Category: Daily Manna

முன்சார்பு எண்ணங்களைக் களைவோம்

இயேசு ஒரு புதிய மனிதராக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். போதகர் என்ற அடையாளத்தோடு, அவருடைய சீடர்களோடு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். பொதுவாக, இயேசு வாழ்ந்த காலத்தில் போதகர்கள் எனப்பட்டவர்கள் தங்களுடைய சீடர்களோடு ஊர், ஊராகச்சென்று, போதிப்பது வழக்கமாக இருந்தது. போதகர்களை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். போதகர்களுக்கு மக்கள் நடுவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. நோய்கள் குணமாக போதகர்களை செபிக்க சொல்வதும், அவர்களின் போதனைகளைக்கேட்பதற்கு செல்வதும் மக்களுக்கு பழக்கமானதாக இருந்தது. இந்த நற்செய்தியில் இயேசுவின் போதனையைக்கேட்க இயேசுவுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அங்கே நிச்சயம் இருந்திருப்பார்கள். இயேசுவைப்பற்றி மக்கள் பேசுவதைக் இதுநாள் வரை கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது நேரிடையாக அவரின் போதனையைக் கேட்பதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அவருடைய போதனையைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர்கள், இயேசுவைப்போற்றுவதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள். அதற்குக்காரணம் இயேசு நன்றாக போதிக்கவில்லை என்பது அல்ல: மாறாக, அவர்களின் முன்சார்பு எண்ணம். ஏனென்றால், இயேசுவினுடைய போதனையைக்கேட்ட அவருடைய சொந்த ஊர் மக்களும், அவருடையப்போதனையைக்...

அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்!

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43) உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது. துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார். அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள். ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார். அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன. துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள். நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”. இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும்,...

வாழும் நற்செய்தியாய் மாறுவோம்

காடுகளும், திராட்சைத்தோட்டங்களும், பாழடைந்த இடங்களும், கல்லறைத்தோட்டங்களும் பேய்களின் வாழிடம் என்று யூத மக்கள் நம்பினர். இயேசுவும் அவருடைய சீடர்களும் வந்தநேரம் இருளடைந்திருந்த நேரமாக இருந்திருக்க வேண்டும். தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனின் பெயர் இலேகியோன் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உரோமைப்படைப்பிரிவில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. ‘இலேகியோன்’ என்பது உரோமைப்படையின் 6,000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. பேய் பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இந்த வார்த்தை பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். தனக்குள்ளாக பெரிய தீய ஆவிகளின் படையே குடிகொண்டிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பதில். மேலும் பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமையாக இருந்த இந்த காலக்கட்டத்தில், வன்முறைகள், கலகங்கள் ஏற்பட்டால், அதனை அடக்க இந்த படைப்பிரிவு கொடுமையான முறையில் மக்களை அடக்கி ஒடுக்கியது. இதுவும் இந்தப்பெயரை தீய ஆவி பிடித்தருந்த மனிதன் பயன்படுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள்ளாக வன்முறையான தீய ஆவிகள் குடிகொண்டிருப்பதை இப்படி அவன் வெளிப்படுத்தியிருக்கலாம். தீய...

அதிகாரம் கொண்ட புதிய போதனை !

இயேசுவின் காலத்தவர் அவரிடம் கண்டு வியந்த புதுமைப் பண்புகளுள் ஒன்று இயேசுவின் அதிகாரம். இயேசு இயற்கையின்மீதும் (மாற் 4:41), மனிதர்கள்மீதும் (யோவா 17:2), அலகையின்மீதும், தீய ஆற்றல்கள்மீதும் (இன்றைய நற்செய்தி வாசகம்) கொண்டிருந்த அதிகாரம் அவர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தியது. இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று பரிசேயர்கள் கேட்டபோது, இயேசு அவர்களுக்கு விடையளிக்க மறுத்துவிட்டார் (மத் 21: 27). இருப்பினும், இயேசுவின் பணியையும், வாழ்வையும் அலசிப்பார்த்தால், எங்கிருந்து இந்த அதிகாரம் அவருக்கு வந்தது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். முதலில், இயேசு தந்தை இறைவனோடு கொண்டிருந்த நெருக்கமான உறவு. தந்தையிடமிருந்தே இயேசு தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். தந்தையின் விருப்பத்தை மட்டுமே செயல்படுத்தியதால், தந்தை அவரை எப்போதும் வலிமைப்படுத்தினார். இரண்டாவதாக, இயேசுவின் தூய, நேர்மையான வாழ்வு. அவரிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை என பிலாத்துவும் (யோவா 19:4,6), பரிசேயர்களும் (மத் 22:46) அறிந்துகொண்டனர். இந்த அகத்தூய்மை இயேசுவுக்கு அதிகாரம் தந்தது. நம்முடைய பேச்சிலும், செயலிலும்...

இறைவல்லமையும், இறைப்பராமரிப்பும்

இன்றைய நற்செய்தியில் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-4) இயேசு காற்றையும், கடலையும் அமைதிப்படுத்துகின்ற புதுமையை நாம் பார்த்தோம். கடலில் புயற்காற்று எழகிறது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. ஆனால், இயேசுவோ அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார். புயற்காற்று அடித்து, படகில் தண்ணீர் இருக்கிறபோது, இயேசுவால் இவ்வளவு அமைதியாக தூங்க முடிகிறது? என்ற கேள்வி எழுவது இயல்பு. ஒருவேளை இயேசுவின் உடல் மிகவும் களைப்பாக இருந்திருக்கலாம். ஓய்வில்லாத நற்செய்திப்பணி அவருக்கு களைப்பைக்கொடுத்திருக்கலாம். எனவே, அடிக்கடி படகில் பயணம் செய்து, கடலின் இரைச்சலுக்கும், அலைகளுக்கும் பழகிவிட்ட இயேசுவுக்கு, வெளியில் நடப்பது ஒன்றும் பெரிதாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். சற்று ஆழமாக இந்த இறைவார்த்தையைச் சிந்திக்கிறபோது, அதிலே மறைந்து கிடக்கிற இறையியலை நாம் உணர முடிகிறது. இயேசு கடும்காற்றுக்கு மத்தியில் அமைதியாகத் தூங்குவது, சாதாரண நிகழ்வல்ல. அது இறைவன் மீது வைத்திருக்கக்கூடிய ஆழமான நம்பிக்கை. இறைப்பராமரிப்பில் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு...