Category: Daily Manna

அடிமைத்தனமே விடுதலை

லூக் 1: 26 -38 பல அடிமைத்தனத்தை இந்த பூவுலகு கண்டுள்ளது. பல புரட்சிகளை இம்மானிடர்கள் கடந்து வந்துள்ளனர். எத்தனைப் புரட்சிகளும் வந்தாலும் மீண்டும் மீண்டும் மனிதகுலம் எதற்காகவாது அல்லது யாருக்காவது இன்றுவரை அடிமையாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை மறக்க, மறைக்க இயலாது. அப்படியென்றால் அடிமைத்தனம் இவ்வுலகில் நிரந்தரமா? நம்மை நாம் விடுவிக்க இயலாதா? இத்தகைய கேள்விகளுக்கு விடையும், மாதிரியும் தான் இந்த பெருவிழா. சாலையோரத்தில் நாயினைச் சங்கிலியில் பிடித்துக் கொண்டு செல்பவர்களைப் பார்த்து கேட்டால் அவர் நான் தான் என் நாயினை இழுத்துச் செல்கிறேன் என்றும், இந்த நாயினைத்தான் கழுத்தில் கட்டி என் கைக்குள் வைத்திருக்கிறேன் என்றும் கூறுவார். ஆனால், பல நேரங்களில் அவரைத்தான் அந்த நாய் தான் விருப்பட்ட இடத்திற்கெல்லாம் இழுத்து செல்கிறது. இதனைப் போலதான் நம் வாழ்வில் நாம் நினைக்கின்ற ஆசைகள், கனவுகள், திட்டங்கள், எல்லாம் நம் வாழ்வை அதனதன் வழிகள் இழுத்துச்...

உண்மையா?

யோவான் 8: 31-42 “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” -இதை இன்றைய தேர்தல் நெருங்குகிற சூழலில் சொன்னால் கண்டிப்பாக அனைவரும் சிரித்துவிடுவர். “உண்மையா அது என்ன” என்று பிலாத்து கேட்டதுப் போலதான் நாம் அனைவரும் கேட்போம். காரணம் யார் அதிகமாக பொய்க்கூறி ஏமாற்றுவார்களோ அவர்களே சிறந்தவர்கள், தலைவர்கள் ஆகுகிறார்கள். காரணம் இன்றைய உலகம் உண்மைப் பேசுபவர்களைவிட பொய் பேசுபவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறது. மசாலா தடவிப் பேசுபவர்களை உடனடியாக நம்புகிறது. பல வருடங்களாக மாற்றாத, பொய்யான தேர்வு வரைவினை இன்றுவரை கட்சிகள் வெளியிடுவது நாம் எவ்வளவு பொய்யானாலும் நம்புவோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். உண்மை ஊனமாகி விட்டது இவ்வுலகினில். ஆனால் இவ்வுலகில் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருப்பவன் உண்மையை உணர்கின்றான். அது அவனுக்கு விடுதலை அளிக்கும், எதையும் தனது இயல்பான நாட்டத்தின் வழியே, செய்ய வேண்டியதை மனத்திடத்துடன் செய்வதே உண்மையான விடுதலையாகும். அத்தகைய உரிமை வாழ்வுக்கே இயேசு நம்மை அழைக்கிறார். அதையம்...

தாழ்த்தினால் உணர்வாய்

யோவான் 8: 21-30 கடவுளுக்கும் மோசேவுக்குமான உரையாடலில் மோசேவின் கேள்விக்கு கடவுளின் பதில் கிடைக்கிறது. காண்க வி.ப 3:13-14, “கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே” என்றார். இன்றைய நற்செய்தியில் அவர்களின் கேள்விக்கு இயேசு ‘இருக்கிறவர் நாமே’ என்ற பதிலினைக் கொடுக்கின்றார். கடவுளின் வார்த்தையை மோசே முழுவதுமாக புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை, ஆனால் அவரின் வார்த்தை அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உந்தி தள்ளியது. அவரும் தன்னிடம் பேசிய அக்குரலினை நம்பி ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் குரலினை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, மாறாக, அவரையும் அவரின் ஒவ்வொரு வல்ல செயல்களையும் தன் கண்களால் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவர்கள,; அவரை நம்ப தயங்கி, ‘இருக்கின்றவராக இருக்கிறவர் நானே’ என்பதினை இன்னும் எளிதாக்கி ‘நானே’ என்று ஏழுமுறை எடுத்துக்காட்டோடு பேசியவரின் (நேற்றைய சிந்தனையைப் பார்க்கவும்) வார்த்தைகள் இவர்களின் அதிமேதாவித்தனத்துக்கு புரியவில்லை. புரிந்தாலும் தன்னோடு பார்த்து பழகியவர்கள் என்பதால் அவர்களின்...

நான் எதற்கும் அஞ்சிடேன்

திருப்பாடல் 23: 1 – 3a, 3b – 4, 5, 6 அச்சம் என்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஒன்று. வாழ்க்கையில் எது நடக்குமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருக்கும். அடுத்த வேளை என்ன நடக்குமோ என்கிற பதட்டம் மனிதர்களுக்குள்ளாக நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் பயப்படாமல் இருக்கிற மனிதர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களே, அடுத்த வேளையைப் பற்றியோ, அடுத்த நாளைப்பற்றியோ கவலை கொள்ளாத மனிதர்கள். ஆகவே, நாம் அனைவருமே கடவுள் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைத்து, நமது வாழ்வை வாழ்வதற்கு இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். எது சரி? எது தவறு? என்பதை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இயேசுவை எப்படி சிக்க வைக்கலாம்? என்பதற்காக. இது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சனை சற்று...

கோதுமை மணியின் மாட்சி

தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின் போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக் காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு அவர்களிடம் உரையாடுகிறார். கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை. துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள். எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய் இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து “கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1: 22-24). அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும், அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுக்க முன்வந்தார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம்...