Category: தேவ செய்தி

இயேசுவுடனான நெருக்கம்

இயேசுவோடு நெருங்கியிருப்பது, இணைந்திருப்பது எந்த அளவுக்கு, நமது வாழ்வை பக்குவப்படுத்தக்கூடிய அனுபவமாக இருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான், இன்றைய நற்செய்தி வாசகம். சீடர்கள் சாதாரணமானவர்கள். அறிவிலோ, திறமையிலோ சிறந்தவர்கள் அல்ல. சாதாரணமான பாமரரர்கள். அவர்கள் பல இடங்களுக்குச் சென்று மிகத்திறமையாகப் போதிக்கிறார்கள். பல சவால்களையும், சங்கடங்களையும் துணிவோடு எதிர்கொள்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்தியது எது? என்று பார்க்கிறபோது, இயேசுவோடு இருந்த நெருக்கம் தான் அது. வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய சவால்கள் எளிதானது அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கைச்சூழல். அவர்கள் சந்திக்கும் சவால்களும் தனித்துவம் வாய்ந்தவை. யாரும், மற்றவருடைய பிரச்சனைகளுக்கு அவரவர் அனுபவத்தைக்கொண்டு தீர்வு காண முடியாது. குறைந்தபட்ச ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும். ஆனால், எந்த பிரச்சனைகள் வந்தாலும், நாம் இயேசுவோடு நெருங்கியிருக்கிறபோது, கண்டிப்பாக நம்மால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வாழ்வை மகிழ்வோடு நகர்த்த முடியும். நமது வாழ்வில் இயேசுவோடு இணைந்திருப்பதற்கு முயற்சி எடுப்போம். நமது வாழ்வின்...

உன்னத இறைவார்த்தை

இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகிற விதைப்பவர் உவமை பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு பிண்ணனியைக் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக பாலஸ்தீனத்தில் விதைகளை விவசாயிகள் இரண்டு விதமாக விதைத்தனர். நிலத்தில் இறங்கி விதைகளைத்தூவுவது முதல் முறை. ஆனால், சற்று சோம்பேறித்தனமாக என்றால், ஒரு கழுதையின் மீது விதைப்பையை வைத்து, இரண்டு பக்கங்களிலும் சிறிய துளையிட்டு, கழுதையை நிலம் முழுவதும் நடக்கச்செய்வது இரண்டாம் முறை. ஆனால், இரண்டாம் முறை வெகு அரிதாக இருந்தது. இயேசுவின் இந்தப்போதனை இரண்டு அடித்தளத்தை உள்ளடக்கியது. முதலாவது, இறைவார்த்தையைக் கேட்பவர்களுக்கு. இறைவார்த்தையை கேட்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை எவை என்பது பற்றியதாகும். இறைவார்த்தை நமக்கு தரப்படுவது மிகப்பெரிய கொடையாகும். அது கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமாகும். அதை நாம் கேட்டு, உணர்ந்து நமது வாழ்வாக்க வேண்டும். இரண்டாவது இறைவார்த்தையைப் போதிப்பவர்களுக்கு உள்ளதாகும். இறைவார்த்தையைப் போதிப்பதும் சாதாரண, எளிய பணியல்ல. அது ஒரு கொடையாக இருந்தாலும், மிகப்பெரிய பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை செயல்படுத்துவதற்கு...

வாழ்வு தரும் இறைநம்பிக்கை

சீடர்களின் குழப்பமான மனநிலைக்கு எடுத்துக்காட்டு இன்றைய பகுதி. சீடர்கள் இயேசுவோடு இருந்ததின் பிண்ணனி, தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு தான். இதை மட்டும் நாம் கணக்கில் எடுத்து சீடர்களை விமர்சனம் செய்ய முடியாது. அப்படி விமர்சித்தால், அது தவறாக முடிந்து விடும். இயேசு தனது சாவைப்பற்றி அறிவித்தபோதும், துன்பக்கிண்ணத்தை குடிக்க இருப்பதாக சொன்னபோதும், சீடர்கள் அவரை விட்டுவிட்டு ஓடவில்லை. மாறாக, எதற்கும் தயார் என்று சொல்கிறார்கள். இரண்டுமே நேர் எதிர் மனநிலையைக் குறிக்கிறது. இந்த இரண்டுமே சீடர்களின் குழப்ப மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. அப்படியென்றால், இவ்வளவு குழப்ப மனநிலையில் எது சீடர்களை இயேசுவோடு இணைத்துக் கட்டிபோட்டது? எது இயேசுவோடு அனைத்தையும் பொறுத்துக்கொள்ள தூண்டுகோலாக இருந்தது? எது இயேசு மீது முழுமையான அன்பு வைத்து, அவரோடு இருப்பதற்கு உறுதுணையாக இருந்தது? இயேசு மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர்கள் குழப்ப மனநிலையில் இருந்தாலும், இயேசு மீது வைத்திருந்த நம்பிக்கையை எந்த விதத்திலும்...

பிரமாணிக்கமாய் இருப்போம்

இயேசுவிடத்திலே அடையாளம் கேட்கக்கூடியவர்களைப் பார்த்து, இயேசு ”இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது” என்று சொல்கிறார். ”விபசாரத்தலைமுறையினர்” என்கிற வார்த்தை இங்கே சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த வார்த்தையை வெறும் உடல் சார்ந்த விபசார பொருளாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, நம்பிக்கைத்துரோகம் என்கிற அர்த்தமாக நாம் பார்க்கலாம். இதனை பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இருந்த உருவகத்தில் நாம் புரிந்து கொள்ளலாம். பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்குமான உறவு திருமண உறவாக உருவகப்படுத்தப்பட்டிருந்தது. கடவுளை கணவராகவும், இஸ்ரயேல் கடவுளுக்கு மனைவியாக உருவகம் செய்திருந்தார்கள். ஆனால், நாளடைவில், இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களை நாடியபோது, திருமண உறவில் தனது கணவரான, கடவுளுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்து விட்டதாகவே உணரப்பட்டது. கடவுளின் அன்பையும், அரவணைப்பையும் மறந்து, கடவுளைப் புறக்கணித்துவிட்டு வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றது, இப்படிப்பட்ட நம்பிக்கைத்துரோகமாகவே கருதப்பட்டது. அதேபோல,...

ஐயா, நீர் உம் வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?

நிலத்தில் பயிரேற்ற விரும்புகின்ற உழவர் நல்ல விதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். நல்ல தரமான விதையாக இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. நல்ல விதைகளை நிலத்தில் தூவிய பின்னர், அவ்விதைகள் நிலத்தில் வேரூன்றி, பயிர் முளைத்து, வளர்ந்து பலன் தரும் என்று காத்திருக்கின்ற வேளையில் நல்ல பயிரின் ஊடே களைகளும் தோன்றிவிட்டன, நல்ல விதை நம் இதயத்தில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் நம் உள்ளத்தில் களை போலத் தோன்றுகின்ற தீய சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய சொற்கள், தீய செயல்கள் ஆகியவையும் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன. இதை எப்படி விளக்குவது? கடவுளின் கைகளிலிருந்து நல்லதாகப் பிறந்த இவ்வுலகில் தீமை புகுந்தது எப்படி? இக்கேள்விக்குப் பதில் தேடுகின்ற முயற்சி பல நூற்றாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. — கிறிஸ்தவ சமயம்...