Category: தேவ செய்தி

இறைவன் தரும் ஆசீர்வாதம்

1அரசர்கள் 18: 41 – 46 நாம் வணங்கும் இறைவன் ஆசீர்வாதத்தின் கடவுள் என்கிற செய்தி, இன்றைய வாசகத்தின் மூலமாக நமக்கு வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவாக்கினர் எலியா, தன்னை அரசன் முன்னால் நிறுத்தி, உண்மையான இறைவன் யாவே இறைவன் என்பதையும், பாகால் இறைவன் பொய்யானவர் என்பதையும் நிரூபிக்கிறார். மக்கள் அனைவரும் கடவுளை உண்மையான இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த தருணமே, அவர்களின் பஞ்சம் நீங்கியது என்பதை, இந்த வாசகத்தில் நாம் பார்க்கிறோம். பாகால் தெய்வத்திற்கான பலிபீடங்களையும், மதகுருக்களையும் கொன்றொழித்த பின்பு, மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அவர்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இறைவன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று திருவுளம் கொண்டிருக்கிறவர். அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பவர் கிடையாது. எனவே தான், மக்கள் அவரை...

இறைவாக்கினர் எலியா கொண்டிருந்த விசுவாசம்

1அரசர்கள் 18: 20 – 39 இறைவன் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரைப் பற்றிய இன்றைய வாசகம் நமக்கு எடுத்தியம்புகிறது. அவர் தான் இறைவாக்கினர் எலியா. யார் உண்மையான இறைவன்? இது தான், போட்டிக்கான கேள்வி. ஆண்டவரா? அல்லது பாகாலா? இறைவன் எவ்வளவோ நன்மைகளையும், வல்ல செயல்களையும் செய்தாலும்,ஒரு கட்டத்தில் மக்கள், இறைவனை மறந்து போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். நிச்சயம், இந்த நிலை எலியாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், வருந்தி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விசுவாசத்திற்கு மீண்டும் அழைத்து வர வேண்டியது அவருடைய கடமை என்பதை உணர்கிறார். அதற்காக, எத்தகைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார். அங்கு நடந்த நிகழ்வில், ஆண்டவர் தான் உண்மையானவர் என்பது உணர்த்தப்படுகிறது. தன்னுடைய வேண்டுதல் கேட்கப்படுமா? இறைவன் பலியை ஏற்றுக்கொள்வாரா? என்றெல்லாம், எலியா சந்தேகம் கொள்ளவில்லை. அதைப்பற்றிய எள்ளளவும் கவலையும் இல்லை. தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். தன்னுடைய மன்றாட்டுக்கு இறைவன்...

புதுமை வழங்கும் செய்தி

1அரசர்கள் 17: 7 – 16 மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகிற மனம் இருக்கிறபோது, அவர்கள் கடவுளின் நிறைவான ஆசீரைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதுதான் இன்றைய வாசகம் நமக்குத் தருகிற செய்தியாக இருக்கிறது. இறைவாக்கினர் எலியா சாரிபாத்துக்குச் செல்கிறார். அங்கு அவர் ஒரு கைம்பெண்ணை பார்க்கிறார். அந்த பெண்ணிடத்தில் உண்பதற்கும், குடிப்பதற்கும் கேட்கிறார். அந்த பெண் ஏற்கெனவே பஞ்சத்தின் பிடியில் இருக்கிறார். கிட்டத்தட்ட வாழ்க்கை முடிகிற தருணம். தன்னுடைய உண்மையான நிலையை இறைவாக்கினரிடத்தில் எடுத்துச் சொல்கிறார். ஆனாலும், இறைவாக்கினர் தன்னுடைய பசியை ஆற்றுவதற்கு கேட்கிறார். அவள் மறுக்கவில்லை. தன்னுடைய இயலாமை நிலையிலும், இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கிறார். அங்கே ஒரு புதுமை நிகழ்கிறது. இந்த புதுமை இங்கே நிகழ்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். முதலில் புதுமை நிகழ்வது கடவுளின் திருவுளத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தபோது, அனைத்தும் அவருக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. சாரிபாத்தில் இருக்கிற ஒரு கைம்பெண்ணிடத்தில் அவருடைய உணவுக்கு...

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்

ஏழைகள் என்றால் யார்? ஏழைகளுக்கு, விவிலியத்திலே இரண்டு வார்த்தைகள், கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படுகிறது.   தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் தினமும் உழைப்பதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். தங்களுக்கென்று, வேறு எதுவும் கிடையாது. உழைப்பை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். Pவழமழள என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தாலும் உண்டு, இல்லையென்றால் பட்டினி என்ற நிலையோடு வாழ்பவர்கள். மத்தேயு நற்செய்தியிலே, இந்த இரண்டாவதாக பொருள்படக்கூடிய ஏழையைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். அதாவது, ஒருவேளை உணவுக்காகக்கூட, மற்றவர்களை எதிர்பார்த்து, சார்ந்து இருக்கக்கூடிய ஏழைகளை, இங்கே கூறுகிறார். அப்படியானால், ஏழையரின் உள்ளத்தவர்கள் என்றால் என்ன பொருள்: யாரெல்லாம், தங்களுடைய செல்வம், திறமை, அழகு, பதவி, பட்டங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், கடவுள் ஒருவர்தான் எங்களுடைய வாழ்க்கை, கடவுள் தான் எனக்கு எல்லாமே...

ஆண்டவர் பெயர் வாழ்த்துக்குரியது

தானியேல் 1: 29, 30 – 31, 32 – 33 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ என்கிற மூன்று இளைஞர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். அதனால், அவர்கள் தண்டிக்கப்பட இருந்தார்கள். ஒன்று கடவுளை மறுதலிப்பது அல்லது மடிவது. இதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை. அவர்கள் மடிவதை தேர்ந்தெடுத்தார்கள். எனவே அவர்கள் தீச்சூளையில் தூக்கி எறியப்பட்டனர். சூளையின் தீ எந்தளவுக்கு அதிகமாக இருந்தது என்றால், அவர்களைத் தூக்கி எறியச் சென்ற காவலர்கள், தீயின் தாக்கம் தாங்காமல் எறிந்து போயினர். ஆனால், இவர்கள் எரியாமல், தீச்சூளையினுள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இறைவன் அவர்களுக்குச் செய்த ஆச்சரியத்தில், அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுவதுதான் இன்றைய பாடல். கடவுளை மூதாதையரின் கடவுளாக அவர்கள் பாடுகிறார்கள். அவர்களது முன்னோர்களாக இருந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் மாட்சியும், தூய்மையும் நிறைந்தவர் என்று பாடுகிறார்கள். கடவுள் வாக்குறுதி மாறாதவராக இங்கே சித்தரிக்கப்படுகிறார். கடவுளின் வாக்குறுதி ஏதோ ஒரு தலைமுறையோடு நின்றுவிடவில்லை. வழிவழியாக கடவுளின்...