Category: Daily Manna

புனித வாழ்வு

உணர்வுகளின் வெளிப்பாடு தான் அன்பு. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனையும் முழுமையாக அன்பு செய்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஏழைகள், அடிமைகள், நோயாளிகள் என்று, இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்த விளிம்புநிலை மக்களை, அவராகவே சென்று சந்தித்து, அவர்களும் கடவுளின் பிள்ளைகள் அவர்களுக்கும் எல்லா உரிமைகளும், கடவுளின் அன்பும் இருக்கிறது என்பதை, நிறைவோடு வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. இன்றைய நற்செய்தியிலும் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11), கடவுளின் அன்பு இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதை வாழ்ந்து காட்டுகிறார். குறைபாடுகள் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகம் இழிவாகத்தான் பேசும். அவர்களை ஒதுக்கித்தான் வைக்கும். அவர்களிடத்தில் பேசுகிறவர்களையும் இழிவாக நடத்தும். இதனாலேயே பலபேர் அப்படிச்செய்வது தவறு என்று தெரிந்தும், நமக்கேன் தேவையில்லாத வம்பு? என்று, இந்த உலகத்தோடு வாழப்பழகி விடுகிறார்கள். ஆனால், இயேசு அந்த எல்லையை மீறிச்செல்கிறார். அந்த...

கிறிஸ்துவே முழுமுதற்செல்வம்

”கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன்” என்று, பவுலடியார் சொல்வார். இன்றைய நற்செய்தியின் சாராம்சத்தைத்தான், பவுலடியார் நிச்சயம் தன் வாழ்வில் அனுபவித்து இதனைச் சொல்லியிருக்க வேண்டும். இயேசுவின் சீடராக இருக்க வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும்? அவருக்குரிய தகுதிகளாக இயேசு கிறிஸ்து எதிர்பார்ப்பது என்ன? எப்படி நாம் இயேசுவின் சீடர்களாக மாற முடியும்? இந்த கேள்விகளுக்கான பதில் அனைத்தும், இன்றைய வாசகத்தில் காணப்படுகிறது. கிறிஸ்துவை முழுமுதற்செல்வமாக நாம் பெற வேண்டுமென்றால், நமது வாழ்வில் நாம் பலவற்றை இழந்துதான் ஆக வேண்டும். ஆனால், கிறிஸ்துவை நாம் பெறுகிறபோது, நமக்கு வேறு எதுவும் நிச்சயம் தேவையில்லை தான். ஏனென்றால், கிறிஸ்து தான் நமது வாழ்வின் இலக்காக இருக்கிறார். ஓட்டப்பந்த வீரன் ஒருவனுக்கு வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க முடியும். அதற்காக, அவன் எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறான். அந்த வெற்றி ஒன்று தான் வாழ்வின் இலக்காக இருக்கிறது. அதை அடைகிறபோது, மற்ற இழப்புகள்,...

வாழ்வு தரும் இறைவார்த்தை

இறைவார்த்தை நமது வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்து நம்மை வழிநடத்துவதாக இருக்கிறது என்பதை, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஓய்வுநாளைப் பற்றிய ஒரு பிரச்சனை, பரிசேயர்களால் எழுப்பப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு தீர்வு எப்படி காண்பது? எது சரி, எது தவறு என்பதை எப்படிச் சொல்வது. இறைவார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது. இயேசு தனது சீடர்களைப் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற, இறைவார்த்தையை மையப்படுத்திச் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வாக, நிச்சயம் இறைவார்த்தை இருக்கிறது என்பதை, இது நமக்குச் சொல்கிறது. இறைவார்த்தையை மையப்படுத்தித்தான் இயேசுவின் வாழ்க்கை அமைந்திருந்தது. தொடக்கத்தில் இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளின் முடிவில், மறைநூல் வாக்கு நிறைவேறவே, இவ்வாறு நிகழ்ந்தது என நற்செய்தியாளர்கள் சொல்வது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு சோதிக்கப்படுகிறபோது, அந்த சோதனையை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, இயேசுவிற்கு உதவியாக இருந்தது இறைவார்த்தை தான். தனது பணிவாழ்வை ஆரம்பிக்கிறபோது, கடவுளின் பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கிறவர் எதனை இலக்காகக் கொண்டு வாழ வேண்டும் என்பதை,...

உண்மையான மகிழ்ச்சி

பாரம்பரிய யூதர்கள் நோன்பு இருக்கிறபோது, தாங்கள் நோன்பு இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, முகத்தில் வெள்ளை பூசிக்கொள்வார்கள். நோன்பு ஒன்றும் அவ்வளவ கடினமான ஒன்று அல்ல தான். காலையில் சூரியன் தோன்றுவதற்கு முன்பிலிருந்து, சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. ஆனாலும், நோன்பு மூலமாக தங்கள் உடலையே கடவுளுக்கு காணிக்கை அளிப்பதாக, அவர்கள் நம்பினர். நோன்பு இருப்பதையோ, அவற்றில் குற்றம் கண்டுபிடிப்பதிலோ இயேசு குறை காணவில்லை, குறைகாணவும் விரும்பவில்லை. ஆனால், அவர் வலியுறுத்திச்சொல்வது, கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியான வாழ்வு என்பதைத்தான். கிறிஸ்தவ வாழ்வு என்பது நமக்கு துன்பங்களைக்கொடுக்கிற வாழ்வு அல்ல, நம்மை எப்போதும் கஷ்டத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்ற வாழ்வு. மாறாக, நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்ற வாழ்வுதான். ஆனால், அது உண்மையான, ஆழமான மகிழ்ச்சி. போலித்தனமான மகிழ்ச்சி அல்ல. பரிசேயர்களின் மகிழ்ச்சி சட்டங்களை பிற்போக்காக கடைப்பிடிக்கிற போலித்தனமான...

நல்ல முயற்சி

”விழுவது தவறல்ல, விழுந்து எழாமல் இருப்பதுதான் தவறு” என்று பொதுவாக சொல்வார்கள். அதுபோல, தோற்பது தவறல்ல, தோற்றாலும் மீண்டும் முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு. இன்றைய நற்செய்தியில் பலமுறை வலைகளைப் போட்டும், மீன் ஒன்றும் கிடைக்காமல், இனிமேல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனது வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த, பேதுரு, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் முயற்சி செய்கிறார். பேதுருவுக்கு கடல் அன்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். ஒருநாள் மீன்பாடு இருக்கும், மற்றொரு நாள் வெறுமனே திரும்பி தான் வரவேண்டியிருக்கும் என்பது பேதுரு அறியாத ஒன்றல்ல. இதுதான் அவரது வாழ்க்கை. எனவே, மீன்பாடு இல்லையென்றாலும், பேதுருவுக்கு பெரிய வருத்தம் ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல், கடலுக்குச் சென்று திரும்பியவுடன் தனது வலைகளை, பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார். அதே வேளையில் இயேசு மீண்டும் வலைகளைப் போடச்சொன்னவுடன், அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, மீண்டும் ஒரு முயற்சி எடுப்போமே, என்று வலைகளைப் போடுகிறார். நிச்சயமாக, பேதுருவுக்குள்ளாக, அவருடைய உள்ளுணர்வு...