† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக? அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது. இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை...

DIVINE PAYBACK

“With divine recompense He comes to save you.” –Isaiah 35:4 Often I hear people express their impression that when God comes into their life, He will come with payback; they expect that He will come to repay each person according to their sins and failings with punishment and judgment. Similarly, St. John the Baptizer expected God to come as One mighty in judgment (Mt 3:10-11). Today’s Scripture readings, and in fact the entire Gospel, proclaim a different message: God will come with mercy, kindness, and even vindication (see e.g. Ti 3:4ff). John the Baptizer expected a Messiah who would execute...

பாராட்டைப் பெறுவோம்

“பெண்ணிடம் பிறந்தவருள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்னும் பாராட்டை இயேசு வழங்குகிறார். அவரது இடத்தை நம்மில் யாரும் பெற முடியாது. ஆனால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற வேண்டும் என்பது இயேசு உணர்த்தும் பாடம். திருமுழுக்கு யோவானின் வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கினால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம். திருமுழுக்கு யோவான் ஒரு பாலை நில மனிதர். உடலும் உள்ளமும் உறுதி உடையவர். வசதியை தேடி வாழ்ந்தவர் அல்ல. அவர் பாலைவனக் குரல். ஒலித்துக்கொண்டும் எதிரொலித்துக்கொண்டும் இருப்பார். பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாதவர். உண்மையை உறக்க உறைப்பவர். அதே வேளையில் உண்மையை, எதார்த்தத்தை எளிய மனதோடு ஏற்றுக்கொள்ளும் மனத்தாழ்மை உடையவர். யோவானின் இந்த வாழ்க்கை, அவரது அதிரடி முழக்கம் அனைத்து மக்களையும் கவர்ந்தது.(லூக் 3’10-14) ஆகவே அவரைத் தேடி பாலைவனம் சென்றனர். இயேசுவும் அவரைத் தேடிச் சென்றார். அவரை இறைவாக்கினருள் மேலானவராகக் கண்டார். இறைவன் வரும் பாதையை ஆயத்தம்...

U R E. & J.

“Elijah is indeed coming, and he will restore everything.” –Matthew 17:11 Jesus said that Elijah would restore everything. What a statement! Everything? How could someone restore everything? Jesus said that the restoration of everything was begun by St. John the Baptizer (Mt 17:13), who came “in the spirit and power of Elijah” (Lk 1:17; cf Mt 11:13-14). The Power for this universal restoration is the Holy Spirit. Consequently, John was “filled with the Holy Spirit from his mother’s womb” (Lk 1:15). John began the restoration of everything by turning “the hearts of fathers to their children” (Lk 1:17). This universal...

சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!

மத்தேயு 17:9, 10-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும். 1. கற்பதில் சீர்திருத்தம் நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து...