Category: Daily Manna

நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்

திருப்பாடல் 11: 4, 5, 7 ”நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்” ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று அறிவதற்கு, சோதனை செய்து பார்ப்பது மனிதர்களின் குணம். மிகப்பெரிய பொறுப்பை ஒருவரிடம் கொடுக்க விரும்பும் தலைவர், யாரிடத்தில் அதனைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவரை பலமுறை சோதித்திருப்பார். அந்த சோதனையில் எல்லாம், அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, அவரால் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் வருவதாக இருக்கும். இது மனிதர்களுக்குப் பொருந்தும் ஆனால், கடவுள் ஒருவரைச் சோதித்துப்பார்த்துதான் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது சோதித்து தான் அறிந்து கொள்ள வேண்டுமா? கடவுள் நேர்மையாளர்களையும், பொல்லாரையும் சோதித்து அறிகிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுளுக்கு ஒருவரை யாரென்று தெரிய, சோதித்து அறிய வேண்டியதில்லை. அப்படியென்றால், எதற்காக கடவுள் சோதித்தறிகிறார்? என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்? கடவுள் அறிய வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் ஒருவரை நேர்மையாளர் அல்லது பொல்லார் என்பதை அறிய வேண்டும்...

குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்

திருப்பாடல் 103: 1 – 2, 11 – 12, 19 – 20 ”குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்” மனிதர்கள் பலவீனர்களாக இருக்கிறார்கள். அந்த பலவீனம் தான், தான் தவறு செய்வதை ஏற்றுக்கொள்ளவும், அடுத்தவர் தவறு செய்வதைக் கண்டு மனம் புழுங்கவும் செய்கிறது. ஆனால், கடவுள் பலமுள்ளவர். அவர் எந்நாளும் நம்மை மன்னிக்கிறவராக இருக்கிறார் என்பதை, இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் பலமுள்ளவராக இருப்பதனால் தான், நாம் எவ்வளவு தவறு செய்தாலும், அதனைப் பொறுத்து, நம்முடைய குற்றங்களை மன்னித்து, நமக்கு விடுதலையை வழங்குகிறவராக இருக்கிறார். கடவுளின் கருணையை, மன்னிக்கும் பேரன்பை உருவகம் மூலமாக ஆசிரியர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். கிழக்கும், மேற்கும் திசைகளைக் குறிக்கக்கூடியதாக இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. கிழக்கு நோக்கிச் சென்றால், நாம் மேற்குத்திசையை கற்பனை செய்து பார்க்க முடியாது. இரண்டும் வெவ்வேறு துருவங்களைச் சார்ந்தவை. இரண்டும் சேருவது முடியாத காரியம். அதேபோலத்தான் கடவுள் நம்முடைய...

பவுலடியாரின் நற்செய்திப் பணி

திருத்தூதர்பணி 22: 30, 23: 6 – 11 பவுலடியாரின் நற்செய்திப் பணி சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளும் திறனை பவுல் இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்துகிறார். ஏதேன்ஸ் நகரத்து மக்கள் பெயர் தெரியாத கடவுளை வணங்குவதை, அவர்களது அறிவு மொழியில் பாராட்டி, இறுதியாக அவர்கள் வணங்குகிற கடவுளைப் பற்றித்தான் அறிவித்துக்கொண்டிருப்பதாக, அறிவாற்றல் கொண்டு விளக்குகிறார். இந்த பகுதியிலும் தன்னுடைய அறிவாற்றலை அவர் வெளிப்படுத்துகிறார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு, ஆயிரத்தவர் தலைவர் ஆணைபிறப்பிக்கிறார். பவுல் சிறையிலிருந்து அழைத்துவரப்படுகிறார். பவுல் அங்கே கொண்டுவரப்பட்டபோது, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏராளமாக திரண்டிருப்பதைப் பார்க்கிறார். உயிர்ப்பு உண்டென அறிவித்ததால், தான் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். சிறையில் இருப்பது என்பது, பவுலடியாருக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த நிலையிலும் அவர் துணிவோடு பேசுகிறார். உயிர்ப்பு பற்றிய பவுலடியாரின் பேச்சு அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இதுதான்? பரிசேயர்கள் உயிர்ப்பை நம்புகிறவர்கள். சதுசேயர்கள்...

கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்

திருப்பாடல் 68: 9 – 10, 19 – 20 ”கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்” அனைத்து உலகின் அரசர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள், புகழுங்கள் என்கிற வார்த்தைகளை நாம் அடிக்கடி திருப்பாடலில் பார்க்கிறோம். ஆண்டவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்கிற சிந்தனைகள் எதற்காக மீண்டும், மீண்டும் தரப்படுகிறது? இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள் மற்றவர்களைப் புகழ்கிறார்கள். உதாரணமாக, அரசியல் தலைவர்கள் பதவிக்காக, அதிகாரத்திற்காக மற்றவர்களை முகஸ்துதி செய்கிறார்கள். தங்களது மானத்தை விற்றாலும் பரவாயில்லை, பதவியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். எதிர்பார்ப்புக்களோடு புகழக்கூடியவர்கள் அதிகம். சாதாரண பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் மனிதர்களைப் புகழக்கூடிய பலபேர் கடவுளைப் புகழ்வதற்கு நேரமில்லை. இந்த மனநிலையிலிருந்து விடுவிக்கப்பெற்று, கடவுளைப் புகழ வேண்டும் என்பதே ஆசிரியரின் அறைகூலாக இருக்கிறது. கடவுளைப் போற்றுவதும் புகழ்வதும் நமக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தருகிறது. அது எதையோ ஒன்றை எதிர்பார்ப்பது கிடையாது. கடவுள் நமக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற ஓர்...

இறைவன் வழங்கும் கொடைகள்

திருத்தூதர் பணி 1: 15 – 17, 20 – 26 இறைவன் வழங்கும் கொடைகள் இறைவன் நமக்கு பல அருள்வரங்களை வழங்குகிறார். ஆனால், அந்த அருள் நம்மிடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற வாழ்க்கையை நாம் வாழாவிட்டால், நிச்சயம் அது நம்மிடமிருந்து எடுக்கப்படும். அதுதான் யூதாசின் வாழ்க்கையில் நடந்திருப்பதாக, முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. யூதாஸ் அடிப்படையிலே எப்படிப்பட்டவன் என்பதை ஒருவர் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், அவனுக்கு கடவுளின் நிறைவான அருள் வழங்கப்பட்டது. இறைவனுடைய மகன், தனக்கு பின்னால் தொடரப்பட இருக்கிற புனிதமான பணிக்கான கருவியாக அவரைத் தேர்ந்தெடுக்கிறார். பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ வேண்டிய யூதாஸ், அதனை உதாசீனப்படுத்திவிடுகிறான். அந்த இழப்பு மற்றவர்களால் அவனுக்கு நேர்ந்ததல்ல. அவனுடைய நிலைக்கு அவன் வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. அந்த இழப்பு மற்றொருவருக்கு ஆதாயமாக முடிகிறது. மத்தியா என்கிறவர் யூதாசின் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இறைவனுடைய அருளும், கொடைகளும் நமக்கு வழங்கப்படுகிறபோது, அதனை பெறுவதற்கு...