Category: தேவ செய்தி

ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்

திருப்பாடல் 72: 1 – 2, 12 – 13, 18 – 19 ஆண்டவருடைய காலம் என்பது எதைக் குறிக்கிறது? இஸ்ரயேல் மக்கள் எப்போதும் இந்த மண்ணக வாழ்வை, தற்காலிகமானதாகவே பார்த்தார்கள். அரசர்கள் அவர்களை ஆள்வதையும் அப்படியே பார்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கடவுள் வருவார் என்கிற நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார்கள். அந்த நம்பிக்கை தான், மெசியா வருவார் என்கிற நம்பிக்கையை, அவர்களுக்குக் கொடுத்தது. அதற்காகவே, அவர்கள் தங்கள் வாழ்வை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த பிண்ணனியில், ஒரு சில அநியாயமான செயல்கள் நடைபெற்றாலும், அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. கண்டிப்பாக, கடவுள் வந்து இந்த அநியாயங்களை அகற்றி, நீதியை தழைத்தோங்க செய்வார் என்று உறுதியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல். ஆண்டவரின் அரசு நிச்சயமாக இந்த உலகத்தில் மலரும். அந்த அரசு மலர்கிறபோது, அது ஏழைகளுக்கான அரசாக இருக்கும். மக்கள் விரும்புகிற அரசாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட...

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக? அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது. இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை...

கடவுளை ஏற்றுக்கொள்ள …

”என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்று இயேசு கூறுகிறார்? இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு எது தடையாக இருக்கிறது? நாம் இயேசுவிடத்தில் செல்வதற்கு என்ன தயக்கம்? இயேசுவை ஏற்றுக்கொள்வது எளிதானது போல தோன்றினாலும், அது சவால்கள் நிறைந்த பாதையாக இருக்கிறது. அதுதான் இங்கே தடையாக, தயக்கமாக இயேசுவால் சுட்டிக்காட்டப்படுகிறது. இன்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு நம்முடைய பதவி, நாம் பெற்றிருக்கிற பட்டங்கள், நாம் சேர்த்து வைத்திருக்கிற செல்வங்கள் தடையாக இருக்கிறது. ஏனென்றால், நாம் இயேசுவின் மீது நாட்டம் வைத்திருப்பதை விட, மேற்சொன்னவைகள் மீதுதான் அதிக நாட்டம் வைத்திருக்கிறோம். அதுதான் நமக்கு பெரியதாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட எண்ணங்களை மாற்றுவது என்பது எளிதானது அல்ல. ஏனென்றால், நாம் வாழக்கூடிய இந்த உலகமும் இதுபோன்ற சிந்தனைகளை நமக்குத் தந்துகொண்டே இருக்கிறது. நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு இவையெல்லாம் தடையாக இருக்கிறதா? தடையாக இருந்திருக்கிறதா? என்று சிந்திப்போம். எந்நாளும் நாமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வதற்கு, கடவுளின் அருள் வேண்டி மன்றாடுவோம். அருட்பணி. ஜெ....

சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!

மத்தேயு 17:9, 10-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும். 1. கற்பதில் சீர்திருத்தம் நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து...

இறைவனின் குரலுக்குச் செவிகொடுப்போம்

எசாயா 48: 17 – 19 இஸ்ரயேல் மக்கள் எந்த இடத்தில் தடம்புரண்டார்கள்? அவர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணம் என்ன? என்பதை, இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை இதுநாள் வரை வழிநடத்தி வந்து, வெற்றி தேடிக்கொடுத்த, இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் நடந்தது தான், அவர்களின் மோசமான நிலைக்கு காரணமாக, இறைவாக்கினர் அறிவிக்கின்றார். இறைவன் ஒருவா் தான், பயனுள்ளவற்றையும், மனிதர்கள் மகிழ்ச்சியாயிருக்கத் தேவையானவற்றையும் கற்பிக்கிறவர். ஆனால், மனிதன், கடவுளை நம்பாமல், வேற்றுத் தெய்வங்களையும், வேற்று நாட்டினரையும் நம்பி மோசம் போனான். அப்படி அவர்கள் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து, மற்றவர்களைப் புறம்தள்ளியிருந்தால், இன்றைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். பலவற்றை இழந்திருக்க மாட்டார்கள். அவர்களது பெயர் கடவுளின் திருமுன்னிலையிலிருந்து அகற்றப்பட்டிருக்காது. இப்போதோ, அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கான வழி அடைக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு, இறைவனின் வார்த்தைக்கு செவிகொடுத்தாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வரும். அவர்கள் மீண்டும் இழந்தவற்றைப்...