Category: தேவ செய்தி

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். “ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்” என்பதையே பல்லவியாக வேண்டுகிறோம். இன்று 14, 15, 17 என்னும் மூன்று வசனங்களையும் நாம் நம்முடைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். “அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது” என்றும், “அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக. அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைத்திருப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவாராக. எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக” என்னும் வரிகள் இன்று நம் கவனத்தை ஈர்;க்கின்றன. பொதுவாக இந்தத் திருப்பாடல் சாலமோன் மன்னனைக் குறித்தாலும், மேற்சொல்லப்பட்ட வரிகள் சாலமோனைவிட இயேசுவுக்கே அதிகம் பொருந்துகின்றன. எனவே, “மெசியாவின் திருப்பாடல்” என இதனை அழைக்கின்றனர் விவிலிய அறிஞர்கள். இதன் காரணமாகவே,...

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே தொடர்ந்து இன்றும் நாளையும் நாம் பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். “சாலமோனுக்கு உரியது” என்னும் விளக்கத்துடன் தரப்பட்டுள்ள இத்திருப்பாடல் அரசருக்காக மன்றாடப்பட்ட ஒரு வேண்டுதல். “தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்” என்று 10ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஒருவேளை சாலமோன் அரசரைப் பற்றியே இவ்வரிகள் பாடப்பட்டிருக்கலாம், காரணம் சாலமோனின் காலத்தில்தான் யூதர்களின் அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. சாலமோனின் புகழையும், ஞானத்தையும், வெற்றிகளையும் கேள்விப்பட்டு, பன்னாட்டு அரசர்களும் (சேபா நாட்டு அரசி உள்பட) அவரைத் தேடிவந்தார்கள். பரிசுப்பொருள்கள் கொண்டுவந்தனர் (காண்க: லூக் 11: 31). ஆனாலும், திருப்பாடல் 2ஐப் போலவே, இந்தத் திருப்பாடலும் மெசியா இயேசுவைப் புதிய அரசராகக் காண்கிறது, அவரைப் போற்றுகிறது. “தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்” (திபா 72:...

உணவை வீணாக்க வேண்டாம்

நற்செய்தி நூல்கள் அனைத்திலும் காணப்படுகின்ற புதுமை, இயேசு அப்பத்தை பலுகச்செய்த புதுமை. பசுமையான புல்வெளியை பாலஸ்தீனத்தில் ஏப்ரல் மாத்தில் தான் பார்க்க முடியும். ஆகவே, இந்த புதுமை ஏப்ரல் மாதத்தின் நடுவில் நடைபெற்றிருக்கலாம். இந்த காலகட்டத்தில், சூரியன் ஏறக்குறைய மாலை ஆறு மணி அளவில் மறையக்கூடியதாக இருந்தது. எனவே, மாலைப்பொழுதில், சூரியன் மறையக்கூடிய அந்த நேரத்தில் தான் இந்த புதுமை நடைபெற்றிருக்க வேண்டும். மீதியுள்ள அப்பத்துண்டுகளை பன்னிரெண்டு கூடை நிறைய சேர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னிரெண்டு என்பது, திருத்தூதர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எங்கோ அமர்ந்து உணவுக்கே வழியில்லாமல் இருந்த மக்கள்கூட்டத்தில் கூடை எங்கிருந்து வந்தது? என்று நாம் நினைக்கலாம். பொதுவாக, பாரம்பரிய யூதர்கள் தங்களின் உணவை தாங்களே கூடைகளில் வெளியே எடுத்துச் சென்றனர். குறிப்பாக நீண்ட தூரப்பயணம் அமைகிறபோது, இந்த நடைமுறையைப் பின்பற்றினர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களுக்கு தூய்மை என்பது உண்கின்ற உணவிலும் மிகவும் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்....

நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்த இயேசு, தமது நற்செய்தி அறிவிப்புப் பணியைத் தொடங்குகிறார். “கற்பித்தார், நற்செய்தியைப் பறைசாற்றினார், நோய்நொடிகளைக் குணமாக்கினார்”. இந்த நற்செய்திப் பகுதியுடன் தொடர்பு கொண்டதாக அமைகிறது இன்றைய திருப்பாடல். அரசத் திருப்பாடல்களுள் ஒன்றான திபா 2 “கடவுள் தேர்ந்துகொண்ட அரசர்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. அதன் 8ஆம் வசனம் “பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்” என்பதே இன்றைய பல்லவி. அதன் தொடர்ச்சியாக “பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்” என்றும் வாசிக்கிறோம். இஸ்ரயேலரின் அரசர்களில் ஒருவரைப் பற்றிப் பாடப்பட்ட இந்தத் திருப்பாடல் இப்போது மெசியாவாம் இயேசுவின்மீது ஏற்றிப் பாடப்படுகிறது. குறிப்பாக, “நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” (2:7) என்னும் வரிகள் இயேசுவையே குறிக்கின்றன. திருத்தூதர் பணிகள் நூலில் அந்தியோக்கு நகரின் தொழுகைக்கூடத்தில் பவுல் ஆற்றிய மறையுரையில் “இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக...

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள்...