Category: Daily Manna

தூய சவேரியார் திருவிழா

புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா வந்தார்! வென்றார்! மத்தேயு 8:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம்...

எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9 இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே...

இறைவனின் வருகையும் நமது வாழ்வும்

திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் இருக்கிறோம். கடந்த வழிபாட்டு ஆண்டை நேற்றோடு நிறைவு செய்திருக்கிறோம். புதிய ஆண்டை இன்றோடு தொடங்குகிறோம். ஏறக்குறைய நமது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்தது இது. கடந்த ஆண்டு முழுவதும் இயேசுவின் பிறப்பு, போதனை, நமக்காக இறந்து உயிர்த்து, விண்ணகம் சென்று, அனைத்துலக அரசராக அவரை நிலைநிறுத்திக்கொண்டதை தியானித்து நம்மையே புதுப்பித்துக்கொண்டிருக்கிறோம். மற்றொரு புதுப்பித்தலுக்கான தொடக்கம் தான் இன்றைய திருவருகைக்காலத்தின் முதல் வாரம். இந்த நாளிலே நாம் அனைவரும் சிந்திப்பது புதிய ஆண்டிற்கான தயாரிப்பு மட்டுமல்ல. பழைய ஆண்டு எந்தளவுக்கு நம்மைப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வதும் தான். இயேசுவின் வாழ்வு முழுவதையும் அறிந்து தியானித்திருக்கிற நாம், எப்படி அவரது வாழ்வை நமது வாழ்வாக மாற்றியிருக்கிறோம்? அல்லது மாற்ற முயற்சி எடுத்திருக்கிறோம்? அதிலே எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம்? அல்லது சறுக்கியிருக்கிறோம்? இந்த கேள்விகளை நாம் மீண்டும், மீண்டுமாகக் கேட்டுப்பார்த்து, அதற்கான பதில்களையும் நாம் காண முயல வேண்டும்....

அந்திரேயா – ஆண்டவர் பக்கமே!

திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா அந்திரேயா – ஆண்டவர் பக்கமே! மத்தேயு 4:18-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்தவர். விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அங்கு இருந்தார்), “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவை சுட்டிக்காட்டினார். உடனே அந்திரேயா இயேசுவிடம், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்க, அவர் “வந்து பாரும்” என்று சொன்னார். அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை தன்னுடைய...

உயிரினங்களே! ஆண்டவரைப் போற்றுங்கள்

தானியேல் 1: 52, 53 – 54, 55 – 56, 57 – 58 இறைவனின் படைப்புக்களை அவரைப் போற்றுவதற்கு இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. கடல் உயிரினங்கள், விலங்குகள் என்று ஒவ்வொன்றாக இந்த பாடல் இறைவனைப் புகழ்வதற்கு அழைப்புவிடுக்கிறது. இது ஒவ்வொரு உயிரினமும் இறைவனிடமிருந்து பல கொடைகளை, நன்மைகளைப் பெற்றிருப்பதையும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடமைகளை நினைவூட்டுவதாகவும் அமைகிறது. இறைவன் எல்லாரையும் அன்பு செய்கிறார். குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமல்ல, படைப்புக்களையும் அன்பு செய்கிறார். அவற்றிற்கு தலைவராக இருந்து அவைகளுக்குத் தேவையானவற்றையும் செய்து வருகிறார். அவற்றிற்கு கட்டளை தருகிறவரும் ஆண்டவரே. அவையும் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன. இவ்வாறு பல்வேறு நன்மைகளைப் பெற்ற இயற்கையும், இறைவனைப் போற்றிப் புகழ்வதற்கான பொறுப்பை கொண்டிருப்பதை, இந்த பாடல் உறுதிப்படுத்துகிறது. இறைவன் உடனிருந்து எல்லாவற்றையும் இயக்குபவராக இந்த பாடல் பார்க்கிறது. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இறைவனை கருதுகிறது. இறைவனைப் போற்றுவது எல்லாருக்கும் மிகப்பெரிய பொறுப்பு என்பதை, இது உணர்த்தி...