Category: Daily Manna

ஆண்டவரைப்பற்றிய அச்சம் தூயது

திபா 19: 9 ஆண்டவரைப்பற்றி நாம் அஞ்ச வேண்டுமா? கடவுள் நம்மை அன்பு செய்கிறார். நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். நம் அனைவர் மீதும் அதிக இரக்கம் காட்டி வருகிறார். அப்படியிருக்கிறபோது, ஏன் கடவுளுக்கு நாம் பயந்து வாழ வேண்டும்? அச்சம் என்கிற வார்த்தையின் உண்மையான பொருளை அறிந்து கொண்டால், இதுபற்றி கேள்விகள் நமக்கு வராது. இங்கு அச்சம் என்று பயன்படுத்தப்படுகிற வார்த்தை, வெறும் பயத்தைக் குறிக்கக்கூடிய சொல் அல்ல. மாறாக, இறைவன் மீது வைத்திருக்கிற தனிப்பட்ட மரியாதையையும், மதிப்பையும், இறைவன் மீது வைத்திருக்கிற உண்மையான அன்பையும் குறிப்பதாக இருக்கிறது. இறைவன் மீது நாம் வைத்திருக்கிற இந்த அச்சம் தான், நம்முடைய வாழ்க்கையில் பயன் தருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகம், பல மடங்கு பலன் தரும் விதையாக மாறுவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்முடைய வாழ்க்கையை விதைக்கு ஒப்பிடலாம். இந்த உலகத்தில் பிறக்கிற நாம் அனைவரும், விதைகளாக விதைக்கப்படுகிறோம்....

ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது!

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க...

இறைவார்த்தையின் மீது இயேசுவின் தாகம்

எங்கே செய்ய வேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறதோ, அங்கே நிச்சயம் அதைச்செய்வதற்கான வழி உண்டு – என்று பொதுவாகச் சொல்வார்கள். இயேசுவின் பணிவாழ்வு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசுவின் உறவுகள் கூட அவரைப்புரிந்து கொள்ளாத கடுமையான நேரம். இவ்வளவு நாட்கள், தொழுகைக்கூடத்தலைவர்களின் சிறந்த போதகராக வலம் வந்த இயேசுகிறிஸ்து, அவர்களாலே புறக்கணிக்கப்படுகிறார். காரணம், அதிகாரவர்க்கத்தினரின் அழுத்தம் தாங்காமல், அவர்கள் இயேசுவுக்கு தொழுகைக்கூடத்தில் போதிப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள். இயேசு மனமுடைந்து விடவில்லை. சோர்ந்து போகவில்லை. ஆனால், இறைவார்த்தையைப் போதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவருக்குள்ளாக மிகத்தீவிரமாக இருக்கிறது. இந்த உலகம் கடவுளின் அழகான இல்லம். நிச்சயம் எங்கு வேண்டுமானாலும் என்னால் போதிக்க முடியும் என்று சொல்லி, இறைவார்த்தையைப் போதிப்பதில் கருத்தாய் இருக்கிறார் இயேசு, இயேவை போதிக்க விடக்கூடாது என்பதின் அடுத்த அழுத்தம் தான், அவருடைய உறவினர்களை, அதிகாரவர்க்கத்தினர் தூண்டிவிடுவது. ஆனால், இயேசு இறைவார்த்தை ஒன்றையே தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்கிறார். இயேசுவிடத்தில்...

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரைத் தொழுவேன்

திருப்பாடல் 116: 12 – 13, 15 – 16, 17 – 18 மீட்பின் கிண்ணம் என்றால் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பதின் பொருள் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பது இறைவனை வழிபடக்கூடிய செயலைக் குறிக்கிறது. இறைவனை வழிபடுகிறபோது, திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை பாடுகிறார். அவர் ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைப் படைக்கிறபோது, நீர்மப்படையலும், விலங்குகளின் இறைச்சியும், பலிப்பொருட்களுமாக இணைத்துப் படைக்கப்படுகிறது. இறைவனுக்கு படைத்துவிட்டு அதனை எடுக்கிறபோது, இறைவனின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. கிண்ணம் என்பது, “நிறைவான“ ஆசீரைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் மீட்புக்கான ஆசீர்வாதம், அதாவது வாழ்வை அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான ஆசீர்வாதத்தை அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது, இந்த சடங்கு உணர்த்தக்கூடிய உண்மையாகும். இறைவனிடம் வரக்கூடிய நாம் அவருடைய அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற...

ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை

திருப்பாடல் 105: 1, 5, 8 – 9, 24 – 25, 26 – 27 ஒரு சில திருப்பாடல்கள் மிக நீளமானதாக அமைந்திருக்கும். ஒரு சில திருப்பாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். குறுகியதோ, நீளமானதோ, எப்படிப்பட்ட மனநிலையோடு வார்த்தைகளில் ஒன்றித்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த திருப்பாடல் நீளமான திருப்பாடல். வழக்கமான மற்ற திருப்பாடல்களைப் போல, இறைவனின் மாட்சிமையைப் புகழ்வதற்கான பாடல் தான் இது. உடன்படிக்கைப் பேழையை கொண்டு வரக்கூடிய நிகழ்வை குறிக்கக்கூடிய பிண்ணனியைக் கொண்டதனால், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை இது குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடல் ஆபிரகாமோடும், இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்களோடும் இறைவன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆபிரகாம் குழந்தை இல்லாமல் இருந்த காலத்தில், கடவுள் அவர் வழியாக சந்ததியைப் பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஆபிரகாமோ உடன்படிக்கையை மேற்கொள்கிறார். அந்த வாக்குறுதிக்கு உண்மையானவராக இருக்கிறார். இஸ்ரயேலை வழிநடத்திய...