Category: Daily Manna

ஆறுதலின் இறைவன்

நமது வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, நம்மோடு இருந்து, நமக்கு ஆறுதலைத் தரக்கூடியவராக நம் இறைவன் இருக்கிறார் என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. நமது இறைவன் ஆறுதலின் தேவனாக இருக்கிறார். ஆறுதல் என்றால் என்ன? ஆறுதல் யாருக்குத்தேவை? மத்தேயு 5: 4 சொல்கிறது: ”துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்”. யாரெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இறைவன் ஆறுதலைத் தரக்கூடிய தேவனாக இருக்கிறார். இறைவன் மூன்று வழிகளில் தனது ஆறுதலை வெளிப்படுத்துகிறார். முதலாவது, தனது வார்த்தையின் வடிவத்தில் ஆறுதலை வெளிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் இருக்கிறபோது, மரியாவுக்கும், அவருடைய அன்புச்சீடருக்கும் மிகப்பெரிய துன்பம். மரியாவுக்கு மகனை இழக்கிற வேதனை. யோவானுக்கு தன்னுடைய குருவை, வழிகாட்டியை இழக்கிற கொடுமை. அந்த நேரத்தில், “இதோ உன் தாய், இதோ உன் மகன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இரண்டுபேருக்குமே ஆறுதலைத் தருகின்றன. இரண்டாவது, தனது உடனிருப்பின் வழியாக இறைவன் மக்களுக்கு ஆறுதலாக...

இறையாட்சி மலர வேண்டும்

இயேசு இறையாட்சியின் இயல்புகளைப் பற்றி இன்றைய நற்செய்தியில் விளக்க முற்படுகிறார். இறையாட்சி என்பது, கடவுளின் அரசு விண்ணகத்தில் செயல்படுவது போல, இந்த மண்ணகத்திலும் செயல்படுவதாகும். படைப்பு அனைத்திற்குமான கடவுளின் இலக்கு இதுதான். இந்த இறையாட்சி தத்துவத்தை, விதை வளர்ந்து மரமாகக்கூடிய நிகழ்வோடு ஒப்பிடுகிறார். ஒரு விவசாயி நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். அதைப் பேணிப் பராமரிக்கிறார். அதாவது, அதற்கு தண்ணீர் பாய்க்கிறார். நேரத்திற்கு உரமிடுகிறார். பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறார். இவ்வளவு செய்தாலும், விதை எப்படி வளர்கிறது? எப்போது வளர்கிறது? என்பது அவருக்குத் தெரியாது. நேற்றைய நாளை விட, இன்றைக்கு வளர்ந்திருப்பதை பார்த்துதான், விவசாயி, அது சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். ஏனென்றால், விதைத்தது விவசாயி என்றாலும், அதனைப் பேணிக்காக்கிறவர், அதற்கு வாழ்வு கொடுக்கிறவர் கடவுள் தான். அதுபோல, வாழ்வில் நடப்பதன் நிகழ்வு அனைத்திலும், கடவுளின் அருட்கரம் தங்கியிருக்கிறது என்பதை, நாம் உணர வேண்டும். கடவுளின் வல்ல செயல்களை நாம் உடனடியாக உணர முடியாது....

உண்மையின் வழிநடப்போம்

நாம் வாழும் உலகம் உண்மையோடு சமரசம் செய்து கொள்ள பழகிவிட்டது. ”என் தந்தை செய்வது தவறுதான். அது எனக்கும் தெரியும். ஆனால், என்ன செய்ய? அவரை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அவர் என் தந்தை ஆயிற்றே?”. செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்பதோ, அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதோ, இலட்சத்தில் ஒருவரின் இலட்சியமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவருமே, இந்த இலட்சத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசையாக இருக்கிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது வாழ்வு அனுபவத்தில் உண்மையோடு தோழமை கொள்வது எவ்வளவு சவாலான வாழ்வு என்பது நாம் அறியாதது அல்ல. ஆனால், அதனை வாழ்வதற்கு நாம் தயார் இல்லை. மார்ட்டின் லூதர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையில் நடந்து வந்த ஒருசில செயல்பாடுகள், உண்மையான விசுவாசத்திற்கு எதிரானது என்று நினைத்தார். அதனை உண்மையாக ஏற்றுக்கொண்டார். பலமிக்க திருச்சபையை எதிர்ப்பது, மற்றவர்கள் பார்வையில்...

