Category: Daily Manna

ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துக்கொள்ளுங்கள்.எபே 5:17

கடவுளின் இரக்கத்துக்கு கெஞ்சி நிற்கும் நாம் அவரின் திருவுளம் அறிந்து செயல்பட்டால் எத்துனை இனிது.அவருக்கே உகந்த தூய,உயிருள்ள பலியாக நம்மை படைத்தோமானால் அவர் மனம் எவ்வளவாக அகமகிழும்.நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு என்ன? எது என்றால் இந்த உலகத்தின் போக்கின்படி நடக்காமல் நம்முடைய உள்ளம் புதுப்பிக்கப்பட்டு மாற்றம் அடைந்து கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து எது நல்லது?எது உகந்தது? எது நிறைவானது? என்று அறிந்து புரிந்துக்கொள்ள வேண்டுமாக விரும்புகிறார். ஒரு தம்பதிகளுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள்.ஆனால் அந்த தகப்பன் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்து இறைவனிடம் கேட்டாராம்.ஆனால் இறைவன், மகனே நான்தான் உனக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறேனே,அது போதாதா?என்று கேட்டுவிட்டு நீ சென்று அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்து நிம்மதியாக இரு என்று சொன்னாராம்.ஆனால் அந்த தகப்பனோ இல்லை ஆண்டவரே!நீர் எனக்கு அவசியம் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக...

திக்கற்றவர்களுக்கும்,அனாதைக்கும்,நீரே துணை. தி.பாடல்கள் 10 : 14

கடவுளாகிய ஆண்டவர் தாயின் கருவிலே தெரிந்துக்கொண்டு நம் பிறப்பை அறிந்தவராக இருக்கிறார். அவரின் நீதி வானம் வரைக்கும் எட்டுகிறது. அவர் மாபெரும் செயல்களை செய்கிறார்.அவருக்கு நிகரானவர் யார்? நாம் இன்னல்களையும், தீங்குகளையும்,காணும்படி செய்தாலும் பாதாளத்திலிருந்து தூக்கி விடுவித்து மீண்டும் உயிர் அளிப்பவர் அவரே! திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையாகவும்,காப்பாளராகவும், இருப்பவர் அவரே! தனித்திருப்போருக்கு உறைவிடமானவரும் அவரே! ஒரு அழகிய கிராமம் ஒன்றில் மலர்விழி தனது தாய், தந்தையுடன் ஒரே செல்லப்பிள்ளையாக வசித்து வந்தாள். கஷ்டம்,கவலை என்றால் என்ன என்று தெரியாமல் அவள் பெற்றோர் அவளை கண்ணின் மணியைப்போல் காத்து அவள் கேட்கும் யாவற்றையும் வாங்கிக்கொடுத்து அவளை மிகவும் நேசித்து வளர்த்து வந்தனர். எப்போதும் போல அன்றும் அந்த கிராமத்தில் உள்ள அவள் படித்த பள்ளிக்கு காலை கிளம்பி போய்விட்டாள்.அவள் 6 ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் போன சிறிது நேரத்தில் அவள் தந்தைக்கு நெஞ்சு வலி வந்தது. உடனே அருகில் உள்ள ஒரு நகரத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கே மருவத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர்...

