Category: தேவ செய்தி

என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 146: 1 – 2, 5 – 6, 7, 8 – 9 மனிதன் கடவுளுக்கு எதிராக பல தவறுகளைச் செய்ததினால், அவனுடை கீழ்ப்படியாமையினால் அருள் வாழ்வை இழந்தான். தன்னுடைய நிலைக்கு தானே தான் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான். ஆனாலும், கடவுள் அவனை நிர்கதியாக விட்டுவிடவில்லை. அவன் மீது தான் இன்னும் அன்பாயிருக்கிறேன் என்பதை, பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கடவுளின் அன்பிற்கான வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல். இன்றைய திருப்பாடலில், கடவுள் இந்த உலகத்தை மீட்பதற்காக எடுக்கும் முயற்சியின் போது நிகழும், ஒரு சில அடையாளங்களை திருப்பாடல் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் மெசியாவை நிச்சயம் அனுப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கிற வேளையில், மெசியா வந்தால், இதுதான் மெசியாவின் காலம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்பதற்கான விளக்கம், இந்த பாடலில், கொடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நிகழவிருப்பதை, முன்கூட்டியே வெளிப்படுத்துகின்ற இறைவாக்குப்பணியை, இந்த திருப்பாடல் அறிவிக்கிறது. மெசியா வருகிறபோது,...

உலகெங்குமுள அனைவரும் விடுதலையைக் கண்டனர்

திருப்பாடல் 98: 1, 2, 3, 3 – 4 இந்த உலகம் முழுவதையும் படைத்து பராமரித்துக்கொண்டிருக்கிறவர் நம் ஆண்டவராகிய கடவுள். அவருடைய பார்வையில் அனைவருமே விலையேறப்பெற்றவர்கள். அனைவருமே அவருடைய பிள்ளைகள். அவர் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்தது பாரபட்சம் காட்டுவதற்காக அல்ல. மாறாக, அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொண்டு வருவதற்காக. இஸ்ரயேல் மக்களையும் ஆண்டவர் தண்டித்தார். எப்போதெல்லாம் அவர்கள், கடவுள் விரோதச் செயல்களில் ஈடுபட்டார்களோ அப்போதெல்லாம், அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வருவித்தார். கடவுள் இஸ்ரயேலம் மக்களைத் தேர்ந்தெடுத்தது, அவர்கள் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதற்காகத்தான். நாம் வாழும் இந்த உலகில் மிகப்பெரிய பொறுப்புக்கள் யாருக்கு கொடுக்கப்படுகிறது? வலிமையானவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள். ஆனால், கடவுளின் பார்வையில் இஸ்ரயேல் மக்கள் தயவு பெற்றிருந்தனர். அவர்கள் கடவுளின் விலைமதிப்பில்லா பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டனர். அவர்கள் மீட்பின் வரலாற்றில், மிகப்பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்தனர். அந்த பொறுப்பை ஒரு சில வேளைகளில் அவர்கள் சரிவரச்...

மூவொரு இறைவன் பெருவிழா

கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாய் இருக்கின்றார். ஆயினும் ஒரே கடவுள் என்பதே மூவொரு கடவுள் பற்றிய அடிப்படையான இறையியல். இயேசுகிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். இவரில் மனிதத்தன்மையும் இறைத்தன்மையும் ஒருங்கிணைந்து உள்ளன. இவ்விசுவாசம் வழிபாட்டில் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திருவழிபாடும் மூவொரு கடவுளின் புகழ்ச்சியோடுதான் தொடங்குகின்றது. திருப்பலியில் நற்கருணை மன்றாட்டின் முடிவில் ”இவர் வழியாக…” என்கிற மூவொரு கடவுளின் புகழ்ச்சி பாடப்படுகின்றது. திருமுழுக்கும் இவ்வாறு கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு தொடக்கவுரையிலும் இந்த இறையியல் வெளிப்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டு வரை, இது வழிபாட்டில் திருவிழாவாக ஏற்படுத்தப்படவில்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் புனித பெனடிக்ட் சபையைச் சேர்ந்த துறவற மடங்களில் பெந்தகோஸ்தே நாளுக்குப் பிறகு இந்த திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை திருத்தந்தை 22 ம் ஜான், கி.பி 1334 ல் அறிமுகப்படுத்தினார். திருச்சபை வரலாற்றில் நெருக்கடியான வேளையில் பல்வேறு சவால்களை திருச்சபை சந்தித்த அக்காலக்கட்டத்தில் இறைவன் பராமரித்து பாதுகாத்து...

ஆண்டவர் எப்பொழுதும் சினம் கொள்பவரல்லர்

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8 – 9, 11 – 12 கோபப்படக்கூடிய மனிதர்களை பல வகைகளாக நாம் பிரிக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தொட்டதெற்கெல்லாம் கோபப்படக்கூடியவர்கள். இது ஒரு வகையான உளவியல் நோய். அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, இந்த உளவியல் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். இரண்டாவது வகையான மனிதர்கள், தங்களை மறந்து கோபப்படக்கூடியவர்கள். அவர்களை அறியாமலேயே, இயல்பாகவே கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். தாங்கள் செய்வது சரியா, தவறா என்கிற சிந்திக்கிற திறன் இல்லாமல், கோபப்படக்கூடியவர்கள். இதுவும் ஓர் உளவியல் சிக்கல் தான். என்றாலும், விழிப்புணர்வோடு இருந்து முயற்சி எடுக்கிறபோது, இந்த சிக்கலிலிருந்து நாம் மீள முடியும். கடவுள் சினம் கொள்கிறார் என்பது இதுபோன்ற மனிதர்களோடு ஒப்பிட்டுக்கூறக்கூடியது அல்ல. அது நீதி அவமதிக்கப்படுகிறபோது எழுகிற கோபம். நேர்மையாளர்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறபோது உண்டாகிற கோபம். வலியவன் எளியவனை சுரண்டுகிறபோது...

ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்

திருப்பாடல் 116: 10 – 11, 15 – 16, 17 – 18 வேதனையின் விளிம்பில் இருக்கிற ஒரு மனிதனின் புலம்பல் தான் இந்த திருப்பாடல். அவன் வேதனையின் உச்சத்தில் இருந்தாலும், கடவுளுக்கு நன்றியுள்ளவனாக வாழ ஆசைப்படுகிறான். கடவுளின் நன்றியை மறவாதவனாக இருக்கிறான். தன்னுடைய துன்பமான நேரத்திலும், சாதாரண மனிதர்கள் கடவுளைப் பழித்துரைப்பது போல அல்லாமல், தன்னுடைய வேதனையான நேரத்தில், கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்த ஆவல் கொண்டிருப்பதாக அவன் தன்னை வெளிப்படுத்துகிறான். பொதுவாக, துன்பம் நம்மைத் தாக்குகிறபோது, நமக்குள்ளாக எழக்கூடிய கேள்வி, கடவுள் எங்கே? அதிலும் குறிப்பாக, நம்பிக்கையோடு, கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் உள்ளத்தில் இந்த கேள்வி தான், நிச்சயமாக எழும். எந்த ஒரு மனிதன் ஆன்மீகத்தில் பக்குவமடைந்திருக்கிறானோ, கடவுளைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கிறானோ, அவன் மட்டும் தான், கடவுளுக்கு எந்நாளும் நன்றிக்குரியவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவான். நம்முடை வாழ்க்கையில் இத்தகைய ஆழமான ஆன்மீக...