Category: Daily Manna

வாழ்வில் உயர்ந்த மதிப்பீட்டைக் கடைப்பிடிப்போம்

யூதச்சட்டப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் அவரது விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக்கொடுக்க முடியாது. சொத்துக்களை பிரிப்பதில் ஒருசில ஒழுங்குகளை அவர்கள் வகுத்திருந்தனர். இணைச்சட்டம் 21: 17 ல் சொல்லப்பட்டிருப்பதுபோல மூத்தமகனுக்கு சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், அடுத்தவருக்கு மீதியுள்ள ஒரு பங்கும் செல்லும். தந்தை இறப்பதற்குமுன் சொத்துக்களை பிரிப்பது என்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று. இன்றைய நற்செய்தியில் இளையமகன் கேட்பது, தன்னுடைய பங்கைத்தான். ஆனால், அவன் கேட்கிற முறையிலேயே, அவனுடைய தவறான ஒழுக்கமுறைகளும், பழக்கவழக்கங்களும் வெளிப்படுகின்றன. தந்தை உயிரோடு இருக்கும்போதே சொத்துக்களை பங்குகேட்கிறான் என்றால், தந்தையின் உயிரை அவன் பொருட்டாக மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், தந்தை முழுமையான அன்போடு அவன்கேட்டபொழுது மறுப்பேதும் இன்றி கொடுக்கிறார். தன்னுடைய மகன் துன்பத்தில்தான் வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறர். அவனுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கிறார். அதேபோல், அவன் திருந்தி வரும்போது அவனை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நற்செய்தியில் ஊதாரி மைந்தனின் மனமாற்றமும்,...

வெற்றி வசப்படும்

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று – என்கிற இந்த வரிகள், திருப்பாடல் 118: 22 லிருந்து எடுக்கப்பட்டது. திருப்பாடல் ஆசிரியர் இந்த உருவகத்தை இஸ்ரயேல் மக்களுக்குப் பயன்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள். யூதர்கள் இந்த உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள மக்களாலும் வெறுக்கப்பட்டவர்கள். அவர்கள் நாடு முழுவதிலும் அடிமைகளாக, வேலையாட்களாக வாழ்ந்தவர்கள். ஆனால், அவர்களைத்தான் கடவுள் சிறப்பாக தேர்ந்து கொண்டார். இதனைத்தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகள் மூலமாக விளக்குகிறார். இந்த திருப்பாடல் வரிகளில் வருவதைப்போல, இயேசுவும் விலக்கப்பட்ட மனிதராகவே ஆதிக்கவர்க்கத்தாலும், அதிகாரவர்க்கத்தாலும் பார்க்கப்படுகிறார். அவர்கள் மக்களை தூண்டிவிட்டு அவரை, கொலை செய்ய நினைக்கிறார்கள். அவரை ஒதுக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், விரைவிலே, தாங்கள் யாரை ஒதுக்க நினைத்தோமோ அவர் தான், கடவுளின் திருமகன், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர், கடவுளின் ஆவியைப்பெற்றவர் என்பதை அறிந்துகொள்வார்கள். தாங்கள் செய்த செயல்களை நினைத்து, மனம் வருந்துவார்கள். இந்த சமுதாயம் ஒதுக்கிவைத்த...

