Category: Daily Manna

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 5 – 6 ஆண்டவரின் செயல்களை உயர்ந்ததாக இந்த திருப்பாடல் நமக்கு எடுத்தியம்புகிறது. ஆண்டவரின் செயல்கள் எவை? ஆண்டவர் எளியவர்கள் நீதி பெற உழைக்கிறார். தன்னை நம்பியவர்களை கைவிடாது காக்கிறார். ஏழைகள் பக்கமாக நிற்கிறார். அநீதியையும், அநீதி செய்கிறவர்களையும் வெறுக்கிறார். கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும், கடவுளையே தங்களின் செல்வமாக ஏற்றிருக்கிறவர்களையும் அவர் ஒருபோதும் கைவிடாது பாதுகாக்கிறார். கடவுளின் செயல்கள் எப்போதும உயர்ந்தவையாகவே இருக்கிறது. பல வேளைகளில் கடவுளின் செயல்களில் இருக்கிற நீதியை, உண்மையை உணர முடியாதவர்களாக இருக்கிறோம். நம்முடைய பார்வையில் கடவுளின் செயல்கள் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. அதனால் கடவுள் மீது கோபப்படுகிறோம். ஆனால், காலம் நாம் எவ்வளவுக்கு கடவுளைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வழிநடத்தியபோதெல்லாம், கண்டித்து திருத்தியபோதெல்லாம், கடவுளை வேண்டா வெறுப்பாகவே பார்த்தார்கள்....

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்

திருப்பாடல் 101: 1 – 2a, 2c – 33b, 5, 6 தூய் உள்ளம் தான் கடவுள் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் எதிர்பார்ப்பது ஆகும். இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் மிகப்பெரிய பட்டங்களைப் பெற வேண்டும் என்றோ, அதிகாரத்திலும், செல்வச்செழிப்பிலும் வளர வேண்டும் என்றோ கடவுள் ஒருபோதும் விரும்பியது கிடையாது. அப்படி வாழ்கிறவர்கள் கடவுளுக்கு மகிழ்ச்சியைத்தரவும் முடியாது. கடவுள் மனிதர்களிமிருந்து விரும்புவது எல்லாம் தூய்மையான உள்ளம். இன்றைய திருப்பாடல் ஆசிரியரும் அதனை முழுமையாக உணர்ந்தவராக இந்த பாடலை எழுதுகிறார். திருப்பாடல் ஆசிரியரைப் பொறுத்தவரையில், ஆண்டவரைப் பற்றிய தவறான பார்வையை வைத்திருந்தார். எதிரி நாடுகளுக்கு எதிராக வெற்றி பெறுவதன் மூலம், கடவுளை மகிழ்விக்க முடியும். எவ்வளவு தவறுகள் செய்தாலும், பலிகள் மூலமும், வெற்றிகள் மூலமும் தன்னுடைய பாவத்தைக் கழுவி விட முடியும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அது முற்றிலும் தவறானது என்பதை, வெகு விரைவாகவே உணர்ந்து கொண்டார். அந்த அனுபவப் பாடத்தைத்தான்,...

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்

திருப்பாடல் 28: 2, 7 – 8a, 8b – 9 ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இன்றைய திருப்பாடல் ஒரு விளக்கத்தைத் தருகிறது. தூய்மையான உள்ளம் தான், வாழ்க்கைக்கான அடிப்படை என்கிற உயர்ந்த மதிப்பீட்டையும் அது கற்றுத்தருகிறது. தூய உள்ளத்தோடு வாழ வேண்டும் என்பது எளிதான காரியமல்ல. தூய உள்ளத்தோடு வாழ்வதற்கு நமக்குள்ளாக இருக்கிற தீய எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். இருள் என்று எதுவும் கிடையாது. ஒளியில்லாத நிலை தான் இருள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, அனைத்தும் நல்லதெனக் கண்டார். எனவே, இந்த உலகத்தில் தீயது என்று எதையுமே அவர் படைக்கவில்லை. நன்மை இல்லாத நிலை வருகிறபோது, அது நமக்கு தீமையாகத் தோன்றுகிறது. இந்த தீய எண்ணம் நம்முடைய வாழ்வையே மாற்றிவிடுகிறது. இது நம்முடைய மகிழ்ச்சியையும், அமைதியையும் சிதைத்துவிடுகிறது. அடுத்தவரைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ளச்செய்கிறது. நன்மை செய்கிறவர்களைப் பழித்துரைக்கச் செய்கிறது....

காணாமல் போன நாம் !

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது. இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: “இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்â€?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிற ‘தெய்வங்களை’ நாடிச் செல்லும் இனமாக...

திருச்சிலுவையின் மகிமை விழா

திருச்சிலுவை மகிமைப் பெருவிழா உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள்,...