையும், சமநீதியையும் எதிர்பார்க்கிறவர்களின் வெற்றி. அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ணுகிறவர்களின் வெற்றி. அந்த வெற்றி, இயேசுவின் பிறப்பினால், இந்த மண்ணில் மலரட்டும். ~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

மாசற்ற குழந்தைகள் திருவிழா

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்? ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில்...