உலகம் பற்றிய நமது பார்வை

செல்வரும், இலாசரும் உவமை நமக்கு அருமையான சிந்தனைகளைத் தருகிறது. செல்வரைப்பற்றிய உயர்ந்த பார்வையும், ஏழைகளைப்பற்றிய தாழ்ந்த பார்வையும் இங்கே தவிடுபொடியாகிறது. இங்கு தீர்ப்பிடப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, இந்த சமூகத்தின் மட்டில் நமக்கு அக்கறை வேண்டும் என்கிற எண்ணத்தை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பணக்காரனின் தவறாக இங்கே சித்தரிக்கப்படுவது அக்கறையின்மை. இந்த உலகத்தைப்பற்றிய அக்கறையின்மை. துன்பத்தைப் பார்த்தும், உதவி செய்ய ஆற்றல் இருந்தும் ஒருவிதமான பாராதத்தன்மை, மற்றவர்களின் வறுமையைப்பார்த்தும் உணர்வற்ற தன்மை. இவைதான் செல்வந்தனின் தண்டனைக்குக்காரணம். தன் கண்முன்னே ஒருவன், சாகக்கிடக்கிறான் என்பது தெரிந்தாலும், அதைப்பற்றிய சிறிதும் கவனம் எடுக்காத அவனுடைய உணர்வுகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படக்கூடியவை. இந்த உலகத்தோடு நாமும் ஒருவகையில் இணைந்தவர்கள் தான். நமக்கும் இந்த உலகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். நாம் விரும்பாவிட்டாலும், அதை நமது வாழ்வில் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால், அதுவே நமது அழிவுக்குக் காரணமாகிவிடும். அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

“துன்பக் கிண்ணம்”!

செபதேயுவின் மனைவி தன் மக்களுக்காக இயேசுவிடம் பதவிகள் வேண்டியபோது, அவர் கேட்ட கேள்வி: “ நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? யூதர்களின் நம்பிக்கையின்படி, அப்பத்தைப் பகிர்வது ஆசிர்வாதங்களைப் பகிர்வதற்குச் சமம். கிண்ணத்தைப் பகிர்வது என்பது துன்பங்களைப் பகிர்வதற்குச் சமம். இயேசு தம் சீடர்களிடம் தமது பாடுகளைப் பகிர்வதற்கு அவர்கள் ஆயத்தமா என்று வினவுகிறார். தாங்கள் சொல்வது என்னவென்று உணராமலே அவர்களும் “ஆம்” என்கின்றனர். இயேசுவோ அவர்களின் எதிர்கால பணிவாhழ்வை மனதில் கொண்டு, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்கிறார். யாக்கோபும், யோவானும் நல்ல சீடர்கள். அவர்கள் இயேசுவுடன் அப்பத்தையும் பகிர்ந்தனர். துன்பக் கிண்ணத்தையும் பகிர்ந்தனர். அவரது அன்பையும், ஆசிர்வாதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுபோல, அவரது பாடுகளிலும், துன்பங்களிலும் பங்கெடுத்தனர். உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் நல்ல உறவு. இன்று நமது உறவுகளை ஆய்வு செய்து நாம் துன்பக் கிண்ணத்திலும்...

இறைவனை மகிமைப்படுத்துவோம்

யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்களின் விசுவாச வாழ்வு என்பது தலைமுறை, தலைமுறையாக பரிமாறப்படுவது. தொடக்கத்தில் கடவுள் திருச்சட்டத்தை மோசேக்கு கொடுத்தார். மோசே அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார். யோசுவா அதை இஸ்ரயேலரின் பெரியவர்களிம் ஒப்படைத்தார். இஸ்ரயேலின் பெரியவர்கள் வாயிலாக திருச்சட்டம் இறைவாக்கினர்களிடம் கொடுக்கப்பட்டது. இறைவாக்கினர்கள் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களிடம் ஒப்படைத்தனர். இயேசு வாழ்ந்த காலத்தில் விசுவாச வாழ்விற்கு பொறுப்பானவர்கள் இந்த மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும்தான். எனவேதான், இவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பையும், புகழையும் எதிர்பார்த்தனர். எந்த அளவுக்கு என்றால், தங்களை கடவுளுக்கு இணையாக காட்டிக்கொள்வதுபோல தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களை முன்னிறுத்தினர். இந்தப்பிண்ணனியில்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் இயேசு அவர்களுக்கு சாட்டையடி தருகிறார். பிரிந்து போன சபை சகோதரர் ஒருவர் கேட்டார்: நற்செய்தியிலே இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்றிருக்கிறதே? எதற்காக குருக்களை, உங்கள் மக்கள் ‘தந்தை’ என்று அழைக்கிறாhகள்;? என்று. இன்றைக்கு சம்பந்தமில்லாத, தொடர்பில்லாத கேள்விகளைக்கேட்பதில் பிரிந்துபோன...