Category: Daily Manna

கூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்

லூக்கா 9:1-6 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பயணமாக ஒரு ஊருக்குச் செல்லும் போது பயணத்திற்கு தேவையான பொருட்கள், பணம், உணவு, அலைபேசி மற்றும் அவசியமானவைகள் அனைத்தும் இருக்கிறதா என நன்கு பரிசோதித்துப் பார்ப்போம். அது நல்லது தான். அதைவிட உயர்வாக நாம் போகும் இடத்திற்கு நல்ல குணத்தைக் கொண்டு போகிறோமா என்பதை பெரும்பாலும் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. இன்று அதை சிந்தியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் என சொல்லிக்கொண்டே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மோடு வருகிறது. போகுமிடமெல்லாம் நல்ல குணத்தை கொண்டுச் செல்ல இரண்டு செயல்பாடுகளில் நாம் இறங்க வேண்டும். 1. சிறந்தவைகளை வாசியுங்கள் நல்ல புத்தங்களை வாசிக்க வேண்டும். நம்மை பண்படுத்தும், பதப்படுத்தும் நல்ல அருமையான...

திருத்தூதர் மத்தேயு திருவிழா

பின்பற்றியவர் பிரபலமானார் மத்தேயு 9:9-13 இறையேசுவில் இனியவா்களே! திருத்தூதர் மத்தேயு திருவிழா திருப்பலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மத்தேயு என்ற பெயரின் பொருள் “யாவேயின் பரிசு” என்பதாகும். அல்பேயுவின் மகனான மத்தேயு, உரோமை ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். உரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர். புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மிகவும் பிரபலமாக மாறுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே....

உடன் பணியாளர்களாக…

இன்றைய நற்செய்தியிலே, இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடனுழைத்தவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இயேசுவின் திருத்தூதர்கள் மற்றும் பெண் சீடர்களைப்பற்றியும், அவர்கள் யார்? என்பது பற்றியும், நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசு தனிமனிதராக பணி செய்யவில்லை. அவருடைய பணிவாழ்வில் பலருக்கும் பங்கு இருந்ததை இது நமக்கு தெளிவாக்குகிறது. இந்த உலகத்தில் பொதுநலத்தோடு மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையான மக்களுக்கு, களத்தில் இறங்கி உதவி செய்ய முடியாது. இதற்கு அவர்களது பணி, குடும்பம், சூழ்நிலை தடையாக இருக்கலாம். ஆனால், தங்களால் இயன்றதை பொருளாகவோ, பணமாகவோ கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அதில் அவர்களுக்கு நிறைவு இருப்பதாக உணர்கிறார்கள். இரண்டாவது வகையான மக்களும் நேரடியாக முழுநேரத்தையும், முழுமூச்சியோடு இறங்க வாய்ப்பில்லாதவர்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது உடனிருப்பு மூலமாக, சிறு,சிறு உதவிகள் மூலமாக எப்போதும் பொதுநலனோடு உழைத்துக்கொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது வகையான மக்கள், முழுக்க முழுக்க மக்களுக்காக, பொதுநலனோடு உழைக்கிறவர்கள். அவர்கள் அதற்காக எந்த தியாகத்தையும்...

பாவத்திற்கு பரிகாரம்: ஆசையும், பேராசையும்

லூக்கா 7:36-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதா்கள் நாம் மிகவும் பலவீனமானவர்கள். குறைகள், கறைகள் கொண்டவர்கள். பாவிகளாகிய நாம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் போது நிறைவை நோக்கி புனிதத்தை நோக்கி வளர்கிறோம் என்பதை இன்றைய நற்செய்தி கற்றுத்தருகிறது. பாவத்திற்கு இரண்டு விதங்களில் நாம் பரிகாரம் செய்ய முடியும். 1. ஆசை ஆசை நான் பாவி தான் இருந்தாலும் நான் மாறுவேன் என்ற அதிகப்படியான ஆசை ஆளையே மாற்றுகிறது. அந்த ஆசை வளர வளர அது நம்மை புனிதத்திற்குள் கடத்திச் செல்லுகிறது. புனிதர்கள் அனைவரும் இந்த ஆசையைத் தான் கொண்டிருந்தார்கள். நற்செய்தியில் வரும் பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கழுவி பாவத்திலிருந்து வெளியே வருவதற்கான தன்...

ஏன் இப்படி இருக்கீங்க? இது வேண்டாம்!!!

லூக்கா 7:31-35 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்க்கையில் ஒருசிலரை நாம் புரிந்துக்கொள்வதே மிகக் கடினம். அவர்களோடு பயணிப்பதே மிகவும் சிரமம். அப்படிப்பட்டவர்கள் நம் அருகில் இருந்துவிட்டால் நாம் அவ்வளவுதான். யார் அவர்கள்? என்பதை நற்செய்தி வாசகம் வெளிப்படையாக எடுத்துயம்புகிறது. எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்கள் தான் அவர்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்குமிடம் இருக்கின்ற இன்பத்தையும் இழந்துவிடும், ஆண்டவர் இயேசுவை கூட இன்பமாய் இருக்க விடாமல் இவர்களின் வார்ததைகள் தடுத்திருக்கின்றன. இவர்கள் கண்டிப்பாக மாறனும். இந்த நிலை வேண்டாம் என அவர்களை இன்றைய வழிபாடு வளமையான மாற்றத்திற்கு வரவேற்கிறது. இரண்டு விதமான அழைப்புக்கள். 1. உயர் எண்ணத்திற்கு வருக! எதற்கெடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் மனநிலை கொண்டவர்கள் உயர் எண்ணத்திற்கு வர...