Category: தேவ செய்தி

நான் எதற்கும் அஞ்சிடேன்

திருப்பாடல்130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 குற்றங்களைச் செய்துவிட்ட ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து, கடவுளின் இரக்கத்திற்காக ஏங்கக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுள் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் மறந்து, தவறு செய்துவிட்டு, அந்த தவறை நினைத்து மீண்டும், மீண்டுமாக வருந்தக்கூடிய இந்த பாடல், ஏறக்குறைய நமது வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. நாமும் கூட, நமது வாழ்க்கையில் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றவர்கள். ஆனால், அந்த நன்றியுணர்வு சிறிது கூட இல்லாமல், கடவுளுக்கு எதிராக நாம் தவறு செய்கிறோம். மீண்டும் மீண்டுமாக அதே தவறைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில், கடவுள் எந்த அளவுக்கு நம்மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய நண்பர் இலாசர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டவுடன், அதிலும் குறிப்பாக இலாசர் இல்லாமல் அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வேதனையை முற்றிலுமாக உணர்ந்து,...

ஆண்டவரிடம் பேரன்பும் மீட்பும் உள்ளது

திருப்பாடல்130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 குற்றங்களைச் செய்துவிட்ட ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து, கடவுளின் இரக்கத்திற்காக ஏங்கக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுள் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் மறந்து, தவறு செய்துவிட்டு, அந்த தவறை நினைத்து மீண்டும், மீண்டுமாக வருந்தக்கூடிய இந்த பாடல், ஏறக்குறைய நமது வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. நாமும் கூட, நமது வாழ்க்கையில் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றவர்கள். ஆனால், அந்த நன்றியுணர்வு சிறிது கூட இல்லாமல், கடவுளுக்கு எதிராக நாம் தவறு செய்கிறோம். மீண்டும் மீண்டுமாக அதே தவறைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில், கடவுள் எந்த அளவுக்கு நம்மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய நண்பர் இலாசர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டவுடன், அதிலும் குறிப்பாக இலாசர் இல்லாமல் அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வேதனையை முற்றிலுமாக உணர்ந்து,...

பிளவு ஏன்?

(யோவான் 07 : 40-53) “அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது” (யோவான் 7:43) ஆம், நேற்றைய நற்செய்தியின் தொடக்கமாக இன்றைய நற்செய்தியின் சிந்தனை அமைகின்றது. அவருக்குச் சார்பாகவும் எதிராகவும் மக்களிடையே பிளவு ஏற்படுகிறது. இப்பிளவுக்குக் காரணம் இயேசுவா? உறுதியாக இல்லவே இல்லை. மக்களின் முற்சார்பு எண்ணங்களையும், அறியாமையையும், அதிகார வர்க்கத்தினர் மிகவும் சரியாக அவர்களுக்கேற்றார் போல் பயன்படுத்திக் கொள்கின்றனர். கலிலேயர்கள் என்றாலே கலகக்காரர்கள் என்ற முற்சார்பு எண்ணத்தையும், கலிலேயாவில் இயேசு தன் பணிவாழ்வின் பெரும்பகுதியை செலவழித்ததால் அவர் ஒரு கலிலேயன் என்ற முடிவுக்கு வருகின்ற அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும். ‘கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றவில்லை’ என்ற எண்ணம் திசை திருப்புபவர்களின் திமிரையும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறையையும், படித்தவர்களின் முட்டாள் தனத்தையும் காட்டுகின்றது. இதே நபர்கள் தான் இன்றும் நம்மைப் போன்ற பாமர மக்களின் அறியாமையையும், முற்சார்பு எண்ணத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். கடவுளுக்கும் எல்லை...

பகை முற்றுகிறது

(யோவான் 07: 1-2, 10, 25 – 30) யோவான் ஐந்தாம் பிரிவில் இயேசு ஓய்வு நாளில் குணப்படுத்தியதால், எழும்பிய எதிர்ப்பு அப்படியே தொடர்ந்து, ஆறாம் பிரிவில் இயேசு, “நான் உயிர் தரும் உணவு” என்று கூறியதைக் கேட்டதும் இன்னும் வலுக்கிறது. இன்றைய ஏழாம் பிரிவோ எதிர்ப்பிலேயே தொடங்குகிறது. இந்த எதிர்ப்பு இன்னும் அதிகமாக வலுக்கிறது. ஓய்வு நாளில் குணம் கொடுத்ததற்கே அவரை எதிர்த்த யூதர்களுக்கு இப்போது அவரின் மீது பழிபோட இன்னும் அதிகக் காரணங்கள் கிடைக்கின்றன. 1. யூதக் கணிப்புப்படி (மாற்கு 14 : 61-63) தன்னை மெசியா, தன்னைக் கடவுளிடமிருந்து வந்தவன் என்று சொல்லும் எவனும் கடவுளைப் பழித்துரைக்கிறான் என நம்பினர். 2. இதையும் கூறிவிட்டு இயேசு இன்னும் ஒரு படி மேலே சென்று இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்களைப் பார்;த்து, “நீங்கள் கடவுளை அறியவில்லை, நானோ அவரை அறிவேன்” (யோவான் : 28,29) என்கிறார். வெந்த புண்ணில்...

ஆழமாக வாசி

(யோவான் 5:1-3, 5-16) மற்ற புதுமைகள் அல்லது அருளடையாளங்கள் அனைத்திலிருந்தும் இன்றைய நற்செய்தியில் நடக்கின்ற அருளடையாளங்கள் மிகவும் வித்தியாசமாகத் தனித்துவம் பெற்று இருக்கிறது. இந்த வித்தியாசத்திற்கும் தனித்துவத்திற்கும் பெயர் போனதே இந்த யோவான் நற்செய்தி. மேலோட்டமாக வாசிக்கிறவர்களுக்கு ஒரு செய்தியையும், ஆற அமர ஆழமாக வாசிப்பவர்களுக்கு இன்னொரு இனிமையான செய்தியையும் கொடுப்பதே யோவான் நற்செய்தியாளரின் கைவண்ணம். அவரது கைவண்ணத்தை இன்றைய நற்செய்தியில் கூடுதலாகவே காணலாம். இந்த 38 ஆண்டுகள் நோயுற்றவர் குணமாதலின் நிகழ்வினை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள். இங்கே 5 மண்பாண்டங்களைக் கொண்ட கட்டடம், 5 புத்தகங்களைக் கொண்ட ‘தோரா’ – வினைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் நோயுற்றவன் என்பது இஸ்ரயேல் மக்கள் 38 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்ததைச் சுட்டுகிறது. (இச 2:14) குணம் பெற்றவன் இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது.; கலங்கிக் கண்ணீரோடு குணப்படுத்துவது, பலவிமான தெய்வங்களிடம் அலைந்து திரிந்து, கலங்கிய கண்ணீரோடு இருப்பவர்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டு...