Category: தேவ செய்தி

இறையாட்சியின் சவால்கள்

”திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்” என்று, 12 வது இறைவார்த்தைச் சொல்கிறது. இதே வார்த்தையின் பொருள் லூக்கா 16: 16 ல், வெளிப்படுகிறது. ”திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்”. இதனுடைய பொருள் என்ன? இயேசு இதன் வழியாக சொல்லவிரும்புகிற கருத்து என்ன? விண்ணரசு எப்போதுமே வன்முறையைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. இங்கே விண்ணரசு என்று சொல்லப்படுவது, அதை அறிவிக்கிறவர்கள். திருமுழுக்கு யோவான் வந்தார். ஆண்டவருடைய அரசை அறிவித்தார். அவர் கொல்லப்பட்டார். யாரெல்லாம் ஆண்டவருடைய அரசை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவா்கள் அனைவருக்கும், இதுதான் கதியாகும். விண்ணரசை எதிர்க்கிறவர்கள் எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அதையும் துணிவோடு சந்திக்கிறவர்களால் தான், இன்றைக்கும் விண்ணரசு அழியாமல் உறுதியாக நிற்கிறது. நாம் அனைவருமே இறையாட்சியின் தூண்கள். நாம்...

இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலாக அமைகிறது. கிரேக்கர்கள், ”கடவுளைக்காண்பது அரிது. கடவுளைக்கண்டாலும் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவது அரிதிலும் அரிது” என்று சொல்வார்கள். யோபு புத்தகத்திலே சோப்பார், யோபுவிடம் கேட்பதும் இதுதான், ”கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?” (யோபு 11: 7). அப்படியென்றால், கடவுளைக்காணவே முடியாதா? நன்மை செய்கிறவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான் கிடைக்குமா? அவர்கள் ஆறுதல் கூட பெற முடியாதா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். அதற்கு பதில்தான் இயேசுவின் அமுதமொழிகள். கடவுளைப்பற்றிய தேடல் இயேசுவில் நிறைவடைகிறது. வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு நிறைவு இயேசுவில் கிடைக்கிறது. இயேசு சொல்கிறார், ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. இந்த வார்த்தைகள் கடவுளைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்வில் நன்மையே...

தேடி போ! உயரே கொண்டு வா!

மத்தேயு 18:12-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இவ்வுலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள். பயனற்றவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரையும் கடவுள் தாயின் கருவறையில் அர்ச்சித்து அற்புதமான பணி செய்ய அழைக்கின்றார். யாரையும் ஒதுக்காதீர்கள், யாரையும் வெறுக்காதீர்கள் என்ற அன்பான வேண்டுகோளோடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். குறைகள் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு வரை இந்த நாள் நம்மை அழைக்கிறது. குறைகள் இருந்தாலும் உற்சாகத்தினால் மேலே வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உயரே வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் இதோ இரண்டு சாதனையாளர்கள்: 1. நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் (Nicholas James Vujicic) என அழைக்கப்படும், 36 வயது...

மன மாற்றம்..

மக்கள் மனமாற்றம் பெறவேண்டும் என்று திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தி பண்டைக்காலத்தில் எசாயா இறைவாக்கினர் கூறிய செய்தியை எதிரொலிக்கிறது. ”ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” (காண்க, எசா 40:3) என எசாயா அன்று கூறியது பாபிலோனிய அடிமைநிலையிலிருந்து மக்கள் விடுதலை பெற்ற நல்ல செய்தியை முன்னறிவித்தது. உண்மையிலேயே அது ஒரு புதிய ”விடுதலைப் பயணமாக” அமைந்தது. யோவான் பாலைநிலத்தில் ஒலிக்கின்ற குரலாக வந்தார்; வரவிருக்கின்ற மெசியாவின் வருகையை அறிவித்தார். உண்மையிலேயே அவர் கடவுளின் குரலாகச் செயல்பட்டார். அதே நேரத்தில் அவர் மணமகனாகிய இயேசுவின் தோழனாகச் செயல்பட்டு அம்மணமகனைப் பாலைநிலம் வர அழைக்கும் குரலானார். யோவான் அறிவித்த மனமாற்றம் எதில் அடங்கியிருக்கிறது? தவறான வழியில் செல்வோர் தாங்கள் செல்ல வேண்டிய வழி இன்னொன்று என்று தெரிந்ததும் உடனே திரும்பி சரியான வழியில் நடக்கத் தொடங்குவர். இதையே யோவான் மக்களிடம் கேட்டார். எனவே மனமாற்றம் என்பது தவற்றைக் களைந்து நல்லதைத் தழுவுவது என்னும் பொருள்கொண்டது. மனமாற்றம்...

ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்

திருப்பாடல் 147: 1 – 2, 3 – 4, 5 – 6 காத்திருத்தல் என்பது சுகமான அனுபவம். அது சுமையான அனுபவமாகவும் இருக்கலாம். ஒரு மாணவர் தேர்விற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார். தன்னை முழுவதுமாக தயாரித்திருக்கிறார். அந்த மாணவருக்கு தேர்வு எப்போது வரும்? தான் தேர்வில் எப்போது கலந்துகொண்டு, என்னுடைய திறமையைக் காட்டுவேன் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார். அதேவேளையில், பேருந்துக்காக காத்திருக்கிற மனிதர், ஒரு மணி நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால், அவரது மனம் பதைபதைத்துக்கொண்டே இருக்கும். ஆக, காத்திருத்தல் சுகமாகவும், சுமையாகவும் இருக்கிறது. ஆண்டவருக்காகக் காத்திருப்பது இது போன்ற அனுபவம் தான். ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையில் செயலாற்றுவார் என்று காத்திருக்கிறோம். ஆனால், நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் இறைவனை நம்புகிறோம். அப்போதும் அது நடக்கவில்லை. பெரும்பாலான மனிதர்கள் இந்த தருணத்தில், நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு காத்திருத்தல் சுமையாகிவிடுகிறது. ஆனால், என்ன...