Category: Daily Manna

அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன

திருப்பாடல் 97: 1 – 2, 5 – 6, 11 – 12 இந்த உலகத்தில் இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிளவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை சமூகத்தீமையாக கருதப்பட்டாலும், மக்களை ஆளும் அரசுகள் இதை அரசியலாக்கி தங்களது நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கடவுள் முன்னிலையில் அனைவரும் அவருடைய பிள்ளைகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது தான் இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை. சாதிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சுயநலத்திற்காகவும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவும் ஒரு தந்திர நரி குணம் கொண்டவர்களால் புகுத்தப்பட்டது. கடவுள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்களே. நாம் வழிபடும் இறைவனும், நாம் சார்ந்திருக்கும் சமயங்களும் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையைத் தருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை இன்னும் தரங்கெட்டவர்களாக மாற்றக்கூடாது. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் முன்னிலையில் “நாம் “அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நமக்குள்ளாக வர வேண்டும்....

வேற்றினத்தாரைக் கண்டித்தீர், பொல்லாரை அழித்தீர்

திருப்பாடல் 9: 1 – 2, 5, 15, 1b – 8 கடவுள் அனைவருக்குமான கடவுள். எந்த பாரபட்சமும் காட்டாதவர். எல்லாருக்கும் நடுநிலையில் இருந்து நீதி வழங்குகிறவர். தவறு செய்கிற அனைவரையும் கண்டிக்கிறார், தண்டிக்கிறார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் செய்தி. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார். அவர்கள் வழியாக இந்த உலக மக்களை மீட்டெடுக்க முடியும் என்று கடவுள் நம்பினார். அந்த நம்பிக்கையில் தான், இறைவாக்கினர் வழியாக அவர்களோடு பேசினார். அவர்களை வழிநடத்தினார். தான் அவர்களுக்காக முன்குறித்து வைத்திருந்த மீட்புத்திட்டத்திற்கு அவர்களை தயாரித்தார். இறைவனின் மீட்புத்திட்டத்தை முழுமையாக உணராத மக்கள் கடவுளுக்கு எதிராக புறக்கணித்துச் சென்றபோது, அவர்களை தண்டித்து திருத்துவதற்கு கடவுள் தயங்கவில்லை. வேற்றினத்தாரையும் கடவுள் அன்பு செய்தார். ஏனெனில் அவர்களும் கடவுளின் படைப்புக்கள் தான். அவர்களுக்கும் கடவுள் தந்தை தான். அவர்களை மீட்டெடுப்பதற்குத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். நீதியோடு,...

உம் பெயரின் மாட்சிமையை முன்னிட்டு கடவுளே எங்களை விடுவியும்

திருப்பாடல் 79: 1 – 2, 3 – 5, 8, 9 அடிமைத்தனத்தின் பிடியிலிருக்கிற இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவித்தருள வேண்டுமென்று விடுக்கிற அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. பாபிலோனிய மன்னன் நெபுகத்நேசார் எருசலேமை தரைமட்டமாக்கினான். இஸ்ரயேலின் ஆண்களை அகதிகளாக பாபிலோனுக்கு நாடுகடத்தினான். எருசலேமை எவராலும் அழிக்க முடியாது என்கிற மமதை கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டிருக்கலாம். வாழ்வில் பலம் இருக்கிறவரை அல்லது பலம் இருக்கிறது என்பதை நம்புகிற வரையிலும், மற்றவர்களை எவரும் தேடமாட்டார்கள். வெற்றிக்கு தங்களின் பலம் தான் காரணம் என்கிற மமதை அவர்களின் எண்ணத்தில் குடிகொண்டு விடுகிறது. ஆனால், எப்போது பலத்தை இழக்கிறார்களோ, அல்லது மற்றவர்கள் இவர்களின் பலவீனத்தை அறிந்து இவர்களை வீழத்துக்கிறார்களோ, அப்போதுதான், தங்களது உண்மைநிலையை அறிந்தவர்களாக மாறுகிறார்கள். கடவுளைத்தேடி வருகிறார்கள். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இது முற்றிலும் உண்மை. அவர்கள் வெற்றி பெற்ற...

என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 7 – 8 குற்றவுணர்வுள்ள நிலையில் பாடப்படும் பாடல் தான் இந்த திருப்பாடல். ஆண்டவரிடத்தில் ஒரு வேண்டுதலுக்காக ஆசிரியர் செபிக்கிறார். ஆனால், அவர் கண்முன்னே இறைவனை புறக்கணித்து அவர் செய்த தவறுகள் நின்று கொண்டிருக்கின்றன. பொதுவாக, ஒரு மனிதர் நமக்கு கடினமான நேரத்தில் உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த உதவியைப் பெற்று நாமும் நல்ல கஷ்டத்திலிருந்து மீண்டு வருகிறோம். அதன்பிறகு அந்த மனிதரை நாம் பார்க்கவுமில்லை, செய்த உதவிக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மீண்டும் இப்போது நமக்கு உதவி தேவைப்படுகிறது. அவருடைய உதவியைக் கேட்க வேண்டிய நிலை. நம்முடைய உள்ளம் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தான் திருப்பாடல் ஆசிரியருக்கும். கடவுளிடத்தில் ஏராளமான உதவிகளைப் பெற்றிருக்கிறார். அவர் எதிர்பாராமலே ஆபத்திலிருந்து பாதுகாத்திருக்கிறார். இவ்வளவு நன்மைகளைப் பெற்ற பிறகு, அவர் கடவுளுக்கு உண்மையில்லாமல் வாழ்ந்திருக்கிறார். கடவுளை...

ஆண்டவரே! நீர் என்னை மீட்டீர்

யோனா 2: 2, 3, 4, 7 ஆண்டவர் தன்னை மீட்டதாக இறைவாக்கினர் யோனா முழுமையாக நம்புகிறார். யோனா இறைவாக்கினர் நினிவே நகரத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டவர். கடவுளை முழுமையாக நம்புகிறவர். ஆனாலும், தன்னுடைய வார்த்தை எப்படியானாலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறவராக சித்தரிக்கப்படுகிறார். ”இன்னும் நாள்பது நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும்” என்கிறார். ஆனால், மக்கள் மனம் மாறியதால் கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்கிறார். யோனா அறிவித்தபடி, நினிவே அழிக்கப்படவில்லை. இது யோனாவுக்கு கோபத்தை வரச்செய்கிறது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார். மக்கள் தன்னை இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். இறுதியில் கடவுளை முழுமையாக அறிந்து கொள்கிறார். தன்னுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கிறபோது, இறைவன் எப்படியெல்லாம் அற்புதமாக தன்னைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்கிறார். இறைவன் மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் மூலமாக உறுதிப்படுத்துகிறார். நம்முடைய வாழ்க்கையிலும், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். சாதாரண...