Category: தேவ செய்தி

நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்

திருப்பாடல் 119: 66, 68, 76, 77, 93, 94 வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்தது என்று சொல்கிறோம். இது உண்மை தானா? என்று சிந்தித்து, அதற்கான நிதர்சனத்தை நாம் பார்க்கிறபோது, அது பொய்யான தோற்றம் என்பது புலப்படுகிறது. வாழ்க்கை என்பது சிக்கலானது அல்ல, அதை நாம் தான் சிக்கல் நிறைந்ததாக மாற்றுகிறோம். உண்மையில் வாழ்க்கை என்பது அற்புதமானது. அழகானது. நம்முடைய வாழ்க்கை அழகானதாக அற்புதமானதாக இருக்க வேண்டுமென்றால், என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை, இன்றைய திருப்பாடல் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. வாழ்க்கையில் நடக்கும் அநேக பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கிற தவறான முடிவுகள் தான் காரணமாக இருக்கிறது. முடிவுகளை சரியாக எடுக்கத் தெரியாததன் விளைவு, நாம் பிரச்சனைக்குள்ளாக மாட்டிவிடுகிறோம். முடிவுகளை நாம் எடுக்கிறபோது, அறிவாற்றலோடு, நன்மதியோடு எடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல், பொறுமையாகச் சிந்தித்து, நல்ல முறையில் செபித்து, அனுபவத்தின் அடிப்படையில் நேர்மையான உள்ளத்தோடு நாம் எடுக்கிற...

ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6 மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் செய்கிற வேலை, நம்முடைய கடின உழைப்பு, நாம் ஈட்டுகிற செல்வம் அனைத்துமே இந்த மகிழ்ச்சிகாக மட்டும் தான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் தான் இன்றைய திருப்பாடல். எப்படி வாழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. மகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஒரு மனிதர் ஆண்டவரின் திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான அடிப்படை. திருச்சட்டம் என்பது கடவுள் நமக்கு வழங்கிய சட்டம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு ஒழுங்குமுறைகளை விளக்கக்கூடிய வழிகாட்டி. அந்த திருச்சட்டத்தை மேலோட்டமாக அல்லாமல், அதனை தியானித்து, அந்த திருச்சட்டத்தின் உட்பொருளை...

இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9, 16 கடவுளின் அழைப்பைக் கேட்டு, இதோ வருகின்றேன் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுள் விரும்புவது எது? கடவுளின் உண்மையான அழைப்பு எது? கடவுளின் திருவுளம் எது? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டுப்பார்த்தால், “வழிபாடு“ என்று நாம் செய்து கொண்டிருக்கிற பலவற்றை நிறுத்த வேண்டிவரும். மாதாவுக்கு, புனிதர்களுக்கும் தங்க நகைகள் போட்டு அழகுபார்க்கிறோம். இதை மாதாவோ, புனிதர்களோ விரும்புவார்களா? அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, ஏழ்மையையும், ஒறுத்தலையும் நேசித்தவர்கள். ஆனால், இன்றைக்கு நம்முடைய வழிபாடு? இன்றைக்கு நாம் செய்கிற பல தவறுகளை விசுவாசத்தின் பெயரால் சமரசம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளை விசுவாசத்தின் பெயரால் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆலயம் கட்டுவதற்கும், ஆலயப்பொருட்களை வாங்குவதற்கும் ஆயிரமாயிரம் தாராளமாக நன்கொடை வழங்கும் நம் மக்கள், ஏழைகளின் துயர் துடைக்க என்று அவர்களை அணுகினால், உதவி செய்ய மனமில்லாத நிலையைப் பார்க்கிறோம். இது...

அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்

லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75 செக்கரியா கடவுளை மீட்பராக அறிமுகப்படுத்துகிறார். செக்கரியா ஆலயத்தில் பலி செலுத்தக்கூடிய குருவாக இருக்கிறார். சாதாரண மக்களை விட, அவருக்கு திருச்சட்டத்தைப் பற்றிய அறிவுத்தெளிவு அதிகமாகவே இருக்கும். சாதாரண மக்களை விட, நடக்கிற நிகழ்வுகளை, உன்னிப்பாக பார்ப்பது அவருக்கு இயல்பானது. ஏனென்றால், இஸ்ரயேல் வரலாற்றையும், வாக்களிப்பட்ட மீட்பரையும், அவர் வரவிருக்கிற நேரத்தையும் அவரால் கணிக்க முடியும். அதைத்தான் இறைவாக்காக இன்றைய பாடல் வழியாக அவர் உணர்த்துகிறார். செக்கரியாவைப் பொறுத்தவரையில் காலம் கனிந்துள்ளதாகச் சொல்கிறார். என்ன காலம் கனிந்துள்ளது? கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து, நோய்நொடியிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பு அளிக்க இருப்பதாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். கடவுள் மக்களை அனைத்து அடிமைத்தனத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்க இருக்கிறார். அது நடக்க இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தவராக, அந்த செய்தியை அறிவிக்கிறார். மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த மெசியா...

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை என்று நேர்மையற்ற நடுவர் தனக்குள் சொல்லிக்கொள்வதாக இன்றைய உவமை நமக்கு வருகிறது. இன்றைய பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை இது பிரதிபலிப்பதாக அமைகிறது. ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை இந்த உலகம் வெறுத்து ஒதுக்கியது. தவறு செய்வதற்கு மனிதர்கள் பயப்பட்டார்கள். தவறு செய்கிறவர்கள் அதனை வெளியில் தெரிவதை மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்கள். இன்றைய நிலை என்ன? தவறு செய்கிறவர்கள் தான், இந்த சமுதாயத்தில் நிமிர்ந்த நடையோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்வது பாவம் என்கிற மனநிலை அறவே இல்லை. அதையெல்லாம் பெரிதாக நினைப்பதும் இல்லை. நல்லவர்கள் தான், அவமானப்பட்டு வாழ்வது போல வாழ வேண்டியுள்ளது. இப்படியொரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு காலம் வரும். அதற்கான பலனையும், விளைவையும் தவறு செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். இந்த உலகத்தில் கடவுளுக்கு பயப்படாமல், மனிதர்களை மதிக்காமல் இருப்பவர்கள்...