எல்லா மனிதர்களின் செயல்களும் ஆண்டவர் திருமுன் இருக்கின்றன

தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த நாள் முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லோரும் அடக்கமாகும் நாள்வரை நம்முடைய செயல்கள் யாவும் ஆண்டவரின் திருமுன் உள்ளது.அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.ஆண்டவரின் செயல்கள் யாவும் நல்லவையே.நம்முடைய ஒவ்வொரு தேவையும் குறித்த காலத்தில் அவர் நிறைவேற்றுகிறார்.’ இது அதைவிடக் கெட்டது ‘ என்று யாரும் சொல்ல முடியாது.அவரின் செயல்கள் அனைத்தும் அதனதன் காலத்தில் நல்லவை என விளங்கும்.ஆகையால் நாம் எந்த சூழ்நிலையிலும் நம்முடைய முழு உள்ளத்தோடு, எண்ணத்தோடு,பெலத்தோடு அவருக்கு வாயாரப் புகழ் பாடவேண்டும்.அவரின் பெயரை எப்பொழுதும் போற்றி துதிக்க வேண்டும். ஆண்டவரை நாம் எப்போதும் துதிக்க வேண்டும் என்று விரும்பியே அவர் நம்மை உருவாக்கி இந்த மண்ணுலகை ஆண்டுக்கொள்ளும்படி கொடுத்தார்.ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவர் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.அவர் உருவாக்கிய எல்லாவற்றிக்கும் மனிதன் என்ன பெயர் எப்படி வைக்கிறான் என்று பார்க்கவே அவனிடம் கொண்டுவந்தார்.உயிருள்ள ஒவ்வொன்றிக்கும் அவன் என்ன பெயர் வைத்தானோ அதுவே...

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!!!

உலகெங்கும் வாழ்பவரே!ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!பிற இனத்தார்களுக்கு அவரின் மாட்சியையும், வியத்தகு செயல்களையும் அறிவிப்பது நமது கடமை ஆகும். ஏனெனில் அவரே தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர். அஞ்சுதற்கு உரியவர் அவர் ஒருவரே.மற்ற தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே!நமது ஆண்டவரோ! விண்ணுலகையும்,மண்ணுலகையும் படைத்தவர். ஒவ்வொருநாளும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவருக்கு பாடல் பாடுங்கள்; அவரை புகழ்ந்தேத்துங்கள்;அவரது ஆற்றலைத் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! அப்பொழுது அவரைத் தேடுவோரின் ஒவ்வொரு இதயமும் மகிழ்ந்து பெருமகிழ்ச்சிக் கொள்ளும். ஏனென்றால் நம்முடைய ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறவர். அவர் நம்முடைய துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர். நாம் போற்றித்துதிக்கும் பொழுது அவரும் நம்மில் பிரியமாய் இருந்து நமது வேண்டுதல் யாவற்றையும் நிறைவேற்றித் தருகிறார். சில சமயம் கஷ்டமான சூழ்நிலையை கடக்க நேர்ந்தாலும் அவர் கரம் நம்மை வழிநடத்தும்.அந்த கஷ்டத்தின் மத்தியிலும் நம்மை சந்தோஷத்தால் சமாதானத்தால் நிறைத்துக் காத்துக்கொள்வார். துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;உங்களைக் காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மேன்மைபடுத்துவீர்கள், என்று திருப்பாடல்கள் 50 : 15 ல் வாசிக்கிறோம்.மனிதர்களாகிய நம்மேல்...

ஆண்டவரின் திருவுளப்படியே அனைத்தும் படைக்கப்பட்டன.தி.வெ 4:11

எங்கள் ஆண்டவரே,எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படி அவை உண்டாயின, படைக்கப்பட்டன என்று திருவெளிப்பாடு 4 : 11 ல் படிக்கிறோம். ஆம் அவரது விருப்பப்படி தான் உலகத்தை படைத்து நம்மிடம் கொடுத்து அவற்றை ஆண்டுக்கொள்ளும் படி செய்தார். ஆனால் நாமோ அதை சாத்தானுக்கு கொடுத்துவிட்டு இப்போது பயந்து,பயந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். விண்ணையும், மண்ணையும் உருவாக்கியவர் அவரே, விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கினார் என்று திருப்பாடல்கள் 115 : 16 ல் படிக்கிறோம். இந்த பூமி நமக்குரியது. அவரின் திருவுளப்படி நடந்தால் நாமும் இந்த பூமியை சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்போது மானிடர், உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு; மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொல்வார்கள். மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் ஆண்டவரின் சித்தம் அறிந்து செயல்பட்டால் நம்மை ஆசீர்வதித்து காத்தருள்வார். அவரால் படைக்கப்பட்ட நாம் எல்லோரும் சந்தோஷமாக , சமாதானமாக...