மண்ணகம் – இறைவனின் பிரசன்னம்

உலகம் என்பது கடவுளின் படைப்பு மட்டுமல்ல, கடவுளின் பிரசன்னம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய இடம். இந்த உண்மையை இயேசு தனது போதனையின் வாயிலாக எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் போதனை, அறிவுப்பூர்வமாக, அறிவில் சிறந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துச்சிந்தனைகள் நிறைந்ததாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் விதைகளை வைத்து இயேசு அருமையானச் செய்தியைத் தருகிறார். பொதுவாக, விண்ணகத்தை, பூமியோடு ஒப்பிடுகிறபோது, மண்ணகம் ஒன்றுமே இல்லாததுபோல, மண்ணகத்தை வெறும் ஒரு படைப்பு போல பார்க்கக்கூடிய நிலை, நம்மிடமே உள்ளது. ஆனால், இயேசுவின் போதனையில் உள்ள கருத்துக்களைப்பார்த்தால், எந்த அளவுக்கு மண்ணகம் கடவுளின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளது என்பதும், மண்ணகம் கடவுளின் வெறும் படைப்பு மட்டுமல்ல, அது இறைவன் வாழும் ஆலயம் என்பதும் நமக்குப்புலப்படும். இன்றைக்கு கடவுளின் படைப்பான இந்த பூமி, சிலபேரின் சுயநலத்திற்காக சிதைக்கப்படுவது கொடுமையானது. இந்த பூமி, இறைவனின் பிரசன்னம் தாங்கிய இடம் என்றால், அதை சிதைப்பது,...

கீழ்ப்படிதல்

தொடக்கத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்தார். அவர்களை தனது சாயலில், உருவத்தில் படைத்தார். இவ்வாறு தனது அன்புக்குரியவர்களாக, அவருடைய பிள்ளைகளாக மனிதர்களைப் பேணிக்காத்தார். ஆனால், மனிதன் கடவுளை மிஞ்சிவிட வேண்டும் என்கிற, அலகையின் கண்ணியில் சிக்கி, அந்த உறவை இழந்துவிடுகிறான். இவ்வாறு கடவுளின் பிள்ளைகளாகப் படைக்கப்பெற்ற மனிதன் கீழ்ப்படியாமையால், கடவுளின் வார்த்தையைப் புறந்தள்ளியதால், அந்த உறவை இழந்துவிடுகிறான். இன்றைய நற்செய்தி, மனிதன் இழந்த உறவை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையைத் தருகிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே, அந்த ஆலோசனை. கீழ்ப்படியாமை தான், உறவைச் சிதைக்கிறது. கீழ்ப்படிதல் உறவை ஆழப்படுத்துகிறது. முதல் மனிதன் ஆதாம் கீழ்ப்படியாமையால் துன்பத்தை வருவித்துக்கொள்கிறான். கடவுளின் மகன் இயேசுவோ, தனது கீழ்ப்படிதல் மூலமாக இழந்த உறவை புதுப்பித்து ஆழப்படுத்துகிறார். நம்மையும் கடவுளின் பிள்ளைகளாக மீண்டும், உறவை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்துகிறார். கடவுளோடு நாம் மீண்டும் இழந்த உறவை புதுப்பித்துக்கொள்ள முடியும். எப்போது நாம் கடவுளின் திருவுளத்தின்படி நடக்கிறோமோ, அந்த நிமிடமே...